தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொலையுதிர் காலம் பட விழாவில் ராதாரவி பேசும் போது நயன்தாராவின் நடத்தை குறித்து கடுமையாக பேசினார்.
இந்த பேச்சு பெரும் சர்ச்சையானது. இதனையடுத்து நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் திமுக தலைவர் ஸ்டாலிம் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ராதாரவியை தற்காலிகமாக நீக்கியுள்ளார்.
நானே விலகிக் கொள்கிறேன் எனவும் ராதாரவி இன்றைய பேட்டியில் கூறியுள்ளார்.
இந்நிலையில் எந்த விழாவுக்கு வராதா நயன்தாரா தற்போது திடீரென ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
”நான் அறிக்கை கொடுப்பது அரிது. ஏனென்றால் எப்போதும் நான் பேசுவதை விட என் பணி பேசட்டும் என்றே இருக்கிறேன். ஆனால் சில நேரங்கள் சில நடவடிக்கைகள் தேவைப்படுகிறது.
பாதிக்கப்பட்டும் பெண்களுக்காகப் பேசவும் ஒரு விரிவான அறிக்கையை தரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.
முதலில், ராதராவியின் பெண் வெறுப்புப் பேச்சைக் கண்டித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் கூறுவது எனது கடமை. உங்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள் சார்.
ராதாரவி உள்ளிட்ட பெண்களை வெறுக்கும் ஆண்களுக்கு ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அவர்களுக்கு உயிர் கொடுத்ததும் ஒரு பெண் தான்.
பாலின ரீதியான கருத்துகளைச் சொல்லி பெண்களின் நிலையைத் தரம் தாழ்த்துவதன் மூலம், இத்தகைய பாதிக்கப்பட்ட ஆண்கள், ஆண்மையை உணர்கிறார்கள்.
இப்படியான முன் தீர்மானத்தோடு ஒரு பெண்ணை இவர்கள் நடத்துவது குறித்து நான் வருத்தப்படுகிறேன். மேலும், இப்படியான ‘ஆண்மை’ மிகுந்தவர்களின் வீட்டில் இருக்கும் பெண்களுக்காகவும் நான் பச்சாதாபப்படுகிறேன்.
மூத்த நடிகராகவும், இவ்வளவு வேலை அனுபவமும் கொண்ட நடிகர் ராதாரவி இளம் தலைமுறைக்கு ஒரு முன் மாதிரியாக திகழ்ந்திருக்க வேண்டும். அதற்கு மாறாக, பெண் வெறுப்பில் ஒரு முன் மாதிரியாக இருப்பதையே அவர் விரும்பியிருக்கிறார்.
பொதுவாழ்வில் ஒவ்வொரு துறையிலும் பெண்கள் தங்களுக்கென ஒரு இடத்தைப் பிடித்து பெயர்பெற்று வருகின்றனர். ராதாரவி போன்ற நடிகர்கள் வாய்ப்புகளின்றி, துறைக்குப் பொருத்தமின்றி போகும்போது, புகழ் வெளிச்சத்துக்காக சில மலிவான உத்திகளை களமிறக்குகிறார்கள்.
இதில் பெரும் அதிர்ச்சி என்னவென்றால், அவரது ஆணாதிக்கப் பேச்சுகளுக்கு எப்போதும் கைதட்டுகளும், சிரிப்பு சத்தமும் ரசிகர்கள் பக்கத்திலிருந்து தவறாமல் வரும்.
நல்ல எண்ணம் கொண்ட மக்களும், எனது அன்பார்ந்த ரசிகர்களும் ராதாரவி போன்றவர்களின் நடத்தையைக் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
நான் மேற்சொன்னவைகளையும் தாண்டி இந்த அறிக்கையின் மூலம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகவும், குறிப்பாக எனக்கு எதிராகவும் ராதாரவி தெரிவித்த தரக்குறைவான கருத்துகளை வன்மையாகக் கண்டிக்கிறேன், எதிர்க்கிறேன்.
எனக்கு அற்புதமான வாய்ப்புகள் வருமளவும் கடவுள் என்னிடம் கருணை காட்டியுள்ளார். தமிழகத்தின் அன்பார்ந்த சினிமா ரசிகர்கள் எனது நல்ல நடிப்புக்காக வெகுமதி அளித்துள்ளார்கள்.
எனக்கெதிரான எதிர்மறையான கருத்துகளையும், அவமதிப்புகளையும் தாண்டி, என் ரசிகர்களுக்கு அதிகபட்ச பொழுதுபோக்கு தர வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், சீதா, பேய், பெண் தெய்வம், தோழி, மனைவி, காதலி என பன்முகத்தன்மை கொண்ட கதாபாத்திரங்களை நான் தொடர்ந்து ஏற்று நடிப்பேன்.
கடைசியாக, நடிகர் சங்கத்துக்கு எனது பணிவான கேள்வி – உச்ச நீதிமன்றம் சொன்னதைப் போல ஒரு புகார் குழுவை அமைப்பீர்களா? விசாகா குழு வழிகாட்டுதல்களின் படி துறைக்குள் விசாரணையைத் தொடங்குவீர்களா?
இந்த சிறிய எதிர்மறையான காலகட்டத்தில் என்னுடன் மீண்டும் துணை நின்ற, ஆதரவு தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மீண்டும் நன்றி கூறிக்கொள்கிறேன். இப்போதும், எப்போதும் போல கடவுளின் ஆசியுடனும், உங்கள் நிபந்தனையற்ற அன்புடனும் பணிக்குத் திரும்புகிறேன்”.
இவ்வாறு நயன்தாரா தெரிவித்துள்ளார்.
Nayanthara Opens Up on Radha Ravis Sexist Comments
Breaking ராதாரவியே உங்களை பெற்றவளும் பெண்தானே; நயன்தாரா கண்டனம்
தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்த பேச்சு பெரும் சர்ச்சையானது. இதனையடுத்து நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் திமுக தலைவர் ஸ்டாலிம் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ராதாரவியை தற்காலிகமாக நீக்கியுள்ளார்.
நானே விலகிக் கொள்கிறேன் எனவும் ராதாரவி இன்றைய பேட்டியில் கூறியுள்ளார்.
இந்நிலையில் எந்த விழாவுக்கு வராதா நயன்தாரா தற்போது திடீரென ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
”நான் அறிக்கை கொடுப்பது அரிது. ஏனென்றால் எப்போதும் நான் பேசுவதை விட என் பணி பேசட்டும் என்றே இருக்கிறேன். ஆனால் சில நேரங்கள் சில நடவடிக்கைகள் தேவைப்படுகிறது.
பாதிக்கப்பட்டும் பெண்களுக்காகப் பேசவும் ஒரு விரிவான அறிக்கையை தரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.
முதலில், ராதராவியின் பெண் வெறுப்புப் பேச்சைக் கண்டித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் கூறுவது எனது கடமை. உங்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள் சார்.
ராதாரவி உள்ளிட்ட பெண்களை வெறுக்கும் ஆண்களுக்கு ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அவர்களுக்கு உயிர் கொடுத்ததும் ஒரு பெண் தான்.
பாலின ரீதியான கருத்துகளைச் சொல்லி பெண்களின் நிலையைத் தரம் தாழ்த்துவதன் மூலம், இத்தகைய பாதிக்கப்பட்ட ஆண்கள், ஆண்மையை உணர்கிறார்கள்.
இப்படியான முன் தீர்மானத்தோடு ஒரு பெண்ணை இவர்கள் நடத்துவது குறித்து நான் வருத்தப்படுகிறேன். மேலும், இப்படியான ‘ஆண்மை’ மிகுந்தவர்களின் வீட்டில் இருக்கும் பெண்களுக்காகவும் நான் பச்சாதாபப்படுகிறேன்.
மூத்த நடிகராகவும், இவ்வளவு வேலை அனுபவமும் கொண்ட நடிகர் ராதாரவி இளம் தலைமுறைக்கு ஒரு முன் மாதிரியாக திகழ்ந்திருக்க வேண்டும். அதற்கு மாறாக, பெண் வெறுப்பில் ஒரு முன் மாதிரியாக இருப்பதையே அவர் விரும்பியிருக்கிறார்.
பொதுவாழ்வில் ஒவ்வொரு துறையிலும் பெண்கள் தங்களுக்கென ஒரு இடத்தைப் பிடித்து பெயர்பெற்று வருகின்றனர். ராதாரவி போன்ற நடிகர்கள் வாய்ப்புகளின்றி, துறைக்குப் பொருத்தமின்றி போகும்போது, புகழ் வெளிச்சத்துக்காக சில மலிவான உத்திகளை களமிறக்குகிறார்கள்.
இதில் பெரும் அதிர்ச்சி என்னவென்றால், அவரது ஆணாதிக்கப் பேச்சுகளுக்கு எப்போதும் கைதட்டுகளும், சிரிப்பு சத்தமும் ரசிகர்கள் பக்கத்திலிருந்து தவறாமல் வரும்.
நல்ல எண்ணம் கொண்ட மக்களும், எனது அன்பார்ந்த ரசிகர்களும் ராதாரவி போன்றவர்களின் நடத்தையைக் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
நான் மேற்சொன்னவைகளையும் தாண்டி இந்த அறிக்கையின் மூலம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகவும், குறிப்பாக எனக்கு எதிராகவும் ராதாரவி தெரிவித்த தரக்குறைவான கருத்துகளை வன்மையாகக் கண்டிக்கிறேன், எதிர்க்கிறேன்.
எனக்கு அற்புதமான வாய்ப்புகள் வருமளவும் கடவுள் என்னிடம் கருணை காட்டியுள்ளார். தமிழகத்தின் அன்பார்ந்த சினிமா ரசிகர்கள் எனது நல்ல நடிப்புக்காக வெகுமதி அளித்துள்ளார்கள்.
எனக்கெதிரான எதிர்மறையான கருத்துகளையும், அவமதிப்புகளையும் தாண்டி, என் ரசிகர்களுக்கு அதிகபட்ச பொழுதுபோக்கு தர வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், சீதா, பேய், பெண் தெய்வம், தோழி, மனைவி, காதலி என பன்முகத்தன்மை கொண்ட கதாபாத்திரங்களை நான் தொடர்ந்து ஏற்று நடிப்பேன்.
கடைசியாக, நடிகர் சங்கத்துக்கு எனது பணிவான கேள்வி – உச்ச நீதிமன்றம் சொன்னதைப் போல ஒரு புகார் குழுவை அமைப்பீர்களா? விசாகா குழு வழிகாட்டுதல்களின் படி துறைக்குள் விசாரணையைத் தொடங்குவீர்களா?
இந்த சிறிய எதிர்மறையான காலகட்டத்தில் என்னுடன் மீண்டும் துணை நின்ற, ஆதரவு தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மீண்டும் நன்றி கூறிக்கொள்கிறேன். இப்போதும், எப்போதும் போல கடவுளின் ஆசியுடனும், உங்கள் நிபந்தனையற்ற அன்புடனும் பணிக்குத் திரும்புகிறேன்”.
இவ்வாறு நயன்தாரா தெரிவித்துள்ளார்.
Nayanthara Opens Up on Radha Ravis Sexist Comments
‘அஞ்சாம் வேதம்’ அப்டேட் : குடும்பத்தில் நுழையும் மதத்தால் ஏற்படும் குழப்பங்கள்
குறளரசனுக்கு பிறந்த குழந்தை..; பெரியப்பா ஆனார் சிலம்பரசன்.!
சபரீஷ் நந்தா இயக்கத்தில் ரஜினி ரீல் மகன் நடிக்கும் ‘இந்திரா’
டூப் வேண்டாம்.. கேரவன் வேண்டாம்.; நயன்தாரா அர்ப்பணிப்பில் ‘அன்னபூரணி’
40 வயதில் 20 வருட சினிமா.; நயன்தாரா-வின் டாப் 12 IMDb லிஸ்ட்
அன்னபூரணி அவதாரமெடுத்த நயன்தாரா.; டிசம்பர் 1 முதல் மக்களை சந்திக்கிறார்
என்னால முடியல.; சினிமாவை விட்டு விலகும் ‘பிரேமம்’ அல்போன்ஸ் புத்திரன்
தியேட்டர்களில் உங்களைக் கொன்ற ‘இறைவன்’ இப்போ ஓடிடி-யில் வருகிறான்
நயன்தாராவின் 75 வது பட டைட்டில் வெளியீடு.; மீண்டும் ஜெய்க்கு ஜோடியானார்.!
JUST IN நயன்தாராவை கடத்த தெரியாதா.? பத்திரிகையாளர்கள் கேள்விக்கு சீமான் பதிலடி
‘இறைவன்’ மேடையில் விஜய்சேதுபதியிடம் கால்ஷீட் கேட்ட ஜெயம் ரவி
நான் பார்த்த முதல் ஹீரோ ஜெயம் ரவி.. அப்போ எனக்கு 400 ரூபாய் சம்பளம்.. – விஜய்சேதுபதி
Breaking ‘நேர்கொண்ட பார்வை’ ரிலீஸ் தேதி கன்பார்ம்; அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி
தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இப்படத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி பல்வேறு அரசியல் பிரபலங்களும் வாழ்த்தினர்.
தற்போது இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடிக்க தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குனர் வினோத் இயக்கி வருகிறார்.
போனிகபூர் தயாரித்து வரும் இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் அஜித்துடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடிக்க நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்திற்கு ’நேர்கொண்ட பார்வை’ என்று தலைப்பு வைத்து அண்மையில் இதன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.
இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது அறிவித்துள்ளனர்.
வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி இப்படத்தை வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் 10ஆம் தேதி சனிக்கிழமை வருகிறது. பொதுவாக வெள்ளிக்கிழமை அன்று படங்கள் வரும். அல்லது முன்னதாக வியாழக்கிழமையன்று படத்தை வெளியிடுவார்கள். தற்போது முதன்முறையாக சனிக்கிழமை வெளியாவது பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கலாம்.
Official announcement of Ner Konda Paarvai release date is here
நயன்தாராவை தவறாக பேசிய ராதாரவிக்கு நடிகர் சங்கம் கண்டனம்
தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பெறுநர் :
திரு.ராதாரவி அவர்கள்,
எண்.9 1வது தெரு, போயஸ் ரோடு,
தேனாம்பேட்டை,
சென்னை – 600018.
அன்புடையீர் வணக்கம் ..!
சமீபத்தில் நடந்த “கொலையுதிர் காலம்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பெண்களை கொச்சைப்படுத்துவது போல் நீங்கள் பேசிய “இரட்டை அர்த்த வசனங்களை கேட்டு உண்மையிலேயே மனது மிகவும் வருந்துகிறது ..! இதை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாகக்கண்டிக்கிறது..!
இந்த மேடையில் மட்டும் அல்ல, பல காலங்களாக தங்களுடைய இணையதள நேர்காணலிலும், பொது மேடைகளிலும், திரைப்பட விழாக்களிலும் இதுபோல் இரட்டை அர்த்த வசனங்களையும், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள்..! இது ஊடகங்களின் மூலம் உலகெங்கும் பரவி இருக்கிறது ..!
இது ஒட்டுமொத்த திரைத்துறைக்கும், மற்ற நடிகர்களுக்கும், அதில் பங்காற்றக்கூடிய பெண்களுக்கும், ஒரு அவமானமான சூழ்நிலையையும், மனஉளைச்சளையும் ஏற்படுத்தித் தருகிறது என்பதை ஏன் தாங்கள் உணரவில்லை..?
திரைத்துறையில் தங்களது தந்தையாருக்குப் பிறகு தொடர்ச்சியாக ஐம்பது வருடங்கள் நீண்ட அனுபவத்தை கொண்டிருக்கக்கூடிய தாங்கள் தங்களுடைய அனுபவங்களை நல்வழியில் பயன்படுத்தினால் அது வருகின்ற தலைமுறைக்கு வழிகாட்டுதலாக இருக்கும்..!
ஆனால் இதுபோன்ற கொச்சையான, கீழ்த்தரமான பேச்சுக்கள் உங்களுடைய மேன்மையை உயர்த்தாது மட்டுமல்லாமல், திரைத்துறையின் மேல் மக்களுக்கு இருக்கக்கூடிய நம்பிக்கையும் சீரழிக்கும் என்பதை ஏன் உணரவில்லை ..? எது எப்படி இருப்பினும், இனிவரும் காலங்களில் நீங்கள் இதை உணர்ந்து, இதுபோன்ற வக்கிரமான பேச்சைத் தவிர்த்து செயல்படுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம் ..!
அதை தவிர்த்து, இது போன்ற செயல்களில் நீங்கள் தொடர்ந்து செயல்படுவீர்கள் என்றால் “தென்னிந்திய நடிகர் சங்கம் “ திரைத்துறையில் தங்களுக்கு தொழில் ஒத்துழைப்பு தருவது பற்றி, தீவிரமாக முடிவு செய்ய வேண்டி இருக்கும் என்பதை முன்னரே தங்களுக்கு இக்கடிதத்தின் மூலமாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி !
(M. நாசர்)
தலைவர்
Nadigar Sangam Warns Radha Ravi Over Nayanthara Comments
நயன்தாராவை கேவலப்படுத்திய ராதாரவி..; கடுப்பான விக்னேஷ் சிவன்
தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் வழக்கம்போல நயன்தாரா கலந்துக் கொள்ளவில்லை. மேலும் இயக்குனர் சக்ரி டுலெட்டியும் கலந்துக் கொள்ளவில்லை. படத்தயாரிப்பாளர் மதியழகன் கலந்துக் கொண்டார்.
இந்த விழாவில் ராதாரவி பேசும்போது…
முன்னணி நடிகர்களுடன் நயன்தாராவை கம்பேர் செய்ய கூடாது. அவர் சிறந்த நடிகைதான். ஒரு பக்கம் பேயாகவும் இன்னொரு பக்கம் சீதாவாகவும் நடிக்கிறார்.
முன்பெல்லாம் சாமி வேஷம் போட வேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவை தான் தேடுவார்கள். ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் நடிக்கலாம்.
இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களை பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கிறார்கள்.
ராதாரவியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் தன் கண்டனத்தை கடுமையாக தெரிவித்துள்ளார்.
‘ஒரு பாரம்பரியமான குடும்பத்திலிருந்து வந்தவரிடம் பேசிய அருவருப்பான கருத்துகளுக்கு எதிராக யார் நடவடிக்கை எடுப்பார்களோ? யார் எனது கண்டன குரலுக்கு ஆதரவு கொடுப்பார்களோ? மூளையற்ற நபர், தன் மீதான கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இதனை செய்கிறார்.
இதில் வேதனையளிக்கும் விஷயம், அவருடைய கீழ்தரமான கருத்தை அங்கிருந்தவர்கள் கைத்தட்டி, சிரித்து கேட்பது.
இதுதான் ஒரு படத்தை புரமோட் செய்யும் விதம் என்றால் இனி இது போன்ற நிகழ்ச்சிகளில் இருந்து விலகி நிற்பதே நலம் என கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், என்ன நடந்தாலும் அவர் மீது நடிகர் சங்கத்தை சேர்ந்தவர்களோ அல்லது வேறு எந்த சங்கத்தைச் சேர்ந்தவர்களோ நடவடிக்கை எடுக்கப்போவதில்லை. பரிதாப நிலை என்று காட்டமாக பதிவு செய்துள்ளார்.
Vignesh ShivanVerified account @VigneshShivN
Clueless and helpless cos no one will support or do anything or take any action against that filthy piece of shit coming from a legendary family .. he keeps doing this to seek attention! Brainless ! Sad to see audience laughing& clapping for his filthy comments! None of us
None of us had any idea that this event was going to take place for an incomplete film .. the actual producers or directors left the film few years back I guess! Inappropriate event wit unnecessary people sitting and knowing not what to speak ! If this is called promoting a movie
In 2017, Mr.Radha Ravi made a crass insensitive comment about children with disabilities. It is men like Mr.Radha Ravi who perpetuate & glorify the violence against women & children.
In 2018, there was a sexual harassment complaint against Mr.Radha Ravi by a distressed actress, who feared to reveal her identity. He walked scotfree. A little later Mr.Radha Ravi scandalously & insensitively mocked at the #MeToo movement.
Vignesh Shivan condemns Radharavis speech at Kolaiyuthir Kaalam Press Meet
MR ராதாவின் கொள்ளுப்பேரனை மணந்த பார்த்திபன்-சீதா தம்பதியரின் மகள்
தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மணமகனின் பெயர் நரேஷ் கார்த்திக். நடிகர் எம். ஆர். ஆர். வாசுவின் மகள் சத்யா ஜெயச்சந்திரனின் மகன். (நடிகர் எம். ஆர். ராதாவின் கொள்ளுப்பேரன்).
திருமண நிகழ்வில் கலந்துக் கொண்டவர்கள் விவரம் வருமாறு…
நடிகர் ராதா ரவி, திருமதி லதாரஜினிகாந்த், R. B சௌத்ரி, இயக்குனர் எழில், லேனா தமிழ் வாணன், A. P ஸ்ரீதர், SA சந்திரசேகர், சோபா சந்திரசேகர், மாணிக்கம் நாராயணன், K பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், ஈஸ்வரி ராவ், DTR ராஜா, அட்வகேட் ராஜசேகர், நிரோஷா, சாந்தனு பாக்யராஜ், கீர்த்தி சாந்தனு, நடிகர் கார்த்தி, இயக்குனர் விக்ரமன், மயில் சாமி, மோகன்,சித்ரா லக்ஷ்மணன், ஐக் ஹரி, தங்கர் பச்சான், ராதிகா சரத்குமார், R பாண்டியராஜன், பிரித்திவிராஜன், JSK சதிஷ், பானு ப்ரியா, நல்லி குப்புசாமி செட்டியார், சூரி, ஒளிப்பதிவாளர் சுகுமாரன், சத்யஜோதி தியாகராஜன், நடிகை அருணா, இயக்குனர் KS ரவிக்குமார், நடிகை சாரதா, ராஜ ஸ்ரீ, சச்சு, வெந்நீராடை நிர்மலா போன்ற திரையுலக பிரபலங்கள் பலர் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
Parthiban Seethas daughter Abinaya weds Naresh Karthik news updates
ஸ்மார்ட் போன் தரும் வார்னிங்…; “கீ” படம் பாருங்க புரியும்
தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்நிறுவனம் தயாரித்துள்ள வெற்றி படைப்பு “கீ“ இது குளோபல் இன்போடெய்ன்மென்ட் நிறுவனத்தின் 10வது தயாரிப்பாகும்.
இப்படத்தில் கதாநாயகனாக ஜீவா, நாயகியாக நிக்கி கல்ராணி மேலும் இவர்களுடன் அணைகா , R. J. பாலாஜி, பத்ம சூர்யா, ராஜேந்திர பிரசாத், சுகாசினி, மனோ பாலா, மீரா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். கதை திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்கவுள்ளார் காலீஸ்.
இவர் இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவர் ஆவர். விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அபிநந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு நகூரன்.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் ஜீவா பேசியதாவது…
வருடத்திற்கு ஒரு படம் நடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் நிக்கி கல்ராணியை பார்த்து தான் பல படங்கள் பண்ண வேண்டும் என எண்ணம் மனதில் தோன்றியது.
நிக்கி கல்ராணியுடன் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தை மலயாள நடிகர் கோவிந்த் பத்மசூரியா நடித்துள்ளார்.
மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். படத்திற்கு விஷால் அருமையாக இசையமைத்துள்ளார். அருமையான கதையைக் கொண்டது இத்திரைப்படம்.
தற்போதைய டெக்னாலஜியில் வளர்ந்து வரும் பிரச்சனையை கூறும் படமாக அமைந்துள்ளது. சரியான தருணத்தில் கூப்பிட்ட நேரத்தில் வந்து ஒளிபதிவினை மேற்கொண்ட அபிநந்தன் அவர்களுக்கு என் நன்றிகள். சிறப்பான பணியைச் செய்துள்ளார். காலீஸ் சிறந்த இயக்குனர். இதுபோன்ற நிறைய இளைய புதுமுக இயக்குனர்கள் நம் தமிழ் சினிமாவிற்கு தேவை.
இளைய இயக்குனர்கள் வந்தால்தான் புதிய எண்ணங்கள் தோன்றும். புதிய எண்ணங்கள் இருந்ததால் தான் பல பரிமாணங்களில் திரைப்படங்களை தர முடியும்.
இந்த படத்தில் நடித்த ஆர்ஜே பாலாஜி, அணைகா அருமையாக நடித்துள்ளனர். படத்தின் காட்சிகள் மிக பிரமாண்டமாக வந்துள்ளது. படத்தொகுப்பாளர் நாகூரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இறுதியாக இந்த படம் ஏப்ரல் 12ம் தேதி ரிலீஸ் ஆகிறது. உங்கள் அன்பாலும் ஆதரவாலும் படம் வெற்றி பெறும் என நம்புகிறேன்.
நடிகை நிக்கி கல்ராணி பேசியவை…
மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்த படம் வருகிறது என்றே சொல்லலாம். தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அவர்களுக்கும் காலீஸ் அவர்களுக்கும் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். 4, 5 வருடங்களாக இந்த படத்தை ஒரு குழந்தை போல் பாதுகாத்து வந்துள்ளனர்.
ஏப்ரல் 12ம் தேதி படம் வெளியாகிறது இப்படம் மிகப்பெரிய வெற்றியடையும் என முழுமையாக நம்புகிறேன். காலீஸ் ஒரு மிகச் சிறந்த இயக்குனர். ஜீவாவுடன் நான் முதலில் நடித்த படம் இது. ஆனால் கலகலப்பு 2 படம் முதலில் ரிலீஸ் ஆனது.
இதில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். கேமராமேன் அபிநந்தன் ஒளிப்பதிவு மிகப் பிரமாதமாக வந்துள்ளது. உங்கள் அனைவரது ஆதரவாலும் அன்பினாலும் படம் மாபெரும் வெற்றி வெற்றி அடையும் என நம்புகிறேன்.
இயக்குனர் காலிஸ் பேசியவை…
செல்போன்கள் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் இது. ஒரு 4 வயது குழந்தை ஸ்மார்ட் போன் வைத்திருந்தால் அந்த குழந்தை இந்த படம் பார்க்க வேண்டும்.
ஒரு 70 வயது முதியவர் செல்போன் பயன்படுத்தினால் அவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும். நாம் செய்யும் லைக்குகள், நாம் செய்யும் ஷேர்கள் இவற்றால் நடக்கும் பின்னணி என்ன ? என்பதை எடுத்து கூறும் படம்.
இந்த படம் வெளிவர கடைசிவரை உறுதுணையாக இருந்த நடிகர் ஜீவா தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
நிக்கி கல்ராணி ஒரு சின்சியரான நடிகை. அருமையாக நடித்துள்ளார். படப்பிடிப்புக்கு விரைவாகவே வந்து விடுவார்.
அபி நந்தனின் ஒளிப்பதிவு, நகூரனின் படத்தொகுப்பு என அனைவரும் அருமையாக வேலை செய்துள்ளனர். . வில்லனாக நடித்துள்ள பத்ம சூர்யா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஏப்ரல் 12 ஆம் தேதி படம் வெளிவருகிறது உங்களின் அனைவரின் ஆதரவு இருக்கும் என நம்புகிறேன்.
நடிகர் கோவிந்த் பத்ம சூர்யா பேசியவை…
தமிழ் படத்தில் முதன் முதலாக நடித்துள்ளேன். வில்லனாக நடித்து உள்ளேன். வாய்ப்பளித்த இயக்குனர் காலீஸ் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். . ஏப்ரல் 12 ஆம் தேதி இந்தப் படம் உலகமெங்கும் ரிலீஸாகிறது. உங்கள் அனைவரின் ஆதரவாலும் இந்த படம் வெற்றி பெறும் என நம்புகிறேன்.
Kee Movie will be related to Mental health says Director Kalees
Related Articles
Amitabh Bachchan releases teaser video of Kalyan Navratri…
பார்வையற்றவர்களும் காது கேளாதவர்களும் ‘வேட்டையன்’ பார்க்க சிறப்பு சம்பவம்
ஆயுத பூஜையை முடிச்சிட்டு அக்டோபர் 18ல் விமல் & போஸ்…