தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பல கோடிகளில் பண புழங்கும் துறைகளில் மிக முக்கியமான துறை சினிமா துறை.
எனவே இங்கு கணக்கில் காட்டப்படாத கருப்பு பணம் நிறைய விளையாட வாய்ப்புள்ளது.
இதனால் அடிக்கடி வருமான வரித்துறை ரெய்டுகள் இங்கு நடப்பதுண்டு.
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரன் தன் சமீபத்திய பேட்டியில் நடிகர் கமல்ஹாசன் பற்றிய கருத்தை தெரிவித்துள்ளார்.
அதில்… ”எந்தவிதமான வரவாக இருந்தாலும் கமல்சார் முறையாக வங்கி கணக்குப்படியே காசோலையாக பெறுவார்.
தனது சம்பளத்தை கூட தொகையாக பெறாமல், காசோலையாக பெறுவது அவரது வழக்கம்.
சமீபத்தில் கூட ‘விஸ்வரூபம் -2’ படத்துக்காக பலகோடி ரூபாய் பணத்தை அவருக்கு வெள்ளைப் பணமாகவே கொடுத்தேன்.
தன்னுடை அலுவலக சிறிய செலவுகளை கூட முறையாக பைல்கள் போட்டு வைத்திருப்பார்.
கமலின் அண்ணன் சந்திரஹாசன் அவற்றை கவனமாக பார்த்து வருகிறார்” என்று தெரிவித்துள்ளார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.