கபாலியில் தேவையில்லாத சீன்ஸ் கட்… பெரும் மகிழ்ச்சி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமா ரசிகர்கள் கடந்த வெள்ளிக்கிழமையை (ஜீலை 22, 2016) கபாலி தினமாகவே கொண்டாடினர்.

எங்கும் எதிலும் கபாலி மயம்தான், எனவே, ஒரு சில தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்தன.

ஆனால் ரஜினிக்கே உரித்தான வேகம், விறுவிறுப்பு ஆகியவை கபாலியில் இல்லை என பரவலாக குறைகள் எழுந்தன.

எனவே படத்தின் விறுவிறுப்புக்கு தடையாக உள்ள சில காட்சிகளை வெட்டப்பட்டுள்ளன.

மலேசியா மாணவர்களுடன் ரஜினி உரையாடுவது, மற்றும் மனைவிக்காக ரஜினி அலைந்து தேடுவது உள்ளிட்ட சீன்களை வெட்டியுள்ளனர்.

அதாவது கிட்டதட்ட 12 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாம். இவை கபாலி தெலுங்கு பதிப்பில் மட்டும் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

விஜய், ஜெயம் ரவி வழியில் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

என்னதான் காமெடி மற்றும் பேய் படங்கள் நன்றாக கல்லா கட்டினாலும் உலகம் முழுவதும் ஆக்சன் படங்களுக்கு என்றும் மவுசு இருக்கதான் செய்கிறது.

எனவே ஒவ்வொரு ஹீரோக்களும் தங்கள் படங்களில் ஆக்சனுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

ரஜினியின் கபாலி படத்தை முடித்துவிட்டு சூர்யா நடிக்கவுள்ள படத்தை இயக்கவிருக்கிறார் பா.ரஞ்சித்.

இப்படத்தில் பாக்ஸராக நடிக்கவுள்ளதால் அதற்கான பயிற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறாராம் சூர்யா.

பத்ரி படத்தில் விஜய், பூலோகம் படத்தில் ஜெயம் ரவி ஆகியோர் பாக்ஸர்களாக நடித்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

அஜித்தின் ஏகே 57 அப்டேட்ஸ்: பல்கேரியாவும் 40 நாட்களும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் ஏகே 57 படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித்.

இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரம் பல்கேரியாவில் நாட்டில் தொடங்கப்படவுள்ளது.

அங்குள்ள NuBoyana என்ற மிகப்பெரிய ஸ்டூடியோவில் படப்பிடிப்பை நடத்தவுள்ளனர். 

இங்குதான் உலகப் புகழ் பெற்ற பல ஹாலிவுட் திரைப்படங்கள் படமாக்கப்பட்டுள்ளதாம்.

தொடர்ந்து 40 நாட்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டு, செப்டம்பர் இறுதியில் இந்தியா திரும்பவுள்ளது படக்குழு.

உடனே இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்கவிருக்கிறார்களாம்.

சிவா இயக்கும் இப்படத்தில் அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், கருணாகரன், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசை அனிருத்.

விரைவில் அஜித் பல்கேரியா நாட்டிற்கு செல்லவுள்ளார்.

ரஜினி – விஜய் – அஜித்தின் புதிய படங்களின் சூப்பர் ஸ்டோரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகர்களாக ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்டோர் வலம் வருகின்றனர்.

எனவே இவர்களின் படங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இவர்களது படங்கள் தயாராகும் போதே கதை குறித்த எதிர்பார்ப்பு எகிற செய்யும்.

தற்போது இவர்கள் நடித்து வரும் படங்கள் பற்றிய கதைகள் உலா வருகின்றன.

தற்போது ஷங்கர் இயக்கும் 2.0 படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.

இதில் வேற்று கிரகவாசியான அக்‌ஷய்குமார் கோரமுகத்துடன் பூமிக்கு வருகிறார்.

தனது மிருக குணத்தால் பூமியில் அட்டகாசம் செய்கிறார். எனவே சயின்ட்டிஸ்ட் வசீகரன் தனது சிட்டிக்கு மீண்டும் உயிர் கொடுத்து அவரை அழிக்க சொல்கிறார் என சொல்லப்படுகிறது.

இதனையடுத்து, ஏகே 57 படத்தில் அஜித் ஒரு இண்டர்நேஷ்னல் போலீஸ் ஆபிசராக வருகிறாராம்.

ராணுவ ரகசியங்களை தெரிந்து நாச வேலைகளை செய்யும் தீவிரவாதிகளை கண்டு பிடித்து ஒழிப்பதே படத்தின் கதை என கூறப்படுகிறது.

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து படத்திற்கு எங்க வீட்டுப் பிள்ளை என பெயரிடப்படலாம் எனத் தெரிகிறது.

எனவே கதையும் அப்படத்தின் ரீமேக்காக இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

சென்னை மற்றும் கேரளாவில் கபாலியின் வசூல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எந்தவொரு படத்திற்கு இல்லாத வரவேற்பு ரஜினியின் கபாலி படத்திற்கு கிடைத்தது.

எனவே முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒரு வாரத்திற்கான டிக்கெட்டுக்கள் விற்று தீர்ந்தன.

தமிழகத்தை போலவே கேரளா பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.

கேரளாவில் மட்டும் நான்காவது நாளில் ரூ. 81 லட்சம் வசூலித்துள்ளது.

நான்கு நாட்களில் கேரளாவில் மட்டும் ரூ. 12.40 கோடியை வசூலித்துள்ளது.

கொச்சி மல்டிப்ளக்‌ஸ் காம்ப்ளக்ஸ் ஒன்றில் கபாலி ரூ 1 கோடி வசூல் செய்துள்ளது.

சென்னையில் 4 நாட்களில் ரூ. 5 கோடி வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வந்துள்ளன.

இன்னும் வசூல் சாதனை தொடரும்…. எனவே இணைந்திருங்கள்…

இருதிசை நோக்கி சுமூகமாக பிரிந்த விஜய் – அமலாபால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெய்வத் திருமகள் படத்தில் பணிபுரிந்த நடிகை அமலா பால், இயக்குனர் விஜய் இருவரும் காதலித்த தொடங்கி பின்னர் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின்னரும் அமலாபால் படங்களில் நடிக்க விரும்பினார்.

இது இரு தரப்பு குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லை. ஆனால் தன் முடிவில் அமலாபால் உறுதியாக இருந்ததால், கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

எனவே, இருவரும் தங்களின் முக்கியமான நண்பர்கள் முன்பு ஆஜராகினர்.

பின்னர் ஒருவரை ஒருவர் குறைசொல்லி காயப்படுத்திக் கொள்ள வேண்டாம் என்ற கொள்கையோடு பரஸ்பர புரிதலோடு விவாகரத்து செய்ய முடிவு செய்தனர்.

இனி அவரவர் பணிகளில் இருவரும் கவனம் செலுத்த உள்ளனர். ஒரு திசையில் அமலாபால் நடிப்பை தொடர, எதிர் திசையில் இயக்குனர் விஜய் தன் இயக்கத்தில் கவனம் செலுத்த இருக்கிறார்.

விரைவில் தனுஷ் நடிக்கும் வடசென்னை படப்பிடிப்பில் அமலா பால் கலந்து கொள்கிறார்.

More Articles
Follows