திரும்பி வந்துட்டேன்னு சொல்லு.; மீண்டும் ஜெயா அரசுக்கு எதிராக ரஜினி வாய்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு தமிழ் திரையுலகினர் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை, காமராஜர் அரங்கில் நடைபெற்றது.

அதில் கருணாநிதியின் மகனும் திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் கலந்துக் கொண்டார்.

அதில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது….

கலைஞர் இல்லாத நாட்டை என்னால் நினைத்து கூடப் பார்க்க முடியவில்லை. தமிழ்நாடு பெரிய அடையாளத்தை இழந்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு பெரிய விழா என்றால் இனி யாரை அழைப்பார்கள் என்று தெரியவில்லை.

தமிழ்நாட்டிற்கு யார் வந்தாலும் பெரிய மனிதர் என்று யாரை சந்திக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.

மேலும், நாற்பத்தைந்து வயதில் ஒரு கட்சிப் பொறுப்பை ஏற்று எத்தனை சோதனைகள், எத்தனை சூழ்ச்சிகள், எத்தனை துரோகங்கள், எல்லாவற்றையும் தாண்டி கழகத்தை கட்டிக் காப்பாற்றி ஐம்பது ஆண்டு காலங்கள் தலைமை தாங்கிய பெருமை தலைவர் கலைஞர் அவர்களுக்கு உண்டு.

ஐம்பது ஆண்டுகளில் அரசியலில் தன்னந்தனியாக மேடையில் நின்று அரசியல் களத்தில் யாராவது வந்தால் என்னோடு நட்புகொள் அல்லது என்னை எதிர்கொள் அப்போதுதான் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியும் என்று அரசியல் சதுரங்கத்தில் தாளங்கள் போட்டு புகுந்து விளையாடியவர் கலைஞர்.

அத்தனை வஞ்சனைகளையும் தாண்டி தன் உடன்பிறப்புகளுக்காக வாழ்ந்தார். அவர் அரசியல் பயணங்களைப் பற்றி பேச இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. இன்னும் நிறைய சந்தர்ப்பங்கள் வரும்.

இலக்கியம் பார்த்தால் அதில் அவர் செய்யாத சாதனை இல்லை. இருட்டில் இருந்த சரித்திர நாயகர்கள் சேரர், சோழர், பாண்டியர், பல்லவர்கள், சிற்றரசர்கள், போன்ற வெளிச்சம் படாத வீரர்களையெல்லாம் தன் சொல்லாலும், எழுத்தாலும், பாமரர் முதல் பண்டிதர் வரை கொண்டுபோய் சேர்த்தவர் கலைஞர்.

பதவியில் இல்லை, வயது முதிர்வு, ஆனாலும் முப்படை வீரர்களும் தகுந்த மரியாதைக் கொடுத்தார்கள்.

இருப்பினும் ஒரு குறை எனக்கு, அண்டை மாநில முதலமைச்சர்கள், அத்தனை தலைவர்கள் இருக்கும்போது தமிழ்நாட்டு முதல்வர் இருக்க வேண்டாமா? மந்திரி சபையே இருக்க வேண்டாமா? இதைப் பார்த்து மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்.

நீங்கள் என்ன எம்.ஜி.ஆரா? ஜெயலிதாவா? இருப்பினும் அவருக்கு மெரினாவில் மேல்முறையிட்டுக்கு போகாமல் இடம் கொடுத்தது ஆறுதல். ஸ்டாலின் குழந்தைப் போல் கண்ணீர் வடித்தது பார்த்தும் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

கவலை வேண்டாம். அந்த மாமனிதரின் ஆத்மா உங்களுக்கு வழிகாட்டும். அவருடன் நிறைய நாட்கள் செலவழித்திருக்கிறேன், நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டேன் என்பதில் மகிழ்ச்சி.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

25 வருடங்களுக்கு முன்பு “பாட்ஷா” பட வெற்றி விழாவில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனாலும் தமிழ்நாட்டை காப்பாத்த முடியாது என வாய்ஸ் கொடுத்தவர் ரஜினி.

அப்போதைய தேர்தலில் அதிமுக படு தோல்வியை தழுவியது.

தற்போது மீண்டும் மறைந்த ஜெயலலிதாவின் ஆட்சிக்கு எதிராக ரஜினி தன் வாய்ஸை உயர்த்திருப்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Again Rajini voice against ADMK Government at Kalaignar memorial gathering

*ஓடு ராஜா ஓடு* படத்திற்காக தெருத் தெருவாக ஓடிய நடிகர் சங்க தலைவர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் மூலன் டாக்கீஸ் தயாரிப்பில் ஜதின் மற்றும் நிஷாந்த் என இரண்டு இயக்குநர்கள் இணைந்து இயக்கியுள்ள படம் ஓடு ராஜா ஓடு.

இப்படத்தில் ஜோக்கர் படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த குருசோமசுந்தரம் மீண்டும் நாயகனாக நடித்துள்ளார்.

மேலும் நாசர், ‘லென்ஸ்’ அனந்த்சாமி, லட்சுமி பிரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் செட்டப் பாக்ஸ் பிரச்சினையை சொல்வதுடன் சமூக விழப்புணர்வை ஏற்படுத்தும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பிடி. செல்வகுமார் பெற்றுள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அப்போது விழா மேடையில் நடிகர் நாசர் பேசும்போது தன் பட அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்.

“இப்போது சினிமாவுக்கு வரும் இயக்குநர்கள் பெரும்பாலும் படித்தவர்களாக இருக்கிறார்கள். அதனால் வித்தியாசமான படங்கள் நிறைய வருகின்றன.

எல்லாப் படத்திற்கும் நாம் முழு உழைப்பையும் தந்துவிட மாட்டோம். ஒருசில படங்கள் மட்டுமே நாம் ஈடுபாட்டுடன் நடிக்கும் வகையில் இருக்கும். அந்தவகையில் இப்படத்தில் நான் அதிக ஈடுபாட்டுடன் நடித்தேன்.

படத்தலைப்பைப் போலவே, படப்பிடிப்பில் பல நாட்கள் நானும் தெருத்தெருவாக ஓடினேன்.

இலவசமாக எங்கெல்லாம் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கிறதோ, அங்கெல்லாம் ஓடினோம்” என நாசர் பேசினார்.

கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய விக்ரம் மகன் துருவ் மீது 3 வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையில் விடிய விடிய பார்ட்டி நடத்தி முடித்துவிட்டு நடிகர்கள் அதிகாலையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்துவது வாடிக்கையாகி விட்டது.

அதுபோன்ற சம்பவம் தற்போது மீண்டும் நிகழ்ந்துள்ளது.

நடிகர் விக்ரமின் மகன் துருவ், தமது நண்பர்களுடன் சென்னை மந்தைவெளியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு அதிகாலை 4 மணியளவில் ஆழ்வார்ப்பேட்டை டிடிகே சாலையில் சுசுகி பலேனோ காரை ஓட்டிக் கொண்டு, ஆர்.கே. சாலை நோக்கி சென்றுள்ளார்.

அப்போது, அதிவேகத்தில் சென்றதாகக் கூறப்படும் அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற ஆட்டோ ஒன்றின் மீது மோதியதுள்ளது.

இதில், போஸ்டர் ஒட்டும் பணியை முடித்துவிட்டு, தமது ஆட்டோவில் அமர்ந்திருந்த ஓட்டுநர் காமேஷ் படுகாயமடைந்தார்.

ஆட்டோ மீது மோதியும், வண்டியை நிறுத்தாமல் டிடிகே சாலையில் இருந்த முர்ரேஷ் கேட் சாலையில் அதே வேகத்தோடு துருவ் பயணித்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வீட்டருகே உள்ள பிளாட்பார்மில் மோதிய கார், பள்ளத்தில் சிக்கியதை அடுத்து நகர்த்த முடியாமல் நின்று போனது.

இதுகுறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தினர். விக்ரமின் மகன் துருவ் விபத்தை ஏற்படுத்திவிட்டு வந்தது தெரியவந்ததையடுத்து, வழக்கை அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றினர்.

இதையடுத்து, துருவ் மீது அதிவேகத்தில் வாகனம் ஓட்டுதல், விபத்து மூலம் கொடிய காயம் ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ், அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும் அவரை கைது செய்து பின் காவல்நிலைய பிணையில் விடுவித்தனர். துருவ் ஓட்டி வந்த காரையும் பறிமுதல் செய்தனர்.

இதனிடையே ஆட்டோ ஓட்டுநர் காமேஷின் தலை, கை, கால் உள்ளிட்ட பல இடங்களில் படுகாயம் ஏற்பட்டதால் அவர் ஆம்புலன்ஸ் மூலம், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

ராணுவத்தில் சேர்ந்தால் உயிருக்கு ஆபத்து என நினைப்பது தவறு.. : கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் தயாரித்து இயக்கி நடித்த விஸ்வரூபம் 2 படம் நேற்று முன்தினம் ஆகஸ்ட் 10ல் ரிலீசானது.

அந்த படத்தை சென்னை கிண்டியில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரியில் இராணுவ வீரர்களுடன் அமர்ந்து இன்று கமல் கண்டுகளித்தார்.

இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் பேசியபோது, விஸ்வரூபம் படத்துக்காக தமக்கு ராணுவப் பயிற்சி அளித்ததற்காக இந்திய ராணுவத்துக்கும் பாதுகாப்புத் துறைக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

ராணுவத்தில் சேர்ந்தால் உயிருக்கு ஆபத்து என நினைப்பது தவறு என்று கூறிய கமல், நாடு காக்கும் வேலை முக்கியமானது என தெரிவித்தார்.

தமிழன் மட்டுமே ஆளவேண்டும் என சீறும் சிநேகனே இதை கவனிச்சீங்களா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாருஹாசனின் மிரட்டல் நடிப்பில் உருவாகியுள்ள படம் தாதா 87.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கவிஞர் சிநேகன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.

அப்போது அவர் பேசும்போது தமிழக அரசை கடுமையாக சாடினார். எதுக்காக இந்த அரசாங்கம் உள்ளது? என அனல் பறக்க பேசினார்.

காவிரி நீருக்காக பல வருடங்களாக தமிழகத்தில் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் மழை வெள்ளதால் அணைகள் நிரம்பி காவிரி நீர் வந்துவிட்டது.

ஆனால் இங்கே நீரை சேமிக்க வழியில்லை. எல்லாம் வீணாக கடலில் போய் சேர்கிறது.

நீரை சேமிக்க முடியாதவர்கள் எதற்காக ஆட்சியில் இருக்க வேண்டும். எதுக்குடா? நீங்க இருக்கீங்க என்றார்.

அவர் மேலும் பேசும்போது…

தமிழ் நாட்டில் யார் வேண்டுமானாலும் வாழட்டும். ஆனால் தமிழன்தான் இந்த தமிழகத்தை ஆள வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.

அங்கேதான் அவருடைய கருத்துக்கள் முரண்பாடாக உள்ளது.

தற்போது தமிழகத்தை ஆளும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் தமிழர்கள் தானே. அவர்கள் ஆளும் தமிழகம் எப்படியுள்ளது?

தமிழக அரசை குறை சொல்லும் சிநேகனுக்கு அவர்கள் (ஈபிஎஸ், ஓபிஎஸ்) இருவரும் தமிழர்கள் என்பது தெரியாதா?

தமிழர்கள் ஆளும் தற்போதைய தமிழகத்தின் நிலை அவருக்கு தெரியாதா?

ஐயா சிநேகன் அவர்களே. இதற்கு உங்கள் பதில் என்னவோ..?

Lyricist Snehan angry attack speech on TN Govt in DhaDha 87 audio launch

தமிழன் என்று முழங்கும் ஜாக்குவார் தங்கமே இதெல்லாம் ஓவரா இல்ல.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீண்ட இடைவெளிக்கு பின்னர் சாருஹாசன் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் தாதா 87.

இதில் ஜனகராஜ் மற்றும் கீர்த்தி சுரேஷின் பாட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

ஸ்ரீவிஜய் ஜி இயக்கிள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள காசி திரையரங்கில் இன்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகை கௌதமி, ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், கவிஞர் சிநேகன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

அப்போது வழக்கம்போல ஜாக்குவார் தங்கம் தமிழன் தமிழன் என்று முழங்கிக் கொண்டிருந்தார்.

தமிழ் சினிமாவில் தமிழன்தான் இயக்குனராக வேண்டும். தமிழ் சினிமாவில் தமிழன்தான் நாயகனாக நடிக்க வேண்டும்… இப்படியாக தமிழன் மட்டும்தான் தமிழ் சினிமாவில் இருக்க வேண்டும் என்பது போல ஆவேசமாக பேசினார்.

இறுதியாக தமிழன் வென்றே தீருவான் என தொண்டை கிழியும் வகையில் உரக்கமாக பேசினார்.

அவருடைய தமிழ் உணர்வை நிச்சயம் பாராட்ட வேண்டும்தான். ஆனால் இப்படி தமிழன் மட்டுமே தமிழ் சினிமாவில் இருக்க வேண்டும் என்றால் இவர் எதற்காக மற்ற மொழி படங்களில் பணி புரிந்தார்.

ஜாக்குவார் தங்கம் அவர்கள் இதுவரை 1000க்கும் மேற்பட்ட ஸ்டண்ட் மாஸ்டராக பணி புரிந்துள்ளார்.

அதில் 500 படங்கள் மட்டுமே தமிழ் படங்கள். மற்ற அனைத்தும் மற்ற மொழி படங்களே.

அப்படி என்றால் இந்த தமிழ் உணர்வு இவருக்கு இந்த 60 வயதில்தான் வந்ததா? அல்லது இனி சினிமாவில் நாம் பணி புரிய போவதில்லை என நினைத்து பேசுகிறாரா?

மொழி மதம் அனைத்தையும் கடந்ததுதான் கலை என்பார்கள். ஆனால் இவர் இப்படி மேடைக்கு மேடை பேசுவது எந்த விதத்தில் நியாயம் சாரே..?

Jaguar Thangam may act work in Many languages But he will not allow others to work in Tamil

More Articles
Follows