‘மோடியை சந்தித்து பப்ளிசிட்டி தேடாதீங்க விஷால்’ – சுரேஷ் காமாட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் எனவும், ஜல்லிக்கட்டை நடத்திட வேண்டும் எனவும் தமிழக இளைஞர்கள் 3 நாட்களாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில் நான் தனிப்பட்ட முறையில் போராடுகிறேன் என கூறிய விஷால் இன்று டெல்லிக்கு சென்று மோடியை சந்திக்க விருப்பதாக கூறியிருக்கிறார்.

இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் விஷாலுக்கு தன் கண்டனத்தை அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

அறிக்கையில் உள்ளபடியே…

இந்த சமூகம் பல நிலைகளை கடந்து வந்திருக்கிறது.

எங்கள் இனத்தை கொத்துக் கொத்தாய் காவுகொடுத்திருக்கிறோம்.

எங்கள் மீனவர்கள் இரத்தத்தை கடல் அரக்கர்களின் துப்பாக்கிக் குண்டுகள் தினமும் ருசி பார்த்துக்கொண்டே இருக்கிறது.

எங்களின் உரிமைகள் பலதும் பறிக்கப்பட்டுவிட்டது. எங்கள் மொழி சிதைக்கப்படுகிறது. உணர்வுகள் மழுங்கடிப்பட்டுவிட்டது.

எத்தனையோ போராளிகள் தட்டி எழுப்பி தட்டி எழுப்பி இன்று உணர்வுபெற்றிருக்கும் எம் மக்கள் கொழுந்துவிட்டு தீப்பந்தமாய் தற்போது மாறி நிற்கிறார்கள்.

மக்கள் மட்டுமல்ல.. மாணவ இளஞ்சிங்கங்கள் இன்று தங்கள் முழுபலத்தையும் காட்டியிருக்கிறார்கள்.

அய்யா இது எங்கள் போராட்டம். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.

நடுவில் நான் போய் மோடியைப் பார்க்கிறேன் என்று கிளம்புகிறீர்கள். நாளை இது மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக இது இருக்க வேண்டும்.

நான் டில்லியில் கடிதம் கொடுத்தேன். சல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்தது என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அவமானம் எங்களுக்குத் தேவையில்லை.

காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாய் திட்டம் போட்டு நீங்கள் காய் நகர்த்த நினைக்கும் காரிய சாதிப்பு எம் இளைஞர்கள் மத்தியில் வேலைக்காகாது என்று உணர்ந்துகொள்ளுங்கள்.

இன்றுவரை நீங்கள் பீட்டாவில் இருக்கிறீர்கள் என்ற செய்தி உங்கள் கவனத்திற்கு வரவேயில்லையா? இல்லை அதை மறுப்பதற்கு நீங்கள் கூப்பிட்டதும் ஓடோடி வரும் மீடியா கிடைக்கவில்லையா?

இன்று சந்திப்பில் சொல்லிய அனைத்தையும் ஆறு மாசத்திற்கு முன்பே சொல்லியிருக்கலாமே? எம் மக்கள் திரண்டதைக் கண்டதும் பயம் வந்து பேட்டிகொடுத்துவிட்டீர்கள்.

சரி இப்போவாவது சொன்னீர்களே.. இனி உங்களைப் போன்ற இரட்டை வேட நாடகமாடிகளின் ஆதரவு தேவையில்லை.

நீங்கள் யாராகயிருந்தாலும் அதை நாங்கள் இனவேறுபாடு பார்க்காமல் இந்த நிலத்தில் நடிகர் என்ற மரியாதையை தந்திருக்கிறோம். அதை நல்ல படங்களில் நடித்து நடிகர் சங்க வேலைகளை கவனித்து நகருங்கள். உங்கள் வேலை அதுமட்டும்தான்.

எங்கள் மக்களின் புரட்சியிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது இது எதைக்கட்டி இறக்கினாலும் அமைதியாய் அலையோடு நிறுத்திக்கொள்ளும் ஆழ்கடல் அல்ல.

அமைதியை உடைத்து சுனாமியாக மாறும் சீற்றமும் கொண்டவர்கள் என்பதைப் புரிந்துகொண்டு ஒரு ஓரமாய் போய் நின்று வேடிக்கைப் பாருங்கள்.

இனி எங்கள் தேவைகளை நாங்களே போராடிப் பெற்றுக்கொள்வோம். நீங்கள் இந்த போராட்டத்தை வைத்து பப்ளிசிட்டி பிழைப்பு நடத்த வேண்டாம்.

மீடியா நண்பர்களே.. எதற்கெடுத்தாலும் விஷால் கூப்பிட்டாருன்னு ஓடாதீங்க. அவர் என்ன முதல்வரா இல்லை மக்கள் பிரதிநிதியா?

அவர் ஒரு நடிகர் சங்க செயலாளர் அவ்வளவுதான். அவர் நடிகர் சங்கத்தைப் பற்றிப் பேசினால் எடுத்து கொட்டை எழுத்தில் போடுங்கள்.

நாங்கள் ஒன்றும் சொல்லப் போவதில்லை. எங்கள் உரிமைகளுக்கான போராட்டத்தைப் பற்றி அவரிடம் தயவுசெய்து கேட்காதீர்கள். அவர் கூப்பிட்டுப் பேசினாலும் போடாதீர்கள். அவருக்கு பேட்டியளிக்க என்ன தகுதி இருக்கிறது என்று கேளுங்கள்.

இன்னமும் என் சமூகத்தை நேசித்து ஆளும் தகுதியுள்ளவர்களின் பேச்சை எடுத்துப் போடுங்கள். இல்லையேல் மக்கள் அவர்களே ஒரு மீடியாவாக மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை.

இன்றைய சல்லிக்கட்டு தமிழர்களின் ஒற்றுமையை பறைசாற்றியிருக்கிறது.

அது திரு. விஷால் அவர்களே, இந்த சல்லிக்கட்டுப் போராட்டம் உங்களைப் போன்ற விலங்கு நேசிகளை பதட்டமடையச் செய்திருக்கிறது என்ற உண்மையை இதன்மூலம் தெரிந்துகொண்டிருக்கிறோம்.

நீங்கள் மட்டுமல்ல. இந்த தேசமே மக்கள் புரட்சி என்னவென்று பார்த்துக் கொண்டிருக்கிறது. மக்கள் புரட்சி ஒருபோதும் தோற்றதே இல்லை. புரிந்து உங்கள் தகுதி பார்த்து பேசுவதோ பேட்டிக்கொடுப்பதோ இருக்கட்டும்.

மற்றவை எம் இளைஞர்கள் கையிலும் மாணவர்கள்
கையிலும் இருக்கிறது. அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

நன்றி!
சுரேஷ் காமாட்சி, திரைப்படத் தயாரிப்பாளர்

‘பீட்டா’வுக்கு பதிலடி கொடுக்க ‘சிங்கம்’ போட்ட ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடித்துள்ள சி3 படம் வருகிற ஜனவரி 26ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது.

எனவே, இதன் புரமோஷன்களில் ஈடுப்பட்டு வருகிறார் சூர்யா.

அப்போது, ஜல்லிக்கட்டை ஆதரித்தும் போராடும் மாணவர்களை பற்றியும் பேசியிருந்தார்.

இதை திசை திருப்பும் விதமாக படத்தின் விளம்பரத்திற்காக சூர்யா இப்படி செய்கிறார் என்ற குற்றச்சாட்டை கிளப்பியது பீட்டா.

இந்நிலையில் ஜல்லிக்கட்டை ஆதரிப்பதறக்காக இன்று நெல்லை மற்றும் மதுரையில் நடக்கவிருந்த இப்படத்தின் புரமோஷன்களை ரத்து செய்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.

Studiogreen ‏@StudioGreen2
We cancel the #Si3 promotion campaign to Tirunelveli & Madurai to show our support over Jallikattu. #SaveOurCultureJALLIKATTU @Suriya_offl

S3 Team cancelled promotions to support Jallikattu

ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் லாரன்ஸ்-சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜல்லிக்கட்டு நடத்திட வேண்டும் தமிழக இளைஞர்கள் தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

சென்னை மெரினாவில் இதற்கான போராட்டம் விடிய விடிய இரண்டு நாட்களாக நடந்து வருகிறது.

இந்நிலையில் நடிகர்கள் லாரன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் நேரிடையாக போராட்டக்களத்திற்கு சென்று தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்களுக்காக ரூ. 1 கோடியை தருகிறேன் என லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் திரையுலகைச் சார்ந்த பலரும் போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

Lawrence and Sivakarthikeyan participated in Jallikattu Protest

‘சிங்கம்’ புரமோஷனுக்காக ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறார் சூர்யா – பீட்டா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜல்லிக்கட்டை தடை செய்ய முக்கிய காரணமான அமைப்பு பீட்டா.

எனவே இந்த அமைப்பின் மீது ஒட்டு மொத்த தமிழகமே கொந்தளிப்பில் உள்ளது.

இதனிடையில் சிங்கம் பட புரமோஷனில் ஈடுப்பட்டு இருக்கும் சூர்யா, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசி வருகிறார்.

மேலும் இது தொடர்பாக அறிக்கையை வெளியிட்டு இருநதார்.

இந்நிலையில், S3 படத்தின் புரொமோஷனுக்காக ஜல்லிக்கட்டை பயன்படுத்துவதாக கூறியுள்ளனர்.

ஜல்லிக்கட்டால் பல மாடுகளும், மக்களும் இறந்துள்ளனர்.

ஒரு பட புரொமோஷனுக்காக இதை பயன்படுத்துவது மிகவும் மோசமான செயல் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

Suriya supports jallikattu to promote his singam movie says PETA

இதோ அந்த அறிக்கை…

 

 

“ஜல்லிக்கட்டுக்கான இளைஞர்களின் போராட்டம் பெருமையே” – நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கி, பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதற்கு ஆதரவு அளிப்பதாக நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது…

ஜல்லிக்கட்டுக்கான இளைய தலைமுறையின் அமைதி போராட்டம் பெருமைப்பட வைக்கிறது

இந்தப் போராட்டம் நமது கலாச்சாரத்துக்கு எதிரான அந்நிய நாட்டு நிறுவனத்துக்கு பலத்தை காட்டும்

தமிழகத்தில் பிறக்காவிட்டாலும் எனக்கு அங்கீகாரம், அடையாளம் தந்தது தமிழ்மண்ணும், மக்களும்தான்.” என்று தெரிவித்துள்ளார்.

Nayanthara statement to support Jallikattu

முதல்வர் பேசட்டும்; முடிவு பண்றோம்… ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜல்லிக்கட்டை எதிர்க்கும் பீட்டா அமைப்பை தடை செய்யவும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நிரந்தரமாக நடத்திட வேண்டும் என தமிழக முழுவதும் உள்ள இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களுடன் போலீசார் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் ஒன்றிணைந்து கலையாமல் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அமைச்சர்கள் மீன்வளத்துறை ஜெயக்குமார் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் இருவரும் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

இளைஞர்களுடன் இணைந்து தமிழகம் அரசு போராடும்.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர தமிழக அரசு அழுத்தம் கொடுக்கும்.

இதற்காக ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை சந்தித்து பேசுவோம். என்றனர்.

முதலமைச்சர் கொடுக்கும் அறிக்கையை பொறுத்து போராட்டத்தின் அடுத்த கட்ட முடிவு இருக்கும் என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Jallikattu supporters waiting for TN chief Ministers statement

More Articles
Follows