மனநலம் குன்றிய சர்ச்சை சொல்..; மன்னிப்பு கேட்டார் நடிகை குஷ்பூ

மனநலம் குன்றிய சர்ச்சை சொல்..; மன்னிப்பு கேட்டார் நடிகை குஷ்பூ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Khushbooகடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார் நடிகை குஷ்பு.

பாஜக.வில் இணைந்த பின் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசும்போது.. மனநலம் குன்றிய (காங்கிரஸ்) கட்சியில் இருந்து விலகி விட்டதாக தெரிவித்தார்.

இது மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளிகளை அவதூறு செய்யும் சொல் என்றும் குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாற்று திறனாளிகளுக்கான அமைப்புகள் புகார்கள் அளித்தன.

இதை தொடர்ந்து குஷ்பு மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்…

அவசரம், ஆழ்ந்த வருத்தம், மற்றும் வேதனையான ஒரு தருணத்தில் நான் சில வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக மிகவும் வருந்துகிறேன். நான் எனது சொந்த குடும்பத்திலேயே மனநல பிரச்சினையால் போராடி இருக்கிறேன். மனச்சோர்வு, மன நலம் குன்றிய நண்பர்களோடு வாழ்கிறேன்.

மக்களின் பன்முக தன்மையை உணர்ந்தவள் நான். மாற்றுத் திறனாளிகளை எப்போதும் மதிப்பவள் நான். என அறிக்கையில் தெரிவித்துள்ளார் குஷ்பூ.

Actress / Politician Khushboo issues apology over ‘mentally retarded’ remark

மீண்டும் டாப் ஸ்டார் பிரசாந்துக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராய்.?

மீண்டும் டாப் ஸ்டார் பிரசாந்துக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராய்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

prashanth aishwarya raiஹிந்தியில் சூப்பர் டூப்பரான அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்கவுள்ளார் என்ற தகவலை பல மாதங்களுக்கு முன்பே பார்த்தோம்.

சிறந்த ஹிந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதுகளையும் இப்படம் வென்றது.

இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகரும் பிரசாந்தின் தந்தையுமான தியாகராஜன் கைப்பற்றியுள்ளார்.

பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜேஜே பெட்ரிக் இயக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவலை பார்த்தோம்.

இந்த நிலையில் இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யாராயை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாகத் தெரிகிறது.

இவர் தபு நடித்த கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 1998ஆம் ஆண்டில் ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ் படத்தில் பிரசாந்த் ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடித்து இருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Aishwarya Rai in talks for Prashanth’s upcoming film

கார்த்திக் ராஜ் – ரம்யா பாண்டியன் இணையும் ‘முகிலன்’..; சூர்யா படத்துடன் இணையத்தில் மோதல்

கார்த்திக் ராஜ் – ரம்யா பாண்டியன் இணையும் ‘முகிலன்’..; சூர்யா படத்துடன் இணையத்தில் மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MugilanZEE5 தமிழ் ரசிகர்களுக்கு தரமான பொழுதுக்போக்குடைய படைப்புகளை தொடர்ந்து அளித்து வருகிறது. அந்த வகையில், கார்த்திக் ராஜ் (செம்பருத்தி புகழ்) மற்றும் ரம்யா பாண்டியன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ‘முகிலன்’ வெப் சீரிஸ், ZEE5 தனது அடுத்த வெளியீடு என்று அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது.

உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ‘முகிலன்’ வெப் சீரிஸ் கேங்க்ஸ்டர் கதையம்சத்தை கொண்டது.

பல திருப்பங்கள் கொண்ட திரைக்கதையால் மெருகூட்டப்பட்ட ‘முகிலன்’ வெப் சீரிஸில் தன் குடும்பத்திற்காக எதையும் செய்ய துணிபவனாக இருக்கும் ஒரு கேங்க்ஸ்டரின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை காட்டுகிறது.

ராபர்ட் மாஸ்டர், ஆடுகளம் நரேன், ஜூனியர் பாலையா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

‘முகிலன்’ வெப் சீரிஸ்ஸை ஸ்ரீ ராம் ராம் எழுதி இயக்கியுள்ளார். தினேஷ் ரமணா (இன்சடியஸ் மீடியா), பால சுந்தரம் (இன்சிடியஸ் மீடியா), ஜெயச்சந்திரன் (இன்ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்) ஆகியோர் தயாரித்துள்ளனர்

பிரபல இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார்.

ஒளிப்பதிவு – ஃபாரூக் ஜே பாஷா
ஆசிரியர் – தமிழ் அரசன்
கலை – மணிமோழியன் ராமதுரை

“முகிலன்” அக்டோபர் 30 ஆம் தேதி ZEE5ல் அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறது.

இதே நாளில் தான் சூர்யா நடித்துள்ள ‘சூர்ரைப்போற்று’ படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக அமேசானில் ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Ramya Pandian starring Mugilan to clash with Suriya’s Soorarai Pottru

வித்தியாசமான த்ரில்லராக உருவாகும் ‘எறிடா’

வித்தியாசமான த்ரில்லராக உருவாகும் ‘எறிடா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Eridaஒரு சில படத்தின் பெயர்களே, இது எதைப் பற்றிய படம் என்று நம்மை யோசிக்க வைக்கும். அந்தப் படத்தின் போஸ்டர்கள் வித்தியாசமாக அமைந்துவிட்டால், ஏதோ புதிதாகச் சொல்லவுள்ளார்கள் என்று நம்மை இன்னும் ஆர்வம் கொள்ள வைக்கும். அப்படி சமூக வலைதளத்தில் சமீபமாக ட்ரெண்டாகிக் கொண்டிருக்கும் போஸ்டர் தான் ‘எறிடா’. எதற்கு இந்த தலைப்பு, என்ன சொல்ல வருகிறார்கள் என்ற ஆர்வமே இதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது.

மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெற்றி படங்களை இயக்கிய வி.கே.பிரகாஷ், ‘எறிடா’ படத்தின் மூலம் தமிழில் வெற்றி இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். அரோமா சினிமாஸ், குட் கம்பெனி மற்றும் ட்ரெண்ட்ஸ் ஆட்பிலிம் மேக்கர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ‘எறிடா’ படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்கள். சம்யுக்தா மேனன், நாசர், கிஷோர், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. சுமார் 55 நாட்களுக்குள் ஒட்டுமொத்த படத்தையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

கிரேக்க மொழியில் உள்ள வார்த்தை தான் ‘எறிடா’. இதற்கு “காதலில் விழுந்த ஒரு பெண் கடவுளைப் பற்றிய கதை” என்று அர்த்தம். அடுத்த காட்சி என்ன என்பதை யூகிக்க முடியாத வகையில் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லராக இந்தப் படம் உருவாகிறது. இதன் மூலம் பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான த்ரில்லர் கதை தயாராகி வருகிறது என உறுதியாக நம்பலாம். 2021-ம் ஆண்டு வெளியீட்டுக்காக இந்தப் படம் தயாராகி வருகிறது.

‘எறிடா’ படக்குழுவினர் விவரம்:

கதை, திரைக்கதை, இயக்கம் – வி.கே.பிரகாஷ்
தயாரிப்பாளர்கள் – அஜி மிடாயில், அரோமா பாபு
வசனம் – ஒய்.வி.ராஜேஷ்
ஒளிப்பதிவாளர் – எஸ்.லோகநாதன்
எடிட்டர் – சுரேஷ் அர்ஸ்
இசையமைப்பாளர் – அபிஜித் ஸைலநாத்
கலை இயக்குநர் – அஜய் மன்காட்
ஆடை வடிவமைப்பாளர் – லிஜி ப்ரேமன்
பி.ஆர்.ஓ – யுவராஜ்

Director VK Prakash in new film is titled as Erida

முத்தையா முரளிதரன் இனத்துரோகி.; அவரின் முகம் உங்கள் முகமாக பார்க்க வேண்டுமா?.. விஜய் சேதுபதிக்கு பாரதிராஜா கடிதம்

முத்தையா முரளிதரன் இனத்துரோகி.; அவரின் முகம் உங்கள் முகமாக பார்க்க வேண்டுமா?.. விஜய் சேதுபதிக்கு பாரதிராஜா கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bharathiraja vijay sethupathiஅன்பின் கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு, பாசத்திற்குரிய பாரதிராஜா எழுதிக்கொள்வது,

வணக்கம்.

மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்பக் கடினம். ஆனால் பொதுமக்கள் வெகு வேகமாகவே உங்கள் மீது அன்பைக் கொட்டியுள்ளனர்.

அதற்கு இயல்பான, யதார்த்தமான பேச்சும் .. கடைக்கோடி மக்களின் எண்ண பிரதிபலிப்புமே காரணம். இன்னும் நீண்டு செல்லும் இந்தப் பயணத்தில் மேலும் புகழ் பெறவே வாழ்த்துகிறேன்.

நிற்க.

தாங்கள் செய்யவிருக்கும் 800 என்ற படம் பற்றிக் கேள்விப்பட்டேன். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனைப் பற்றிய பயோபிக் படமாக அது உருவாகப் போவதாக அறிந்தேன்.

நம் ஈழத்தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்த போது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா. சிங்கள இனவாதத்தை முழுக்க முழுக்க ஆதரித்தவர்.

விளையாட்டு வீரனாக என்னதான் சாதித்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன பயன்?

எத்தனையோ துரோகங்களை எம்மினம் கடந்து வந்துள்ளது. எங்களைப் பொருத்தவரை முத்தையா முரளீதரனும் ஒரு நம்பிக்கைத் துரோகிதான்.

அடிபட்ட வலியை நினைவுகூறும் மக்கள் என்னிடம், ஏன் நம்ம விஜய் சேதுபதி அதில் நடிக்கிறார்? மறுத்திருக்கலாமே… என கேட்கின்றனர்.

அவர்களின் வேதனையும் வலியும் புரியும் அதேசமயம் அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பையும் என்னால் காண முடிந்தது.

உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் சார்பாக நான் கோரிக்கை வைக்கிறேன்

இனத்துரோகம் செய்த ஒருவரின் முகம் காலகாலமாக உங்கள் முகமாக வெறுப்போடே எம் மக்கள் பார்க்க வேண்டுமா?

எந்த வகையிலாவது தமிழின வெறுப்பாளனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா பாருங்கள்.

தவிர்த்தால் எப்போதும் எம் ஈழ மக்களின் மனதிலும், என் மனதிலும் நன்றியோடு நினைவுகொள்ளப்படுவீர்கள்.

பின் குறிப்பு : 800 திரைப்படத்தை எடுக்க இருக்கும் Dar media நிறுவனம் நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியிட்டதை அறிந்தேன்.

800 – திரைப்படம் அரசியல் படமில்லை. ஒரு விளையாட்டு வீரனின் வாழ்க்கை வரலாற்றை மட்டுமே படமாக்க இருக்கிறோம்..

இந்த திரைப்படம் எடுத்தால் பல ஈழத்தமிழர் திரைக் கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களின் திறமை உலக அரங்கில் வெளிக் காட்ட அடித்தளமாக இருக்கும் என்று வெளியீட்டு இருந்தீர்கள். துரோகிக்கு துணை போகும் உங்களை நினைத்து கோபப்படுவதா ? இல்லை உங்கள் அறியாமையை கண்டு சிரிப்பாதா ? அனைத்து துறைகளிலும் உலகரங்கில் தமிழர்களின் பங்களிப்பு என்னவென்று வரலாற்றை புரட்டிபாருங்கள்..

பாடம் சொல்லும். ஒரு செய்தியை அழுத்தமாக இங்கு பதிவிட விரும்புகிறேன். உங்களுக்கு வேண்டுமானால் முத்தையா முரளிதரன் சிறந்த விளையாட்டு வீரனாக கருதலாம். எங்களைப் பொறுத்தவரை அவர் இனத் துரோகி.

துரோகிகளை ஒரு போதும் தமிழினம் மன்னிக்க இயலாது. ஒரு போராளியின் தியாகம் , ஆயிரம் முத்தையா முரளிதரன் வந்தால் கூட ஈடு செய்யமுடியாது. உண்மையிலேயே நீங்கள் தமிழர்களின் திரைக் கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களின் திறமையை பயன் படுத்திக் கொள்ள விரும்பினால்.. அகிம்சை வழியில் போராடி
தீயாக இன்றும் சுடர் விட்டுக் கொண்டிருக்கும் தம்பி திலீபனின் வாழ்க்கை வரலாறு, அல்லது எங்கள் மக்களுக்காக தன்னையே உயிராயுதமாக
உருக்கி எம் மண்ணோடு , காற்றோடு, கலந்த போன பல்லாயிரக்கணக்கான போராளிகளில் , ஒரு மாவீரனின் வாழ்க்கை வரலாற்றை , உலகரங்கில் எடுக்க முன் வா… ஒட்டு மொத்த தமிழர்களும், திரைத் துறையினரும் இலவசமாக பணியாற்றக் காத்திருக்கோம்.

நன்றி

இயக்குநர் பாரதிராஜா
15:09:2020

Legendary director Bharathi Raja condemns Vijay Sethupathi’s 800 the movie

BREAKING தவறைத் தவிர்த்திருக்கலாம்… அனுபவமே_பாடம்.. ; ராகவேந்திரா மண்டப சொத்து வரி பற்றி ரஜினி ட்வீட்

BREAKING தவறைத் தவிர்த்திருக்கலாம்… அனுபவமே_பாடம்.. ; ராகவேந்திரா மண்டப சொத்து வரி பற்றி ரஜினி ட்வீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthஇராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு ரூ. 6.50 லட்சம் சொத்து வரி செலுத்த வேண்டும் என மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதை எதிர்த்து ரஜினிகாந்த் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், பொதுமுடக்கம் காரணமாக திருமண மஹால் மூடியே கிடந்தது எனவும் அதனால் சொத்து வரியை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

மேலும் மாநகராட்சிக்கு இதுகுறித்த விளக்கம் அளித்து நோட்டீஸ் அனுப்பியும் இதுவரை மாநகராட்சி தரப்பில் பதில் இல்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நோட்டீஸ் அனுப்பிய 10 நாட்களில் வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

மேலும் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்தார்.

அபராதம் விதிக்க நேரிடும் என்கிற ஐகோர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து வழக்கை வாபஸ் பெறுவதாக ரஜினிகாந்த் தரப்பு பதிலளித்தனர்

இந்த நிலையில் ரஜினி் இந்த விவகாரம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

ராகவேந்திரா மண்டப சொத்து வரி…

நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும்.

தவறைத் தவிர்த்திருக்கலாம்.

#அனுபவமே_பாடம்

Rajinikanth breaks silence on property tax

More Articles
Follows