‘கருப்பு பணமும் கமலின் வெள்ளை உள்ளமும்…’ – ஆஸ்கர் ரவிச்சந்திரன்

‘கருப்பு பணமும் கமலின் வெள்ளை உள்ளமும்…’ – ஆஸ்கர் ரவிச்சந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamalhaasan photosபல கோடிகளில் பண புழங்கும் துறைகளில் மிக முக்கியமான துறை சினிமா துறை.

எனவே இங்கு கணக்கில் காட்டப்படாத கருப்பு பணம் நிறைய விளையாட வாய்ப்புள்ளது.

இதனால் அடிக்கடி வருமான வரித்துறை ரெய்டுகள் இங்கு நடப்பதுண்டு.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரன் தன் சமீபத்திய பேட்டியில் நடிகர் கமல்ஹாசன் பற்றிய கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில்… ”எந்தவிதமான வரவாக இருந்தாலும் கமல்சார் முறையாக வங்கி கணக்குப்படியே காசோலையாக பெறுவார்.

தனது சம்பளத்தை கூட தொகையாக பெறாமல், காசோலையாக பெறுவது அவரது வழக்கம்.

சமீபத்தில் கூட ‘விஸ்வரூபம் -2’ படத்துக்காக பலகோடி ரூபாய் பணத்தை அவருக்கு வெள்ளைப் பணமாகவே கொடுத்தேன்.

தன்னுடை அலுவலக சிறிய செலவுகளை கூட முறையாக பைல்கள் போட்டு வைத்திருப்பார்.

கமலின் அண்ணன் சந்திரஹாசன் அவற்றை கவனமாக பார்த்து வருகிறார்” என்று தெரிவித்துள்ளார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.

‘ரெமோ’ வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

‘ரெமோ’ வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan fansகடந்த ஆயுத பூஜை தினத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படம் ரிலீஸ் ஆனது.

ரசிகர்களின் ஆதரவுடன் இப்படம் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது.

மேலும் இப்படத்தின் தெலுங்கு பதிப்பை வருகிற 25ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

இதற்கும் அங்கு நல்ல வரவேற்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ரெமோ தமிழ் படத்தின் வெற்றியை வேலூரில் உள்ள கருணை இல்லத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர்.

கருணை இல்லத்தில் உள்ளவர்களுக்கு அன்னதானம். பரிசுகள் மற்றும் கல்வி பாடப்புத்தகங்களை வழங்கியுள்ளனர்.

ஒரு படத்தின் வெற்றியை பலருக்கு பயனுள்ளதாக கொண்டாடிய இந்த ரசிகர்களை நிச்சயம் பாராட்டலாம்.

டிசம்பரில் டபுள் ட்ரீட் தரும் பைரவா

டிசம்பரில் டபுள் ட்ரீட் தரும் பைரவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay bairavaaபரதன்-விஜய் கூட்டணியில் உருவாகி வரும் பைரவா படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை 2017ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்யவுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்களை டிசம்பரில் வெளியிட இருப்பதாக தெரிகிறது.

ஆனால், டிசம்பர் முதல் வாரத்தில் பாடல்களை மட்டும் முதலில் வெளியிட்டுவிட்டு பின்பு, சில நாட்கள் கழித்து அதாவது கிறிஸ்துமஸ் தினத்தில் ட்ரைலரை வெளியிட ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இது உறுதியாகும் பட்சத்தில், டிசம்பரில் இரண்டு விருந்தை பைரவா  தனித்தனியாக தருவார் என எதிர்பார்க்கலாம்.

மீண்டும் தனுஷுடன் டூயட் பாடும் அமலாபால்?

மீண்டும் தனுஷுடன் டூயட் பாடும் அமலாபால்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush amala paulதனுஷ் நடித்து பெரும் வெற்றி பெற்ற வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.

இப்படத்தை தனுஷ் நிறுவனத்துடன் இணைந்து கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.

சௌந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இயக்க, அனிருத் மற்றும் ஷான் ரோல்டன் இசையமைக்க உள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாகத்தில் நடித்த அமலாபால் மீண்டும் தனுஷ் உடன் டூயட் பாடவுள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

மேலும் தனுஷின் தந்தை கேரக்டரில் சமுத்திரக்கனியும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் இதன் சூட்டிங் தொடங்கப்பட உள்ளதால், கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.

 

பத்து நாட்களில் ரூ. 50 கோடியை தொட்ட சிம்பு படம்

பத்து நாட்களில் ரூ. 50 கோடியை தொட்ட சிம்பு படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu manjima mohanசிம்பு, மஞ்சிமா மோகன் இணைந்து நடித்த அச்சம் என்பது மடமையடா படம் அண்மையில் வெளியானது.

கௌதம் மேனன் இயக்கிய இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இப்படத்தின் க்ளைமாக்ஸ் குறித்து சில எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் வெளியாகி கிட்டதட்ட 10 நாட்களை கடந்துள்ளது.

இதுவரை ரூ. 50 கோடி வசூலை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தற்போது நாட்டில் ரூ. 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என கூறப்பட்டு வந்த போதிலும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சைத்தானை தேவதையாக கொண்டாடும் அருந்ததி நாயர்

சைத்தானை தேவதையாக கொண்டாடும் அருந்ததி நாயர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress arundhathi nairபிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘சைத்தான்’ திரைப்படம் வருகிற டிசம்பர் 1-ம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இதுகுறித்து இப்பட நாயகி அருந்ததி நாயர் கூறியதாவது..

“என்னுடைய திரையுலக வாழ்க்கையில் மிக பெரிய மைல் கல்லாக அமைந்திருக்கிறது இந்த ’சைத்தான்’. அது எனக்கு தேவதை‘ என்று மெல்லிய புன்னகையோடு துவங்குகிறார் வணிகவியல் பாடத்தில் பட்டம் பெற்று இருக்கும் அருந்ததி நாயர்.

என் மீது நம்பிக்கை வைத்த விஜய் ஆண்டனிக்கு என்னுடைய நன்றி.

’ஐஸ்வர்யா’ என்னும் வலுவான கதாபாத்திரம் மூலம் என்னுடைய திறமைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை, இந்த சைத்தான் பெற்றுத் தந்திருக்கிறது.

என்னுடைய சொந்த குரலிலேயே இப்படத்திற்கு டப்பிங் பேசியுள்ளேன்” என்று ஆனந்தமாக கூறுகிறார் அருந்ததி நாயர்.

More Articles
Follows