*துப்பாக்கி முனை* டீசரை வெளியிட்டார் கௌதம்மேனன்; மணிரத்னம் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

60 வயது மாநிறம் படத்துக்குப் பிறகு கலைப்புலி தாணு தயாரித்து வெளியிடும் படம் ‘துப்பாக்கி முனை’.

இப்படத்தின் முதல் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.

இதனை இயக்குநர் கௌதம் மேனன் இணையதளத்தில் வெளியிட்டார்.

விக்ரம் பிரபு நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ஹன்சிகா நாயகியாக நடித்துள்ளார். வேல ராமமூர்த்தி, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்துள்ளார் விக்ரம் பிரபு.

தினேஷ் செல்வராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். எல்வி முத்து கணேஷ் இசையமைக்க,
புலவர் புலமைப்பித்தன், பா விஜய் பாடல்கள் எழுதியுள்ளனர்.

தயாரிப்பு: கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ். இணைத் தயாரிப்பு: பரந்தாமன், ஏகே நடராஜ்.

இந்த டீசரை பார்த்த டைரக்டர் மணிரத்னம் படக்குழுவினரை வெகுவாக பாராட்யுள்ளார்.

விரைவில் படத்தின் இசை வெளியாகவிருக்கிறது.

Gautham menon released Thuppakki Munai Teaser Maniratnam praised Teaser

https://www.filmistreet.com/video/thuppakki-munai-teaser/

சிவகார்த்திகேயன் வேற லெவல்; 3 நாட்களாகியும் சீமராஜா-வுக்கு சிறப்பு காட்சிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரெமோ மற்றும் வேலைக்காரன் படங்களுக்கு பிறகு ஆர். டி. ராஜா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் சீமராஜா.

இப்படத்தை சிவாவின் ஆஸ்தான் இயக்குனர் பொன்ராம் இயக்க, இமான் இசையமைத்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படம் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி ரிலீசானது.

ஏ சென்டரில் சில நெக்ட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் பி அண்ட் சி சென்டர்களில் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றுள்ளது.

ஜாலியாகும் செல்லும் இப்படத்தை ஏராளமான குடும்பத்தினர் வந்த பார்த்து செல்கின்றனர்.

இப்படம் வெளியாகி 3 நாட்கள் ஆகிவிட்ட போதிலும் இன்றும் அதாவது செப்டம்பர் 16ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு சில தியேட்டர்களில சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது.

இவையில்லாமல் காலை 8 மணிக்கு சிறப்பு காட்சிகளும் திரையிடப்பட்டு வருகிறது.

இதனால் கோலிவுட்டே சிவகார்த்திகேயனை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

மேலும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அவர் வேற லெவல் என தங்கள் உற்சாகத்தை பகிர்ந்து வருகின்றனர்.

Even after 3 days of release SeemaRaja has Midnight and Morning special shows

@RamCinemas and @TPVMultiplex Allotted 1AM show for #Seemaraja!

Ram Muthuram Cinemas‏Verified account @RamCinemas 2h2 hours ago

As per Fans Wish, We are Happy to Announce another #Special #Show for #Nellai #SeemaRaja. Show timing #Tomorrow #Morning 8.00 A.M Do watch it only in @RamCinemas #DolbyAtmos

செப்டம்பர் 21ல் விக்ரமின் சாமி2 மோதும் நான்கு படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாமி ஸ்கொயர்’.

இவர்களுடன் பிரபு, பாபி சிம்ஹா, ஜான் விஜய், இமான் அண்ணாச்சி, ரமேஷ் கண்ணா, டெல்லி கணேஷ், உமா ரியாஸ், சுதா சந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஹரி இயக்கியுள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

தமீன்ஸ் ஃபிலிம்ஸ் சார்பாக ஷிபு தமீன்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி வைரலாகி உள்ள நிலையில் இதன் ரிலீஸை தேதியை அறிவித்துள்ளனர்.

வருகிற செப்டம்பர் 21-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதே நாளில்தான் ‘களவாணி மாப்பிள்ளை’, ‘ராஜா ரங்குஸ்கி’, ‘வண்டி’, ‘ஏகாந்தம்’ ஆகிய படங்களும் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

எனவே இத்தனை படங்களுக்கும் தியேட்டர்களில் கிடைப்பதில் பலத்த போட்டி இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

On 21st October Saamy Square will clash with four movies

ரிலீசுக்கு தியேட்டர் இல்ல ஆனா புரோமோசனுக்கு க்யூ நிக்குது : தரணிதரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பர்மா படத்தின் முமூலம் தமிழ் சினிமாவில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு இயக்குனர் ஆனார் தரணிதரன்.

இவர் தற்போது தயாரித்து இயக்கியுள்ள ராஜா ரங்குஸ்கி படம் வருகிற செப்டம்பர் 21ல் வெளியாகவுள்ளது.

இதில் மெட்ரோ சிரிஷ் மற்றும் சாந்தினி இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படக்குழுவினரின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தரணிதரன் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அவர் பேசும்போது…. இந்த குறுகிய காலத்தில் இயக்கி முடித்துவிட்டேன். ஆனால் வெளியீட்டுக்கு ஒரு வருடமாக காத்திருக்கிறோம்.

காரணம் ரிலீசுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை. டாப் ஹீரோக்கள் படங்களுக்குதான் தியேட்டர் உரிமையாளர்கள் முன்னுரிமை அளிக்கின்றனர்.

படம் ரீலீசுக்கு தியேட்டர் கிடைக்காமல் நாங்கள் இருக்கிறோம். ஆனால் புரோமோசன் குடுங்க.

நாங்க பண்ணி தர்றோம். ட்விட்டரில் டிரெண்ட் ஆகுறோம் என ஒரு கூட்டம் நிற்கிறது. இவர்களிடம் என்ன சொல்வது..?” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் தரணி தரன்.

We are not getting theaters to release But promotion agents in queue says Dharanidharan

மெட்ரோ சிரிஷ் கேட்டதற்காக கதை கேட்காமல் சம்மதம் சொன்ன சாந்தினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெட்ரோ படத்தில் நாயகனாக நடித்து பிரபலமானவர் சிரிஷ். இவர் அடுத்து ஹீரோவாக நடித்துள்ள படம் ‘ராஜா ரங்குஸ்கி’.

இவருடன் சாந்தினி தமிழரசனும் நடித்துள்ளார். இதில் சிரிஷ் கேரக்டர் பெயர் ராஜா. சாந்தினி கேரக்டர் பெயர் ரங்குஸ்கி.

பர்மா படத்தை இயக்கிய தரணிதரன் தான் இப்படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படம் வருகிற செப்டம்பர் 21ல் வெளியாகவுள்ள நிலையில் இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அந்த சந்திப்பில் நாயகன் சிரிஷ் பேசியதாவது…

“இந்தப் படத்தை ஆரம்பிக்கும்போது அப்பாவியான ஒரு முகம் தேவைப்பட்டது. அதற்கு நான் பொருத்தமாக இருந்ததால் நடித்தேன்.

யுவன் சார் இசை தான் இந்தப் படத்துக்கு வேண்டும் என நான் ஆசைப்பட்டேன். எனவே நான், தயாரிப்பாளர், இயக்குநர், மூவரும் அவரைப் சந்தித்தோம். அவர் கதையைக் கேட்டு, உடனே ஓகே சொல்லிவிட்டார்.

இப்படத்தில் முதலில் வேறு ஒரு நடிகைதான் கமிட் ஆனார். ஆனால் அதன் பின்னர் அவர் விலகி விட்டார்.

அதன் பின்னர் என் தோழியான சாந்தினியிடம் கேட்டோம்.

நான் அழைத்ததற்காக கதையே கேட்காமல் நடிக்க வந்தார். என் மீதும், இயக்குநர் மீதும் அவர் வைத்திருந்த நம்பிக்கையை அது காட்டுகிறது. அவர் கேரக்டர் மிக நன்றாக வந்துள்ளது” என்று பேசினார்.

Chandhini committed to Shirishs Raja Ranguski movie without asking Story

Breaking ஜிவி.பிரகாஷ் & ஆதிக்ரவி இணையும் அடுத்த படத்தலைப்பு வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீ.வி.பிரகாஷ், ஆனந்தி, மனீஷா யாதவ் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய படம் ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’.

2015-ம் ஆண்டு ரிலீஸான இப்படத்தை பிட்டு படம் ரேஞ்சுக்கு அனைவரும் திட்டி தீர்த்தார்கள்.

படத்தில் ஏகப்பட்ட இரட்டை அர்த்த வசனங்கள் இருந்ததால் பலத்த எதிர்ப்பும் கிளம்பியது.

அதுவே இந்த படத்துக்கு விளம்பரமாகவும் இது மாபெரும் வெற்றிப் பெற்றது.

இப்படத்தை அடுத்து சிம்பு 3 வேடங்களில் நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தை இயக்கியனார் ஆதிக் ரவிச்சந்திரன். இப்படம் படு தோல்வியை சந்தித்தது.

எனவே தற்போது மீண்டும் ஜிவி. பிரகாஷ் உடன் கூட்டணி அமைத்துள்ளார் ஆதிக்.

இந்தப் படத்துக்கு ‘காதலை தேடி நித்யா நந்தா’ எனத் தலைப்பிட்டு பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

இதில் அமைரா தஸ்தூர் ஹீரோயினாக நடிக்க, சோனியா அகர்வால் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

இப்பட போஸ்டரில் ஜிவி பிரகாஷின் தோற்றத்தை பார்க்கும்போது பேய் லுக்கில் கண்கள் இல்லாமல் வெறித்தனமாக நிற்கிறார்.

இதுவரை 80% சூட்டிங் முடிந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

GV Prakash and Adhik Ravichandrean teams up again for Kadhalai Thedi Nithya Nandha

More Articles
Follows