தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இந்த நாவல் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படமாகிறது.
தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படத்தை படமாக்கவுள்ளனர்.
எனவே அனைத்து மொழிகளில் உள்ள 14 முன்னணி நடிகர்-நடிகைகளை தேர்வு செய்து வருகிறார்.
வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், நந்தினியாக ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிக்க உள்ளனர்.
ஐஸ்வர்யாராய் 2 வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.
பார்த்திபன், ரகுமான், மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் நடிக்கின்றனர்.
மற்றொரு முக்கிய கேரக்டர்களில் பிரபு, நிழல்கள் ரவி ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
கிட்டதட்ட ரூ.700 கோடியில் இரண்டு பாகங்களாக எடுக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
டிசம்பர் மாதம் சூட்டிங் தொடங்குகிறது.
தற்போது நடிகர்களுக்கு அவர்களது கேரக்டர்களுக்கு ஏற்ப பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.