டிவி ரேட்டிங்கிலும் தில்லு முல்லு..; TRP-யை நிறுத்தியது BARC

டிவி ரேட்டிங்கிலும் தில்லு முல்லு..; TRP-யை நிறுத்தியது BARC

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

BARCஇந்தியாவில் உள்ள அனைத்து தனியார் டிவிக்களின் ரேட்டிங்கை BARC ‘பார்க்’ அமைப்பு நிர்வகித்து வருகிறது.

ஒவ்வொரு வாரமும் எந்த டிவிக்கு, எந்த நிகழ்ச்சிக்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது என்பதை அந்த அமைப்பு வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில் மும்பையில் உள்ள முக்கிய சேனல்கள் டிஆர்பி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

வருமானத்தையும் பெருக்கும் நோக்கில் அவர்கள் செயல்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அதாவது… பார்வையாளர்கள் மற்றும் விளம்பரதாரர்களைக் கவரும் நோக்கில் ஏழை மக்கள் வாழும் பகுதிகளில் சேனல்களை எந்நேரமும் ஆன் செய்தே வைத்திருப்பதற்கு மாதம் ரூ.400 முதல் ரூ.700 தொகை வழங்கப்பட்டு வந்துள்ளதாம்.

இந்த டிஆர்பி மோசடி காரணமாக அடுத்த 12 வாரங்களுக்கு அனைத்து மொழிகளிலும் செய்தி சேனல்களுக்கான டிஆர்பி ரேட்டிங் வாரந்தோறும் வெளியிடுவது தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது” எனத் பார்க் அமைப்பு தெரிவித்துள்ளது.

BARC pauses weekly ratings for TV channels

நான் சிங்கிள் இல்லை..; ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த லட்சுமி மேனன்

நான் சிங்கிள் இல்லை..; ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த லட்சுமி மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

lakshmi menonகும்கி, பாண்டிய நாடு, வேதாளம், உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்த மலையாள நடிகை லட்சுமி மேனன்.

தற்போது மீண்டும் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக முத்தையா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இவர் பிக்பாஸில் கலந்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வந்தபோது அதை மறுத்து சில சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார் லட்சுமி.

அப்போது ரசிகர் ஒருவர்… நீங்கள் சிங்கிளா? என கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள… இல்லை என பதில் அளித்து இதயம் போட்டோவையும் வெட்கப்படும் போட்டோவையும் பதிவிட்டுள்ளார்.

Actress Lakshmi Menon reveals that she is in relationship

மனநலம் குன்றிய சர்ச்சை சொல்..; மன்னிப்பு கேட்டார் நடிகை குஷ்பூ

மனநலம் குன்றிய சர்ச்சை சொல்..; மன்னிப்பு கேட்டார் நடிகை குஷ்பூ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Khushbooகடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார் நடிகை குஷ்பு.

பாஜக.வில் இணைந்த பின் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசும்போது.. மனநலம் குன்றிய (காங்கிரஸ்) கட்சியில் இருந்து விலகி விட்டதாக தெரிவித்தார்.

இது மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளிகளை அவதூறு செய்யும் சொல் என்றும் குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாற்று திறனாளிகளுக்கான அமைப்புகள் புகார்கள் அளித்தன.

இதை தொடர்ந்து குஷ்பு மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்…

அவசரம், ஆழ்ந்த வருத்தம், மற்றும் வேதனையான ஒரு தருணத்தில் நான் சில வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக மிகவும் வருந்துகிறேன். நான் எனது சொந்த குடும்பத்திலேயே மனநல பிரச்சினையால் போராடி இருக்கிறேன். மனச்சோர்வு, மன நலம் குன்றிய நண்பர்களோடு வாழ்கிறேன்.

மக்களின் பன்முக தன்மையை உணர்ந்தவள் நான். மாற்றுத் திறனாளிகளை எப்போதும் மதிப்பவள் நான். என அறிக்கையில் தெரிவித்துள்ளார் குஷ்பூ.

Actress / Politician Khushboo issues apology over ‘mentally retarded’ remark

மீண்டும் டாப் ஸ்டார் பிரசாந்துக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராய்.?

மீண்டும் டாப் ஸ்டார் பிரசாந்துக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராய்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

prashanth aishwarya raiஹிந்தியில் சூப்பர் டூப்பரான அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்கவுள்ளார் என்ற தகவலை பல மாதங்களுக்கு முன்பே பார்த்தோம்.

சிறந்த ஹிந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதுகளையும் இப்படம் வென்றது.

இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகரும் பிரசாந்தின் தந்தையுமான தியாகராஜன் கைப்பற்றியுள்ளார்.

பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜேஜே பெட்ரிக் இயக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவலை பார்த்தோம்.

இந்த நிலையில் இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யாராயை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாகத் தெரிகிறது.

இவர் தபு நடித்த கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 1998ஆம் ஆண்டில் ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ் படத்தில் பிரசாந்த் ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடித்து இருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Aishwarya Rai in talks for Prashanth’s upcoming film

கார்த்திக் ராஜ் – ரம்யா பாண்டியன் இணையும் ‘முகிலன்’..; சூர்யா படத்துடன் இணையத்தில் மோதல்

கார்த்திக் ராஜ் – ரம்யா பாண்டியன் இணையும் ‘முகிலன்’..; சூர்யா படத்துடன் இணையத்தில் மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MugilanZEE5 தமிழ் ரசிகர்களுக்கு தரமான பொழுதுக்போக்குடைய படைப்புகளை தொடர்ந்து அளித்து வருகிறது. அந்த வகையில், கார்த்திக் ராஜ் (செம்பருத்தி புகழ்) மற்றும் ரம்யா பாண்டியன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ‘முகிலன்’ வெப் சீரிஸ், ZEE5 தனது அடுத்த வெளியீடு என்று அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது.

உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ‘முகிலன்’ வெப் சீரிஸ் கேங்க்ஸ்டர் கதையம்சத்தை கொண்டது.

பல திருப்பங்கள் கொண்ட திரைக்கதையால் மெருகூட்டப்பட்ட ‘முகிலன்’ வெப் சீரிஸில் தன் குடும்பத்திற்காக எதையும் செய்ய துணிபவனாக இருக்கும் ஒரு கேங்க்ஸ்டரின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை காட்டுகிறது.

ராபர்ட் மாஸ்டர், ஆடுகளம் நரேன், ஜூனியர் பாலையா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

‘முகிலன்’ வெப் சீரிஸ்ஸை ஸ்ரீ ராம் ராம் எழுதி இயக்கியுள்ளார். தினேஷ் ரமணா (இன்சடியஸ் மீடியா), பால சுந்தரம் (இன்சிடியஸ் மீடியா), ஜெயச்சந்திரன் (இன்ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்) ஆகியோர் தயாரித்துள்ளனர்

பிரபல இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார்.

ஒளிப்பதிவு – ஃபாரூக் ஜே பாஷா
ஆசிரியர் – தமிழ் அரசன்
கலை – மணிமோழியன் ராமதுரை

“முகிலன்” அக்டோபர் 30 ஆம் தேதி ZEE5ல் அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறது.

இதே நாளில் தான் சூர்யா நடித்துள்ள ‘சூர்ரைப்போற்று’ படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக அமேசானில் ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Ramya Pandian starring Mugilan to clash with Suriya’s Soorarai Pottru

வித்தியாசமான த்ரில்லராக உருவாகும் ‘எறிடா’

வித்தியாசமான த்ரில்லராக உருவாகும் ‘எறிடா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Eridaஒரு சில படத்தின் பெயர்களே, இது எதைப் பற்றிய படம் என்று நம்மை யோசிக்க வைக்கும். அந்தப் படத்தின் போஸ்டர்கள் வித்தியாசமாக அமைந்துவிட்டால், ஏதோ புதிதாகச் சொல்லவுள்ளார்கள் என்று நம்மை இன்னும் ஆர்வம் கொள்ள வைக்கும். அப்படி சமூக வலைதளத்தில் சமீபமாக ட்ரெண்டாகிக் கொண்டிருக்கும் போஸ்டர் தான் ‘எறிடா’. எதற்கு இந்த தலைப்பு, என்ன சொல்ல வருகிறார்கள் என்ற ஆர்வமே இதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது.

மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெற்றி படங்களை இயக்கிய வி.கே.பிரகாஷ், ‘எறிடா’ படத்தின் மூலம் தமிழில் வெற்றி இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். அரோமா சினிமாஸ், குட் கம்பெனி மற்றும் ட்ரெண்ட்ஸ் ஆட்பிலிம் மேக்கர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ‘எறிடா’ படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்கள். சம்யுக்தா மேனன், நாசர், கிஷோர், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. சுமார் 55 நாட்களுக்குள் ஒட்டுமொத்த படத்தையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

கிரேக்க மொழியில் உள்ள வார்த்தை தான் ‘எறிடா’. இதற்கு “காதலில் விழுந்த ஒரு பெண் கடவுளைப் பற்றிய கதை” என்று அர்த்தம். அடுத்த காட்சி என்ன என்பதை யூகிக்க முடியாத வகையில் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லராக இந்தப் படம் உருவாகிறது. இதன் மூலம் பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான த்ரில்லர் கதை தயாராகி வருகிறது என உறுதியாக நம்பலாம். 2021-ம் ஆண்டு வெளியீட்டுக்காக இந்தப் படம் தயாராகி வருகிறது.

‘எறிடா’ படக்குழுவினர் விவரம்:

கதை, திரைக்கதை, இயக்கம் – வி.கே.பிரகாஷ்
தயாரிப்பாளர்கள் – அஜி மிடாயில், அரோமா பாபு
வசனம் – ஒய்.வி.ராஜேஷ்
ஒளிப்பதிவாளர் – எஸ்.லோகநாதன்
எடிட்டர் – சுரேஷ் அர்ஸ்
இசையமைப்பாளர் – அபிஜித் ஸைலநாத்
கலை இயக்குநர் – அஜய் மன்காட்
ஆடை வடிவமைப்பாளர் – லிஜி ப்ரேமன்
பி.ஆர்.ஓ – யுவராஜ்

Director VK Prakash in new film is titled as Erida

More Articles
Follows