ஜெய்பீம் Vs பாமக.. : சூர்யாவுக்கு ஆதரவாக பாம்புகளுடன் வந்த பழங்குடியினர்

ஜெய்பீம் Vs பாமக.. : சூர்யாவுக்கு ஆதரவாக பாம்புகளுடன் வந்த பழங்குடியினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தயாரித்து நடித்து அண்மையில் ஓடிடியில் வெளியான ‘ஜெய்பீம்’ படம் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

தமிழக முதல்வர் ஸ்டாலின், நடிகர்கள் கமல் உள்ளிட்ட பலரும் பாராட்டிய நிலையில் வன்னியர் மக்களை இந்த திரைப்படம் காயப்படுத்தி விட்டதாக பாமகவினர் புகார் அளித்து வந்தனர்.

இந்த படத்தின் மையக்கருவான நிஜ ராஜாகன்னுவின் மனைவி பார்வதியை சந்தித்து நடிகர் சூர்யா ரூ 15 லட்சத்திற்கான வங்கி வைப்பு நிதி ஆதாரத்தை அளித்தார். நடிகர் லாரன்ஸ் பார்வதிக்கு வீடு கட்டித் தருவதாக உறுதியளித்துள்ளார்.

வன்னியர் பிரிவை சார்ந்த சிலர் நடிகர் சூர்யாவை உதைத்தால் பணம் தருகிறோம் என்றும் மிரட்டல் விடுத்தனர். எனவே போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தின் வசனகர்த்தா கண்மணி குணசேகரன் தான் சம்பளமாக பெற்ற ரூ. 50000 பணத்தை சூர்யாவுக்கே திருப்பி அனுப்பினார்.

இதனையடுத்து இயக்குனர் ஞானவேல் அவர்கள் படத்தின் காட்சிகளுக்கு நானே பொறுப்பு என வருத்தம் தெரிவித்து கடிதம் அனுப்பினார்.

இவ்வாறாக ஜெய்பீம் படத்திற்கு எதிர்ப்புகளும் ஆதரவுகளும் படத்திற்கு கிடைத்துள்ள நிலையில் மதுரையில் காட்டுநாயக்கன் பழங்குடி இன மக்கள் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக களமிறங்கி உள்ளனர்.

மதுரையில் இன்று ஒன்று கூடிய காட்டுநாயக்கன் பழங்குடி இன மக்கள் சூர்யாவிற்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.

அவர்கள் தங்களில் கைகளில் எலி பாம்புகளுடன் வந்திருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெய்பீம் படத்தில் எங்களை பற்றி ஒரு அடையாளத்தை பதிவு செய்துள்ளார் சூர்யா. இதுவரை எந்த நடிகரும் இதை செய்யவில்லை. யாரும் எங்களை பற்றி பேசியதும் இல்லை.

அவருக்கு எதாவது தீங்கு நேர்ந்தால் அதற்கு காரணமானவர்கள் மீது பாம்பையும் விட தயங்கமாட்டோம் என்று கூறியுள்ளனர்.

மேலும், அவருக்கு ஆதரவாக அவருடன் எப்பவும் உடன் இருப்போம் என்றும் கூறியுள்ளனர்.

Irular people support Suriya’s Jai Bhim issue

விஜய்சேதுபதி சந்தீப்கிஷனுடன் இணையும் கௌதம் மேனன்

விஜய்சேதுபதி சந்தீப்கிஷனுடன் இணையும் கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘புரியாத புதிர்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய கவனிக்கத்தக்க படங்களை இயக்கியவர் ரஞ்சித் ஜெயக்கொடி.

இதனையடுத்து பிந்து மாதவி நடித்த ‘யாருக்கும் அஞ்சேல்’ என்ற படத்தை இயக்கியார். ஆனால் அந்த படம் இன்னும் ரிலீசாகவில்லை.

தற்போது சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ள ‘மைக்கேல்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல் எல் பி இணைந்து ‘மைக்கேல்’ என்ற ,ஆக்சன் எண்டர்டெய்னர் படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதியும் நடித்துள்ளார்.

இப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் வில்லனாக கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இது தொடர்பான தகவலை படக்குழுவினர் இன்று நவம்பர் 22ல் அறிவித்துள்ளனர்.

போஸ்டரில் இரத்தம் தோய்ந்த கையும், கைவிலங்கும் இடம்பெற்றிருந்தது. இது படத்தின் கதாப்பாத்திரங்களைப் பற்றி ரசிகர்களிடத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி, வரவேற்பையும் பெற்றது.

இந்த படத்தை தயாரிப்பாளர்கள் பரத் சௌத்ரி மற்றும் புஷ்கர் ராம்மோகன் ராவ் ஆகியோர் தயாரிக்க, நாராயண் தாஸ் கே நரங் வழங்குகிறார்.

Gauthm Menon and Vijay Sethupathi joins for a new film

‘ஸ்டன்ட்’ சில்வா-சமுத்திரகனி கூட்டணியில் சாய் பல்லவியின் தங்கை

‘ஸ்டன்ட்’ சில்வா-சமுத்திரகனி கூட்டணியில் சாய் பல்லவியின் தங்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமுத்திரக்கனி நடிக்கும் படங்கள் ஆனாலும் அவர் இயக்கும் படங்கள் ஆனாலும் அது குடும்பத்தோடு பார்க்கும் வகையில் இருக்கும்.

இவர் சமீபத்தில் இயக்கி நடித்த ‘விநோதய சித்தம்’ படம் ஓடிடியில் வெளியானாலும் பெண்களின் பேராதரவை பெற்றது.

வித்தியாசமான கதைக்களத்தில் தம்பி ராமையா இதில் நாயகனாக நடித்திருந்தார்.

தற்போது இயக்குனர் சில்வா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள ‘சித்திரைச் செவ்வானம்’ என்ற படம் ஓடிடியில் ரிலீசாவதற்கென்றே தயாராகியுள்ளது.

ஸ்டன்ட் இயக்குனர் சில்வா இந்த படத்தை இயக்கி உள்ளார். சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தை அமிர்தா ஸ்டூடியோவடன் இணைந்து தனது பிக் திங் ஸ்டூடியோ சார்பில் இயக்குனர் விஜய் தயாரித்துள்ளார்.

சமுத்திரகனியுடன், பூஜா கண்ணன், ரீமா கல்லிங்கல் நடித்துள்ளனர்.

இது தந்தை, மகள் பாசத்தை சொல்கிற படமாக உருவாகியுள்ள நிலையில் தந்தையாக சமுத்திரகனியும், மகளாக பூஜா கண்ணனும் நடித்துள்ளனர்.

இந்த பூஜாகண்ணன் வேறு யாருமல்ல.. பிரபல நடிகை சாய் பல்லவியின் தங்கை ஆவார்.

வருகிற டிசம்பர் 3ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் ‘சித்திரைச் செவ்வானம்’ வெளியாகவுள்ளது.

Sai Pallavi sister to make her entry in tamil

கமலுக்கு கொரோனா..; பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தபோகும் பிரபலம் இவரா?

கமலுக்கு கொரோனா..; பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தபோகும் பிரபலம் இவரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மையில் அமெரிக்கா சென்று வந்தார் உலகநாயகன் கமல்ஹாசன்.

இதனையடுத்து அவர் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு பாசிட்டிவ் உறுதியான நிலையில் அவர் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2 வாரங்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறவுள்ளார்.

இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியை வேறு ஒருவர் தொகுத்து வழங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் கமலின் மகள் ஸ்ருதிஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு மற்றொரு காரணமும் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நாகார்ஜுனா தொகுத்து வழங்கினார். அவர் சில நாட்கள் நடத்த முடியாத சூழ்நிலை உருவான போது அப்போதைய மருமகள் நடிகை சமந்தா அந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

தற்போது அந்த பாணி இங்கேயும் கடைப்பிடிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

Who will host bigg boss tamil 5 here after?

ரெண்டு கால விரிக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கனும்….; சர்ச்சையை கிளப்பும் ‘பேச்சுலர்’ பட டிரைலர்

ரெண்டு கால விரிக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கனும்….; சர்ச்சையை கிளப்பும் ‘பேச்சுலர்’ பட டிரைலர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் பேச்சுலர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் ஜிவி. பிரகாஷ். இவரே இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் மூலம் திவ்யபாரதி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

காதலர்களுக்கு இடையேயான அழுத்தமான காதலையும் காமத்தையும் அதிலுள்ள பிரச்சினைகளையும் இந்த படம் பேசவுள்ளது.

இது ஒரு உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸ்ஸ் பிலிம்ஸ் சார்பாக டில்லி பாபு தயாரித்துள்ளார்.

தற்போது சற்றுமுன் இப்படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த ட்ரைலரை கௌதம் வாசுதேவன், பா ரஞ்சித், ஐஸ்வர்யா ராஜேஷ், லோகேஷ் கனகராஜ், விக்னேஷ் சிவன் போன்ற பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்த டிரைலரில்..

இளைஞர்களை சூடேற்றும் காட்சிகளும் வசனங்களும் அதிகம் இடம் பெற்றுள்ளன. எனவே இது சர்ச்சைகளை உருவாக்க வாய்ப்புள்ளது.

அடுத்த மாதம் டிசம்பர் 3ஆம் தேதி பேச்சுலர் படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

GV Prakash in Bachelor trailer creates controversy

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கே அனுமதி.; முடிவை பரிசீலனை செய்ய முதல்வருக்கு சிம்பு பட தயாரிப்பாளர் கோரிக்கை

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கே அனுமதி.; முடிவை பரிசீலனை செய்ய முதல்வருக்கு சிம்பு பட தயாரிப்பாளர் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,

வணக்கம்.

திரைத்துறை வெகுநாட்களாக நலிந்துவிட்டது. படங்களை வீட்டிலிருந்தே பார்க்கும் முறை பிறந்ததிலிருந்து திரையரங்கங்கள் வெறிச்சோடத் துவங்கிவிட்டன.

அதிலிருந்து மீண்டுவர பெரிய படங்களே உதவுகின்றன. அண்ணாத்த மக்களை திரையரங்கிற்கு வரவைத்தது. அம்பது விழுக்காடு இருக்கை ஆக்ரமிப்பு என்ற நிலையை மாற்றி நூறு சதவீத இருக்கை ஆக்ரமிப்பை தந்தது திரைத் துறையினருக்கு நெஞ்சில் பால் வார்த்தது. அனைவரும் தங்களின் அனுமதியை தொழில் செய்யும் வெகுமதியாகப் பார்த்தோம் நன்றியோடு!

ஆனால், இப்போது வேக்சினேசன் செலுத்தினால் மட்டுமே திரையரங்க அனுமதி என்பது அத்தனை திரைத்துறையினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுக்க தடுப்பூசி இன்னும் கட்டாயமாக்கப்படவில்லை.

பதினெட்டு வயதிற்கு கீழே உள்ளவர்களுக்கு இன்னும் தடுப்பூசியே கண்டுபிடிக்கவில்லை.

அவர்கள் பள்ளிகளிலும் பொது இடங்களிலும் சென்று வர அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

உங்கள் ஆட்சியில் வேக்சினேசன் சிறப்பாகவே நடைபெற்று வருகிறது. நோய்த் தொற்றும் கட்டுக்குள் வந்துள்ளது.

முகக் கவசம், சானிடைசர் போன்றவற்றால் தங்களை பாதுகாத்தே வருகின்றனர் மக்கள்.

தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே திரையரங்கங்களில் அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவு திரைத்துறையை வெகுவாகப் பாதிக்கும்.

ஆன்டிராய்டு போன் இல்லாதவர்கள் கூட படத்திற்கு வருவார்கள். அவர்களை சர்டிபிகேட் எடுத்துவரச் சொன்னால் திரையரங்கம் வருவதை அவர்கள் தவிர்ப்பார்கள்.

அதுவும் திரையரங்கம் வந்து திருப்பி அனுப்பினால் அவர்கள் மீண்டும் திரையரங்குகளின் பக்கமே வரமாட்டார்கள்.

தயைகூர்ந்து 18 வயதிற்கு கீழே உள்ளவர்கள் அனுமதிக்கப்படுவது போல விரைவில் தடுப்பூசி போட இருப்பவர்களையும் அனுமதித்து திரைத்துறையை வாழ வைக்க வேண்டுகிறோம்.

விரைந்து முடிவெடுத்து நம் திரையுலகையும்… திரையரங்க அதிபர்களையும் காக்க வேண்டுகிறேன்.

நன்றி.

இவண்

சுரேஷ் காமாட்சி

தயாரிப்பாளர்/இயக்குநர்

22.11.2021:

*மாண்புமிகு தமிழக முதல்வர் உயர்திரு தளபதி மு க ஸ்டாலின் அவர்களின் கனிவான கவனத்திற்கு,:*

அன்பு வணக்கம்.

பதவி ஏற்ற நாள் முதல் பம்பரமாக சுற்றி சுழன்று அனைத்து தரப்பு மக்களுக்கும் நல்லாட்சி வழங்கி எளிமைக்கு எடுத்துக்காட்டாகவும் உழைப்புக்கு உதாரணமாகவும் விளங்கி வருகிறீர்கள்.

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தாங்கள் தொடர்ந்து எடுத்து வரும் அற்புதமான நடவடிக்கைகளுக்கு மிக்க நன்றி.

தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ் இல்லாதவர்களை நேற்று முதல் திரையரங்குகள் உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி வருகின்றன என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு எடுத்து வர விரும்புகிறேன். இதனால் பல திரையரங்குகளில் பார்வையாளர்களே இல்லை எனலாம்.

கொரோனாவை முற்றிலும் ஒழிப்பதற்கான தங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மனமாரப் பாராட்டுகிறோம்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ் இல்லாதவர்கள் திரையரங்குகள் மற்றும் மால்களில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பது குறித்த விழிப்புணர்வை போதுமான அளவில் மக்களிடம் ஏற்படுத்த சிறிது கால அவகாசத்தை வழங்குமாறு தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஏனென்றால், இந்த திடீர் அறிவிப்பின் காரணமாக புதிய திரைப்படங்களின் வசூல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து திரையுலகம் மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில், இதனால் மீண்டும் பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, எனது கோரிக்கையை கனிவுடன் பரிசீலிக்குமாறு மாண்புமிகு முதல்வர் அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். கொரோனாவை ஒழிப்பதற்கான தங்களின் முயற்சிகளுக்கு மனமார்ந்த ஒத்துழைப்பை வழங்க திரையுலகம் உள்ளிட்ட அனைவரும் உறுதி கூறுகிறோம்.

மிக்க நன்றி,

பணிவன்புடன்,

நடிகர் உதயா

Maanaadu producer requets tamil nadu cm

More Articles
Follows