வேட்டையன் விமர்சனம் 4.25/5.. குறி வெச்சா இரை விழும்

வேட்டையன் விமர்சனம் 4.25/5.. குறி வெச்சா இரை விழும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

 

 

வேட்டையன் விமர்சனம் 4.25/5.. குறி வெச்சா இரை விழும்

 

ஸ்டோரி…

ரஜினி என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்.. இவரது மனைவி மஞ்சு வாரியார்.

குற்றவாளிகளை என்கவுண்டர் செய்வதில் தமிழக காவல்துறையில் பிரபலம்.. இந்த நிலையில் இவருக்கு கன்னியாகுமரியில் இருந்து பள்ளி ஆசிரியை துஷாரா விஜயன் ஒரு கடிதம் எழுதுகிறார்.. அதில் எங்கள் பள்ளியில் கஞ்சா பொருட்களை ரவுடிகள் பதுக்கி வைக்கிறார்கள்.. எனவே நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் எழுதுகிறார்.

இதனையடுத்து போலீஸ் கிஷோர் மற்றும் ரித்திகா சிங் மற்றும் போலீஸ் இன்பார்மர் பகத் பாசில் உதவியுடன் அந்த ரவுடியை தேடி கண்டுபிடித்து என்கவுண்டர் செய்து விடுகிறார் ரஜினிகாந்த்..

ஆனால் அவர் ஒரு அப்பாவி நிரபராதி என மனித உரிமை ஆலோசகர் அமிதாப்பச்சன் ரஜினி மீது நடவடிக்கை எடுக்கிறார்.

அதன் பிறகு என்ன நடந்தது.? அவர் நிரபராதி என்றால் குற்றவாளி யார்.? இதன் பின்னணியில் நடந்தது என்ன.? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

சமீபகாலமாக ரஜினிகாந்த் தனக்கான கதைகளை தேர்ந்தெடுக்காமல் கதைக்காக தன்னை மாற்றிக் கொண்டார் என்னை என்றே சொல்லலாம்.. ஜெயிலரை தொடர்ந்து வேட்டையன் படத்திலும் அசத்தியிருக்கிறார்… ரஜினியின் காஸ்டியூம் கலக்கல்..

பெரிய பில்டப் & மாஸ் காட்சிகள் எதுவும் இல்லாமல் கேரக்டருக்கு ஏற்ப ஸ்டைலிஷ் லுக்கில் மாஸ் காட்டியிருக்கிறார்..

குறி வைச்சா இரை விழனும் என்று ரஜினி பஞ்ச் பேசும்போது தியேட்டரில் விசில் பறக்கிறது.. அதுபோல ரஜினி இன்ட்ரோ காட்சியில் சுருட்டுக்குள் இருந்து சூறாவளி கிளம்புவது போல அனல் பறக்கிறது.

பல நேரங்களில் ரஜினியே காமெடி செய்து இருக்கிறார்.. ஒரு காட்சியில்.. “சார் உங்க மனைவி கிட்ட சொல்லுங்க சார் என்று ரவுடி கெஞ்சும் போது.. டேய் முட்டாள்.. எந்த பொண்டாட்டி டா கணவர் பேச்சை கேக்குறாங்க.. என ரஜினி கிண்டல் அடிப்பது சூப்பர்..

ரஜினியை கேள்வி கேட்கும் உயர் அதிகாரியாக அமிதாப்பச்சன்.. இவருக்கு ட்ரைலரில் டப்பிங் கொடுத்திருந்த பிரகாஷ்ராஜ் குரலை நல்ல வேலையாக நீக்கி விட்டார்கள்.. இந்த குரல் பொருத்தம்..

ராணா டகுபதி கொஞ்ச நேரமே வந்தாலும் ஸ்டைலிஷ் லுக் வில்லன்..

இதில் காமெடி இல்லையே சீரியஸ் ஆக இருக்கே என நினைக்கையில் பகத் பாசில் கேரக்டர் பளிச்சிடுகிறது.. இவரை டீ கொடுக்கும் பையனாக விட்டுவிட்டார்களே என நினைக்கையில் அதன் பிறகு அவரது கேரக்டரில் வரும் டூவிஸ்ட் செம… ரித்திகாவை கிண்டல் அடிப்பது துஷாராவிடம் கடலை போடுவது என ரசிக்க வைத்திருக்கிறார்..

கம்பீரமான போலீஸ் அதிகாரியாக ரித்திகா.. படம் முழுக்க ரஜினியுடன் வந்து கவனம் பெறுகிறார்.. ரித்திகாவுக்கும் பகத்துக்கும் உள்ள சீன்ஸ் ஜாலி ரகம்..

துஷாரா விஜயன் சீன்ஸ் உடனே முடிந்து விட்டதே என நாம் நினைக்கையில் படத்தின் முழுக்கதையும் அவரை சுற்றியே நடக்கிறது.. தூள் கிளப்பி இருக்கிறார் துஷாரா.. வில்லனிடம் தலையில் அடிபட்டு கண் சொருகி விழும் காட்சி நடிப்புக்கு உதாரணம்..

அழகான மனைவியாக அன்பான துணைவியாக மஞ்சு வாரியார் மயக்க வைக்கிறார்.. பெற்றோர்கள் செய்யும் பாவம் குழந்தையை பாதிக்கும் என்பதால் இவர் குழந்தை கூட பெற்றுக் கொள்ளாமல் இருப்பது சென்டிமென்ட் ரகம்.. இவர்களின் உறவினராக டிவி நடிகர் ரக்ஷன்.. துள்ளல் கேரக்டரில் கவனம் பெறுகிறார்..

எவரும் எதிர்பாராத கேரக்டரில் அபிராமி அழகாகவும் ஸ்டைலிஷ் ஆகவும் அசத்தல் அபி.. முஸ்லீம் பெண்ணாக ரோகினியும் கவர்கிறார்..

டெக்னீசியன்ஸ்…

மனித உரிமை செயல்பாடுகள் மற்றும் அதன் நடவடிக்கைகளை மிகத்துல்லியமாக கையாண்டு இருக்கிறார் இயக்குனர் ஞானவேல்.. அதற்கு அமிதாப்பச்சன் என்ற மிகப்பெரிய ஆளுமையை பொருத்தி இருப்பது சிறப்பு.

‘ஜெய்பீம்’ படத்தில் போலீஸ் விசாரணை வழக்கறிஞர் வாதம் மையப்படுத்தி எடுத்திருந்த ஞானவேல் இந்த படத்தில் முழுக்க முழுக்க என்கவுண்டரை மையப்படுத்தி திரைக்கதை அமைத்திருக்கிறார்.. அதில் ரஜினிகாந்த் அமிதாப்பச்சன் ஆகிய மிகப்பெரிய ஜாம்பவான்களை பக்காவாக பொருத்தி இருக்கிறார்.

ரஜினிக்காக கூடுதல் மெனக்கட்டு பின்னணி இசையை தெறிக்க விட்டுள்ளார் அனிருத்.. மனசிலாயோ பாட்டு பட்டையை கிளப்பி இருக்கிறது.. அதற்கு ரஜினி மஞ்சுவாரியாரும் போடும் ஆட்டமும் ரசிக்க வைக்கிறது செம.. கூடவே அனிருத் ஆட்டமும் அசத்தல்..

அதுபோல Generation Rajination சூப்பர் ஸ்டார் சாங் ரசிகர்களின் தேசிய கீதமாக மாறினாலும் ஆச்சரியம் இல்லை.

பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.. படத்தில் நீளம் 163 நிமிடங்கள் என்றாலும் எங்கும் போர் அடிக்காமல் படத்தை நகர்த்திருப்பது சிறப்பு..

எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் கன்னியாகுமரி.. இவரது கை வண்ணத்தில் கண்கொள்ளாக் காட்சி.. கடலில் என்கவுண்டர் செய்யும் காட்சி ராணா ஹெலிகாப்டர் பறக்கும் காட்சி என அனைத்தையும் விருந்தாக அமைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கதிர்.

படத்தின் வசனங்களும் ஆங்காங்கே கவர்க்கின்றன.. முக்கியமாக போலீஸ் 4 வகைப்படும் என பகத் கூறும் போது நேர்மைக்கு போலீஸ் திறமைக்கு போலீஸ் என வேறுபடுத்தி காட்டி காட்டி இருப்பது ஹைலைட்..

பணக்கார திருட மாட்டான்.. சேரி பசங்க திருடுவாங்க.. வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்.. என்னய்யா இதெல்லாம் என்ற ரஜினி போலீஸ் கேள்வி கேட்பது நெத்தியடி..

ரஜினி ரசிகர்களை மட்டும் குறி வைக்காமல் அனைத்து மக்களுக்கும் பிடிக்கும் படமாக கொடுத்திருக்கிறார் ஞானவேல்.. அதிலும் போலீஸ் என்கவுண்டர் செய்வது சாதாரணமல்ல.. பலருக்கு பதில் சொல்லியாக வேண்டும்.. மனித உரிமை கமிஷன், நீதிமன்றம் & மக்களுக்கும் பதில் அளிக்க வேண்டும் என்பதையும் காட்சிப்படுத்தி இருக்கிறார்.

அரசு பள்ளி கல்வியை பயன்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்யும் சதி திட்டத்தையும் அம்பலப்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ஞானவேல்.

ஆக வேட்டையன்.. தலைவர் குறி வச்சா தப்பாது

Rajinikanths Vettaiyan movie review

 

 

தோழர் சேகுவாரா திரை விமர்சனம்

தோழர் சேகுவாரா திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தோழர் சேகுவாரா திரை விமர்சனம்

தோழர் சேகுவாரா படத்தை நெப்போலியனின் எழுச்சி.. நெப்போலியன் புரட்சி என இரண்டு பாகங்களாக எடுத்திருக்கிறார்.. தற்போது நெப்போலியன் எழுச்சி என்பது மட்டுமே முதல் பாகமாக வெளியாகி இருக்கிறது

ஸ்டோரி…

ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நாயகன் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறார்.. ஆனால் அதற்கு பல எதிர்ப்புகள் வந்த நிலையிலும் தடைகளைத் தாண்டி கல்லூரியில் சேர்கிறார்.

அதே கல்லூரியில் படிக்கும் வில்லனுக்கும் இவருக்கும் அடிக்கடி மோதல் வலுக்கிறது.
இந்த கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிகிறார் சத்யராஜ்.

இந்த சூழ்நிலையில் கல்லூரி கேண்டினில் பணி புரியும் ஒரு பெண்ணை அவமானப்படுத்தி விடுகிறார் வில்லன்.. இதனை அடுத்து நாயகன் அவரை அடித்து துவைத்து விடுகிறார்.

பலர் முன்னே தன்னை அவமானப்படுத்திய நாயகனை தீர்த்து கட்ட முடிவு எடுக்கிறார் வில்லன்..

அதன் பின்னர் என்ன நடந்தது?இருவருக்குமான மோதல் தீர்வுக்கு வந்ததா? என்பது மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

இதில் சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன், நாஞ்சில் சம்பத், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இவர்கள் நட்சத்திர அடையாளத்திற்காக படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.. கூல் சுரேஷ் வில்லத்தனம் செய்திருப்பது அவரது கேரக்டருக்கும் படத்திற்கும் புதுசு..

இவர்களோடு படத்தின் இயக்குநர் அலெக்ஸ் மற்றும் தயாரிப்பாளர் அனிஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.. இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நாயகன் வில்லன் என தங்கள் கேரக்டர்களில் ஸ்கோர் செய்ய முயற்சித்துள்ளனர்..

வில்லனைப் பார்த்தால் நமக்கே பல இடங்களில் எரிச்சல் வருகிறது.. சாந்தமான நாயகன் பல இடங்களில் சரவெடியாய் வெடித்திருக்கிறார்..

டெக்னீசியன்ஸ் …

பிஎஸ் அஸ்வின் இசையமைத்திருக்கும் இப்படத்தை அனிஷ் எட்மண்ட் பிரபு தயாரித்துள்ளார்… உலகப் புகழ் பெற்ற புரட்சியாளர் ‘தோழர் சேகுவாரா’ பெயரில் இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கிறது..

சிறு வயது முதலே தோழர் சேகுவாரா மீது அதிக பற்று கொண்டவர் நாயகன்.. அவர் படத்தை ஒரு சுவற்றில் வரைந்து கொண்டிருக்கும்போது சாதிய மோதல் வெடிக்கிறது.. இதனை வைத்து படத்தை நகர்த்தி இருப்பது சிறப்பு

SC / ST என எந்த இனத்தவராக இருந்தாலும் தடைகளை உடைத்து எறிந்து வந்தால் மட்டுமே தரணியில் வாழ முடியும் என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

தோழர் சேகுவாரா.. புரட்சியாளர் என தலைப்பு வைத்து விட்டதுனால என்னவோ படம் முழுக்க ரத்தம் தெரிக்கிறது.. வன்முறையை கொஞ்சம் குறைத்து இருக்கலாம்..

Thozhar Che Guevara movie review

GOAT தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் விமர்சனம் 3.25/5

GOAT தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் விமர்சனம் 3.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GOAT தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் விமர்சனம் 3.25/5

சென்சார் – (U/A)

Running Time:
1’st Half -1 Hr- 28 Mins
2’nd Half. -1 Hr 34 Mins

ஸ்டோரி…

விஜய்யின் மனைவி சினேகா.. பிரசாந்த் மனைவி லைலா..

விஜய் பிரசாந்த் பிரபுதேவா அஜய் இவர்களின் நால்வரும் ஜெயராம் தலைமையில் கீழ் ஆன்டி டெரரிசம் ஸ்குவாட் ஆக பணி புரிகின்றனர்.

ஒரு கட்டத்தில் தீவிரவாதி மோகனுடன் மோதும் போது அவர் குடும்பத்தை கொன்று விடுகிறார்கள் இவர்கள்.. இதனை எடுத்து வில்லன் மோகன் இவர்களை பழிவாங்க திட்டம் போடுகிறார்.

இதனை எடுத்து மற்றொரு கலவர சமயத்தின் போது தன் நான்கு வயது மகனை தொலைத்து விடுகிறார் விஜய்.. இதனால் விஜய்யுடன் பேசாமல் தனியாக தன் மகளுடன் வசித்து வருகிறார் சினேகா..

அதன் பிறகு என்ன நடந்தது? மகனை கடத்தியவர் யார்.? விஜய் சினேகா மீண்டும் இணைந்தார்களா.? காணாமல் போன மகன் கிடைத்தாரா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

விஜய்,
பிரசாந்த்,
பிரபுதேவா,
சினேகா,
லைலா,
மோஹன்,
ஜெயராம்,
யோகிபாபு,
மீனாக்ஷி சௌத்ரி..

சமீப காலமாக வெளியான விஜய்யின் வாரிசு மற்றும் லியோ படங்களில் அப்பனை எதிர்த்து மல்லுக்கட்டி நிற்பார் மகன்.. அதில் அப்பாக்கள் வேறு.. ஆனால் கோட் படத்தில் அப்பாவும் மகனும் விஜய்..

அப்பா நல்லவர் மகன் கெட்டவர்.. கடைசியில் என்ன ஆகும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.. உங்களுக்கு இந்தியன் ஜெயிலர் படங்கள் நினைவுக்கு வந்தால் நாங்கள் பொறுப்பல்ல..

விஜய் ரசிகர்களை கவரும் வகையில் பாட்டு ஃபைட் ரொமான்ஸ் ப்ரெண்ட்ஷிப் என அனைத்தையும் வைத்து ரசிகர்களை கவர்ந்து விட்டார் இயக்குனர்

சினேகா லைலா மீனாக்ஷி மூன்று நாயகிகள் இருந்தாலும் இதில் சினேகா அதிகம் கவர்ந்து விடுகிறார்.. முக்கியமாக விஜய் பொய் சொன்ன பின்னர் பிரசாந்த் மற்றும் பிரபுதேவாவுக்கு போன் போட்டு சினேகா பேசும் காட்சி நண்பர்களின் நட்பை ரசிக்க வைக்கிறது..

அந்தகனில் அசத்திய பிரசாந்த் இதில் நண்பனாக ஜொலிக்கிறார். பாசமிக்க தந்தையாக நெகிழ வைத்து விட்டார்.. சூப்பர் ப்ரோ..

பிரபுதேவா கேரக்டர் எதிர்பாராத ட்விஸ்ட் வைத்திருக்கிறார்.. ஆனால் நம்பும் படியாக இல்லை.. நல்ல வேலை அவருக்கு ஜோடி இல்லை..

ஹரா படத்தில் ரீஎண்ட்ரி கொடுத்த மோகன் இதில் வில்லனாக மிரட்டி இருக்கிறார்.. மகன் விஜய் வில்லன் என்பதால் மோகனின் கேரக்டர் கொஞ்சம் டல் அடிக்கிறது.. ஆனால் அவரது கெட்டப் ரசிக்க வைக்கிறது.. மோகன் சீனியர் ஆக்டர் என்பதால் விஜய் அடிப்பதாக சீன்கள் இல்லை போல..

ஜெயராம் வழக்கப் போல அனுபவ நடிப்பில் ஜொலிக்கிறார்.. கலகலப்புக்காக யோகி பாபு கேரக்டர் இணைக்கப்பட்டாலும் கதையுடன் கூடிய காமெடி சூப்பர்.. முக்கியமாக காந்தி நேரு சுபாஷ் சந்திர போஸ் பெயர்கள் இடம் பெறும் போது…”நாம டைம் டிராவல் பண்ணி சுதந்திர காலத்திற்கு போயிட்டோமோ? என யோகி பாபு கேட்க்கும் காட்சி சிரிப்பலை..

இவர்களுடன்…

V.T. V. கணேஷ்,
பிரேம் ஜி,
அஜ்மல்,
வைபவ்,
அஜய் ராஜ்,
அர்விந்த் ஆகாஷ்

வெங்கட் பிரபு படங்கள் என்றால் பிரேம்ஜி அரவிந்த் வைபவ் இவர்கள் இல்லாமல் இருப்பார்களா.? இவர்களுக்கும் சின்ன சின்ன வேடங்கள் கொடுத்து கதையை நீட்டி படத்தை ஓட்டி இருக்கிறார்..

சிறப்பு தோற்றங்கள்…

கேப்டன் விஜயாந்த் (AI)
த்ரிஷா
சிவகார்த்திகேயன்
மகேந்திர சிங் தோனி

ஆகியோருக்கு கெஸ்ட் ரோல் கொடுத்து படத்தை இன்னும் கலகலப்பு ஆக்கியிருக்கிறார் இயக்குனர்..

இதன் மூலம் அரசியலில் விஜயகாந்த் விட்டு சென்ற இடத்தை விஜய் நிரப்புவார் என்றும் சினிமாவில் விஜய் விட்டு செல்லும் இடத்தை சிவகார்த்திகேயன் நிரப்புவார் எனவும் சொல்லாமல் சொல்லி இருக்கிறார் வெங்கட் பிரபு..

டெக்னீசியன்ஸ்…

AGS ENTERTAINMENT
வழங்கும்,

தயாரிப்பாளர்கள்…
கல்பாத்தி S. அகோரம்,
கல்பாத்தி S. கணேஷ்,
கல்பாத்தி S. சுரேஷ்
தயாரிப்பில்…

ஒளிப்பதிவாளர் : சித்தார்தா நோனி

படத்தொகுப்பாளர் : வெங்கட் ராஜன்

கலை இயக்குனர் : ராஜீவன்

படத்தின் ஒளிப்பதிவாளர் எடிட்டர் ஆர்ட் டைரக்டர் மூவரையும் பாராட்டலாம்.. போர் அடிக்காமல் படத்தை நகர்த்தி இருக்கின்றனர்..

இயக்குனர் : வெங்கட் பிரபு

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பல படங்களில் நாம் பார்த்த கதை தான்.. மகனை வைத்து அப்பனையே எதிர்க்கும் வில்லன்.. தந்தையுடன் மோதும் மகன் இப்படி பார்த்த பழக்கப்பட்ட கதையை நவீன தொழில்நுட்பமான ஏ ஐ டெக்னாலஜியுடன் இந்தப் படத்தை ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.. அவருக்கு பக்கபலமாக தன் மிரட்டி பின்னணி இசையால் மிரட்டி தெறிக்க விட்டுள்ளார் யுவன் சங்கர் ராஜா.. ஆனால் பாடல்களில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்..

வெங்கட் பிரபு & யுவன் இணைந்தால் கிரிக்கெட்டில் இல்லாமல் இருக்குமா கிரிக்கெட்டையும் கொண்டு வந்து அந்த விளையாட்டு சமயத்தில் தோனி சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரையும் கொண்டு வந்து படத்திற்கு கமர்சியல் வேல்யூ ஏற்றி இருக்கிறார் வெங்கட் பிரபு.

முக்கியமாக சிவகார்த்திகேயன் வரும் காட்சியில்.. சிவா இனிமே இது நீங்க பார்த்துக்குங்க என விஜய் சொல்லும்போது.. “உங்களுக்கு வேற வேலை இருக்கு.. நீங்க அத பாருங்க நான் இதை பார்த்துக்கிறேன் என்று சிவா சொல்லும் போது அரசியலையும் சினிமாவையும் இணைப்பதாகவே ரசிகர்களால் யூகிக்கப்படுகிறது..

யுவன் இசையில் விஜய் பிரசாந்த் பிரபுதேவா அஜய் இணைந்து போடும் ஆட்டம் வேற லெவல் ரகம்… ஒரு காட்சியில் நீ சின்ன வயதிலேயே ஓவர் ஆக்டிங் என பிரசாந்தை கலாய்த்து விட்டார் விஜய்..

அரசியலுக்கு போகிறேன் இனிமேல் எனக்கு எல்லா ரசிகர்களும் ஆதரவு தேவை என விஜய் நினைத்தாரா அல்லது வெங்கட் பிரபு அந்த சீன்களை வைத்தாரா தெரியவில்லை??!! இளையராஜா ரஜினி விஜயகாந்த் கமல் சாங்ஸ்.. அஜித் தீம் மியூசிக் என அனைத்தையும் வைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார்..

மெட்ரோ ட்ரெயின் காட்சியில் மெட்ரோ ட்ராக்கில் பைக் ஓட்டுவது.. மெட்ரோ ட்ரெயின் உடைத்துக் பைக் உள்ளே செல்வது.. ரயில் மீது ஹெலிகாப்டர் நிற்பது.. நம்ப முடியாத லாஜிக் மீறல்கள் இருந்தாலும் நம்பும்படியாக மேக்கிங் கொடுத்திருப்பது சிறப்பு..

ஆக விஜய்யுடன் இணைந்து லாஜிக் இல்லா மேஜிக் செய்திருக்கிறார் வெங்கட் பிரபு..

Vijays Goat movie review

விருந்து விமர்சனம் 3.5/5.. நரபலி நரகம்

விருந்து விமர்சனம் 3.5/5.. நரபலி நரகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விருந்து விமர்சனம் 3.5/5.. நரபலி நரகம்

ஸ்டோரி…

படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தொழில் அதிபர் மலையாள நடிகர் முகேஷ் கொல்லப்படுகிறார்.. அடுத்த சில நிமிடங்களிலேயே அவரது மனைவியும் கொல்லப்படுகிறார்.

இந்தக் கொலைக்கான காரணம் தன் (அம்மாவின் முன்னாள் லவ்வர்) அர்ஜுன் என சந்தேகிக்கிறார் நிக்கி கல்ராணி.. அவரை கொலை செய்யவும் திட்டமிடுகிறார்.

அர்ஜுனுக்கும் இவர்கள் குடும்பத்திற்கும் என்ன சம்பந்தம்..? இவர்களது பின்னணி என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

சமீபகாலமாக வில்லன் வேடங்களில் நடித்து வரும் அர்ஜுன் இதில் முழுக்க முழுக்க ஆக்சன் நாயகனாக வலம் வருகிறார்.. விருந்து திரைக்கதையில் தனக்கு ரொமான்ஸ் இல்லை ஜோடி இல்லை என்பதை உணர்ந்து ஆக்ஷனில் அதிக மெனக்கெட்டு பட்டையை கிளப்பி இருக்கிறார்.

நிக்கி கல்ராணி தன் கேரக்டரை நிறைவாக செய்து இருக்கிறார்.. மலையாள நடிகர் முகேஷ் மற்றும் அவரது மனைவி தங்கள் கேரக்டர்களில் பணக்காரத்தனத்தை காட்டி இருக்கின்றனர்..

பாலண்ணா கேரக்டரில் வருபவர் அடிதடியிலும் தூள் கிளப்பி இருக்கிறார்.. இவர்தான் கொலைக்கான காரணமோ என எண்ணும் வகையில் தனது முகபாவனைகளையும் காட்டி இருக்கிறார்.

ஹரிஷ் பெராடியின் முகம் ஃபோட்டோவில் மட்டுமே இருந்தது.. எனவே இவர் கெஸ்ட் ரோல் என நினைத்தால் திடீரென கிளைமாக்ஷில் அதிரடி காட்டி இருக்கிறார்

மற்றும் ஆட்டோ டிரைவர் பிளாஷ்பேக் காட்சிகள் ரசிக்க வைக்கிறது..

டெக்னீசியன்ஸ்…

ரதீஷ் வேகாவின் பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது.. அதிலும் முக்கியமாக அர்ஜுன் இன்ட்ரோ சீன் தீம் மியூசிக் அருமை..

ரஃபீக் அகமது, ஹரி நாராயண், மோகன் ராஜன் ஆகியோரது வரிகளில் பாடல்கள் பெரிதாக கவரவில்லை என்றாலும் ஓகே ரதம் தான்..

ஓகே.. ஆக்ஷன் காட்சிகளுக்கு ஏற்ற பின்னணி இசையை கொடுத்திருப்பது படத்தின் உயிரோட்டத்திற்கு உதவியிருக்கிறது..

ரவிச்சந்திரன் மற்றும் பிரதீப் நாயரின் ஒளிப்பதிவில் காட்சிகள் வியக்கவும் ரசிக்கவும் வைக்கிறது.. கலை இயக்குனர் கைவண்ணத்தில் அர்ஜுன் வசிக்கும் வீடும் அந்த வீட்டில் வைக்கப்பட்ட அலங்கார பொருட்களும் ரசிக்க வைக்கிறது…. அதுபோல தொழில் அதிபர் முகேஷ் வீட்டில் பிரம்மாண்டத்தை காட்டியிருக்கிறார் ஆர்ட் டைரக்டர்.. அதற்கு ஏற்ப லைட்டிங்கும் கொடுத்திருப்பது சிறப்பு..

மலையாள இயக்குனர் தாமரக்கண்ணன் என்பவர் இயக்கி இருக்கிறார்.. மலையாள படம் என்றாலும் தமிழுக்கு ஏற்றவாறு திரைக்கதை அமைத்து அதற்கு ஏற்ப காட்சிகளை அமைத்திருப்பது ரசிக்க வைக்கிறது..

முதலில் ஆக்சன் திரில்லர் என செல்லும் திரைக்கதை இடைவேளைக்கு பின்னரும் அதே வேகத்தில் விறுவிறுப்பாக பயணிக்கிறது.. ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் திடீரென படத்தில் பெரிய திருப்புமுனை ஏற்படுத்தியிருக்கிறார்.

அதாவது விருந்து என்ற தலைப்புக்கு ஏற்றவாறு நரபலி கொடுக்கும் காட்சிகளை வைத்திருக்கிறார். நரபலி என்பது படிக்காதவர்கள் மட்டுமல்ல படித்தவர்களும் பணக்காரர்களும் செய்கிறார்கள்.. தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள அவர்கள் எடுக்கும் முயற்சிதான் நரபலி என்று தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் நடைபெற்ற சம்பவங்களை தொகுத்து இருக்கிறார்..

கிளைமாக்ஸ் காட்சியில் நரபலி கொடுக்கும் சாத்தான் கூட்டங்களை காட்டி அதற்கு தலைவனாக ஹரிஷ் பெராடியை காட்டியிருக்கிறார்..

நரபலி என்ற கொடூரத்தை இயக்குனர் காட்டி இருந்தாலும் அதில் பெரிய லாஜிக் இடிக்கிறது.. தன் குடும்பத்தை தனது வாரிசுகளை சர்வாதிகாரியாக வளர்ச்சி மிகுந்தவர்களாக காட்ட ஹரிஷ் போராடுகிறார்.. அப்படி என்றால் அவர் தனது குடும்பத்தை அழிப்பது எந்த விதத்தில் நியாயம்.?

கிளைமாக்ஸ் காட்சியில் அர்ஜுன் பேசும் நரபலி வசனங்கள் கைதட்ட வைக்கிறது.. ஆனால் அதுவும் கொஞ்சம் செயற்கை தனம் கலந்தே இருக்கிறது.

ஆக இந்த விருந்து.. நரபலி நரகம்

Arjuns Virundhu movie review

——–

‘உழைப்பாளர் தினம்’ விமர்சனம் 3/5.. பணத்தை விட வாழ்வே முக்கியம்

‘உழைப்பாளர் தினம்’ விமர்சனம் 3/5.. பணத்தை விட வாழ்வே முக்கியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘உழைப்பாளர் தினம்’ விமர்சனம் 3/5.. பணத்தை விட வாழ்வே முக்கியம்

ஸ்டோரி…

தன் குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக சிங்கப்பூர் சென்று சம்பாதிக்கிறார் சந்தோஷ நம்பிராஜன்.. இங்கு ஒரு மளிகை ஸ்டோர் வைக்க வேண்டும்.. அதற்கு ஒரு கடை கட்ட வேண்டும்.. அதற்குப் பிறகுதான் கல்யாணம் என முடிவெடுத்து சிங்கப்பூரிலேயே கடுமையாக உழைத்து வருகிறார்..

அவரின் சக நண்பர்களோ.. தலைமுடி கொட்டிக் கொண்டே இருக்கிறது.. வயது ஏறிக்கொண்டே இருக்கிறது.. உடனே திருமணம் செய்து கொள் என அட்வைஸ் செய்கின்றனர்.. ஆனாலும் கடை கட்டிய பிறகு திருமணம் என உறுதியான முடிவில் இருக்கிறார்..

இந்த சூழ்நிலையில் அவருக்கு திடீர் என திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.. வேறு வழி இல்லாமல் திருமணமும் செய்து கொள்கிறார்.. திருமணம் முடிந்து இரண்டு வாரங்களிலேயே மனைவியை பிரிய வேண்டிய சூழ்நிலை..

வீட்டில் குடிகார அண்ணன் வேற இருப்பதால் குடும்ப வறுமை அதிகரிக்க வேறு வழியில்லாமல் மீண்டும் சிங்கப்பூர் செல்கிறார்… நீங்கள் என் பிரசவத்திற்கு கண்டிப்பாக வரவேண்டும் என நாயகி குஷி அன்பு கட்டளையிடுகிறார்.

அதன் பிறகு என்ன நடந்தது.? அவர் நினைத்தபடி கடையை கட்டி முடித்தாரா?கடன்களை அடைத்தாரா? மனைவியின் பிரசவத்திற்கு வந்தாரா? என்பதெல்லாம் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

சந்தோஷ் நம்பிராஜன், குஷி, அன்புராணி, கார்த்திக்சிவன், சிங்கப்பூர் துரைராஜ், இயக்குனர் சம்பத்குமார் மற்றும் பலர்.

தன் மீதும் கதையின் மீது நம்பிக்கை வைத்து படத்தை தயாரித்து இயக்கி நாயகனாக நடித்திருக்கிறார் நாயகன் சந்தோஷ் நம்பிராஜன்.. எங்கும் சினிமாத்தனம் இல்லாமல் நம் வீட்டு நபராகவே தெரிகிறார் நாயகன் சந்தோஷ்.

ஒவ்வொரு முறையும் இந்தியாவில் நம் குடும்பத்துடன் வாழ வேண்டும் என திரும்பும் இந்தியர்கள் மீண்டும் கடன் தொல்லையால் வெளிநாட்டுக்கு ஓடும் காட்சிகளில் ரசிக்கவும் கலங்கவும் வைக்கிறார்.

வெளிநாட்டில் சம்பாதித்து விட்டு இந்தியாவில் நமக்கு ஒரு பிரச்சினை எனும் போது இங்கு உள்ள அரசியல்வாதிகளால் எப்படி அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பதையும் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.. அந்த இடைவெளியில் கட்சிக் கொள்கை கேட்டால் தலை சுத்திடுச்சு ஒருவர் சொல்கிறார் மற்றொருவர் கட்சிக் கொள்கை ரகசியம் என்கிறார் என ரஜினி விஜய்யை கிண்டல் அடித்திருக்கிறார் இயக்குனர்..

நாயகியாக குஷி.. பெண் பார்க்கும் காட்சியில் நாயகனை கிண்டல் அடிப்பதும் திருமணத்திற்குப் பிறகு இருவருக்குமான ரொமான்டிக் சீன்ஸ் அசத்தல்.. முக்கியமாக சினுங்கி சினுங்கி பேசும் காட்சிகள் செம.. அதுபோல விடிய விடிய பேச பிளாஸ்க் காபி எனும் ரொமான்டிக் வார்த்தை சூப்பர்..

சிங்கப்பூரில் உடன் வேலை பார்க்கும் சக ஊழியர்களின் நிலை.. அவர்களின் குடும்ப சூழ்நிலை.. வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் பெண்களின் குடும்பம் அவர்களின் குழந்தை என அனைத்தையும் உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்..

மேலும் நாயகனின் அம்மா அப்பா அண்ணன் அண்ணி மாமா நண்பர்கள் அனைவரும் பங்களிப்பும் படத்திற்கு பெரிதும் உதவி உள்ளது..

டெக்னீசியன்ஸ்…

இசை: மசூத் ஷம்ஷா

பாடல்கள்: சிங்கை சுந்தர், கனியன் செல்வராஜ்

ஒளிப்பதிவு: சதீஸ் துரைகண்ணு

எடிட்டிங்: கோட்டிஸ்வரன்

தயாரிப்பு: சிங்காவுட் புரொடக்‌ஷன், நம்பிராஜன் இண்டர்நேஷனல் சினிமாஸ்
ராக் எண்டர்டெயின்மெண்ட்ஸ்.

தயாரிப்பாளர்கள்: ராஜேந்திரன் கார்த்திக்சிவன், சிங்கப்பூர் துரைராஜ், பிரேம்சந்த் நம்பிராஜன், ராஜேந்திரன் நீதிபாண்டி, கஜா, சரஸ்

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் என பல படங்கள் பார்த்து இருந்தாலும் இந்த படத்தில் உணர்வுப்பூர்வமாக எதார்த்தமாக திரைக்கதை அமைத்து ஒரு படைப்பை கொடுத்திருக்கிறார் சந்தோஷ நம்பிராஜன்.

படத்தில் சில காட்சிகளில் உதட்டில் வசனங்கள் ஒட்டவில்லை.. பட்ஜெட் படம் என்றாலும் மெனக்கெட்டு இருக்கலாம்..

நிச்சயம் இந்த படத்தை பார்த்தால் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் உடனே இந்தியாவுக்கு வரவேண்டும் தன் குடும்பத்துடன் வாழ வேண்டும் என நினைப்பார்கள்.. அதுபோல தன் கணவனையோ தன் சகோதரனையோ தன் மகனையோ வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கும் ஒவ்வொரு குடும்பத்தாரின் மனதிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

பாடல்களைப் பொறுத்தவரை…

அழகான சிங்கப்பூரூ.. மனசெல்லாம் தங்கம் பாரு … பாட்டு ஓகே.. ஆனா ராகம் இடிக்கிறது.. வரிகளுக்கு மெட்டு போட்டாரா மெட்டுக்கு வரி அமைத்தாரா என்பது இசையமைப்பாளருக்கு வெளிச்சம்

வாழ்வே வாழ்வே பாட்டு.. & தீரா காதலே நீதான் என் தேடலே… ஆகிய பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறது.. ஆனால் அனைத்து பாடல்களுமே ஒரே மாதிரியாக இருப்பதை இயக்குனர் கவனித்தாரா??

பல இடங்களில் வசனங்கள் நம் கண்களில் கண்ணீரை வர வைக்கும்..

வெளிநாட்டிற்கு வேலை தேடி செல்வோருக்கு பணம் முக்கியம் ஆனால் அதைவிட வாழ்க்கை முக்கியம். என வெளிநாட்டிலே வாழ்ந்து வாழ்க்கையை தொலைத்த ஒரு இந்தியர் சொல்லும்போது நம் மனம் ரணமாகும்..

ஆசை ஆசையாக தங்க நகைகளை வாங்கிக் கொண்டு இந்தியாவிற்கு பரிட்டன் வரும்போது. கஸ்டம்ஸ் சேர்த்து சாம்பாதிக்க வேணும்ல என்ற வசனம் வரும்.. நம் உறவுகளிடம் தங்க நகை கேட்கும் உறவுகளுக்கு இந்த வசனம் சாட்டையடி..

ஹீரோ அண்ணன் பைட் சீன்.. எடிட்டிங் மோசம்.. அண்ணன் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது தம்பியின் வண்டி வந்துவிடும் ஆனாலும் காட்சிகள் நகர்ந்து கொண்டே இருக்கும் மீண்டும் தம்பி வருவதாக காட்சி காட்டப்படுவதை எடிட்டர் கவனிக்கவில்லையா..??

திருமணம் ஆகி 14 நாட்களில் சிங்கப்பூருக்கு செல்ல வேண்டும் என்ற நிலையில் ஒவ்வொரு நாளையும் எண்ணிக் கொண்டு கணவன் மனைவி குடும்பம் நடத்தும் அந்த ஒரு காட்சி பரிதவிப்பை உண்டாக்குகிறது..

Uzhaippalar Thinam movie review

செம்பியன் மாதேவி விமர்சனம்… சா-தீ-யிலும் சாயாத காதல்

செம்பியன் மாதேவி விமர்சனம்… சா-தீ-யிலும் சாயாத காதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செம்பியன் மாதேவி விமர்சனம்… சா-தீ-யிலும் சாயாத காதல்

8 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், லோக பத்மநாபன் எழுதி இயக்கி இசையமைத்து நாயகனாக நடித்திருக்கும் படம் ‘செம்பியன் மாதேவி’.

ஸ்டோரி…

செம்பியன் என்ற கிராமத்தில் 2004 ஆம் ஆண்டின் கதை.. படத்தில் நாயகன் வீரா.. நாயகி மாதேவி..

மாடு முட்டி என்பவருக்கு முருகேசன் என்ற மகனும் என்ற மகளும் உள்ளனர்.. இதில் முருகேசனை சில மர்ம நபர்கள் வெட்டிக்கொள்கின்றனர்.

இதன் காரணமாக தெரியாமல் அலையும் மாடு முட்டி தன்னுடைய ஒரே மகளுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இவர் வேலை செய்யும் கோழி பண்ணை முதலாளி மகன் இவரது மகளை காதலிக்கிறார்.. இந்த விவரங்கள் எல்லாம் இவருக்கு தெரியாது.

இந்த சூழ்நிலையில் நாயகன் உயர்சாதி என்பதால் முதலில் காதலை ஏற்க மறுக்கிறார் நாயகி.. ஆனால் நாட்கள் செல்ல செல்ல மெல்ல மெல்ல இவரும் காதலிக்கிறார்.

ஒரு கட்டத்தில் நாயகனால் நாயகி கர்ப்பமாகிறார்.. எனவே தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துகிறாள் நாயகி.. ஆனால் இப்போது திருமணம் வேண்டாம் என தள்ளிப் போடுகிறான் நாயகன்..

அதன் பிறகு என்ன நடந்தது.? நாயகி என்ன செய்தார்.? நாயகன் திருமணம் செய்ய மறுப்பது ஏன்.? இவர்களின் காதல் விவரம் தெரிந்த உயர் சாதி என்ன செய்தனர்? என்பது மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

இந்த படத்தை தயாரித்து இசையமைத்து நாயகனாக நடித்திருக்கிறார் லோகு பத்மநாபன்.. கிராமத்து இளைஞனாக கவர்கிறார்.. கொஞ்சம் மேக்கப் போட்டு நடித்திருக்கலாம்..

நாயகி அம்சரேகா இவரது அறிமுகக் காட்சி அசத்தல்.. சில காட்சிகளில் ஒப்பனை போதவில்லை.. அண்ணனை இழந்து விட்ட தன் குடும்பத்திற்காக தன் தந்தைக்காக முதலில் காதலை ஒதுக்கும் சராசரி பெண்ணாக இவர் உயர்ந்து நிற்கிறார்.. கிளைமாக்ஸ் காட்சியில் நடக்கும் கற்பழிப்பு பலரது மனதை கலங்கடிக்கும்..

மற்றொரு நாயகி கண்ணகியாக நடித்திருக்கும் ரெஜினா.. இவரது கேரக்டர் படத்தில் ஒரு திருப்புமுனை.. விளையாட்டாக செய்த காரியம் வினையானது என்பதை இவரது கேரக்டர் பல பெண்களுக்கு உணர்த்தும்..

மணிமாறன் இந்த படத்தில் ஜாதி கட்சி தலைவராக மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார்…

அதுபோல முருகேசன் கேரக்டர் மற்றும் மாடு முட்டி கேரக்டர் ஆகியவை கவனம் பெறுகின்றன..

மற்றவர்கள் கிராமத்து மனிதர்களாக இயல்பான நடிப்பை கொடுத்துள்ளனர்..

ஜெய்பீம் படத்தில் நடித்து நம்மை கவர்ந்த மொசக்குட்டி இந்த படத்தின் கதை ஓட்டத்திற்கும் காமெடிக்கும் உதவியிருக்கிறார்..

தொழில்நுட்ப கலைஞர்கள்…

கே.ராஜ சேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ராஜேந்திர சோழன் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

வ.கருப்பண், அரவிந்த், லோக பதமநாபன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். பின்னணி இசை ஏ.டி.ராம் அமைத்திருக்கிறார்.

சக்தி மற்றும் ஸ்ரீ செல்வி நடனக் காட்சிகளை வடிவமைக்க மெட்ரோ மகேஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

ஜெ.கார்த்திக் மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார்.

சாதிய பாகுபாடு… ஆவணக் கொலை என தமிழ் சினிமாவின் வழக்கமான பார்முலாவையே இந்த இயக்குனரும் கையில் எடுத்திருக்கிறார்..

செம்பியன் என்ற கிராமத்து பகுதியும் மாதேவி என்ற நாயகி பெயரையும் வைத்து படத்தலைப்பு வைத்திருக்கிறார்.. இவரே தயாரிப்பாளர் இயக்குனர் நாயகன் என்ற போதிலும் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை வைத்திருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது

படத்தில் ஐந்து பாடல்கள்.. வரிகளுக்கும் உணர்வுக்கும் முக்கியத்துவம் கொடுத்து பாடலை உருவாக்கி இருக்கிறார் ஆனால் வருகின்ற நான்கு பாடலும் ஒரே மாதிரி சாயலில் இருப்பது கொஞ்சம் சோர்வை தருகிறது.. ஓரிரு பாடலையாவது குரூப் டான்ஸ் ஆக கொடுத்து இருக்கலாம்..

ஒளிப்பதிவு எடிட்டிங் பின்னணி இசை படத்திற்கு பலம்…

சாதி வெறியர்களை எதிர்க்க காதல் ஒன்றே ஆயுதம்.. காதலர்கள் தங்கள் காதலின் மேல் நம்பிக்கை வைத்து போராடினால் மட்டுமே சாதியை ஒழிக்க முடியும்.. அதை மறுக்க முடியாது என்பதையும் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.

Sembiyan Maadevi movie review

More Articles
Follows