சன்னிலியோன் பற்றிய உங்கள் கற்பனையை ‘கொட்டேஷன் கேங்’ மாற்றும்.. – ப்ரியாமணி

சன்னிலியோன் பற்றிய உங்கள் கற்பனையை ‘கொட்டேஷன் கேங்’ மாற்றும்.. – ப்ரியாமணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன்னிலியோன் பற்றிய உங்கள் கற்பனையை ‘கொட்டேஷன் கேங்’ மாற்றும்.. – ப்ரியாமணி

’கொட்டேஷன் கேங்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!*

ஃபிலிம்னாட்டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், இயக்குநர் விவேக்குமார் கண்ணன் இயக்கத்தில், நடிகர்கள் ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், ப்ரியாமணி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘கொட்டேஷன் கேங்’. அடுத்த மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

மேக்கப் ஆர்டிஸ்ட் தசரதன், “இந்தப் படத்தில் எனக்கு மேக்கப்பில் அதிக வேலை இருந்தது. ப்ரியாமணி உட்பட அனைவருமே கஷ்டப்பட்டுதான் வேலை செய்திருக்கிறோம். படத்தை தியேட்டரில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

ஸ்டண்ட் மாஸ்டர் ஓம் பிரகாஷ், “காஷ்மீரில் நிறைய ஸ்டண்ட் செய்தோம். சன்னி மேடம், ப்ரியாமணி மேடம் இருவரும் ரிஸ்க்கான ஸ்டண்ட்டை மழையில் ஒரே டேக்கில் டூப் இல்லாமல் ஓகே செய்தார்கள். இதுபோல பல ரிஸ்க்கான காட்சிகள் இருக்கிறது. ‘யாத்திசை’ படத்துக்குப் பிறகு வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விவேக், தயாரிப்பாளர் காயத்ரிக்கு நன்றி”.

எடிட்டர் வெங்கட்ராமன், “எடிட்டாக இந்தப் படம் நிறைய வெர்ஷன் பார்த்தோம். மற்ற தொழில்நுட்ப கலைஞர்களைப் போலவே எனக்கும் நிறைய வேலை இருந்தது. உங்கள் அனைவரது ஆதரவும் வேண்டும்”.

ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாதன், “வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநருக்கு நன்றி. ஜாக்கி ஷெராப் போன்ற லெஜெண்ட்ஸூடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. ப்ரியாமணி, சன்னி லியோன் இருவரும் சிங்கிள் டேக்கில் ஸ்டண்ட் அசத்தி விட்டார்கள்”.

நடிகை அக்‌ஷயா, “ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், ப்ரியாமணி என சீனியர் நடிகர்கள் எல்லோருமே எங்களிடம் அவ்வளவு அன்பாக நடந்து கொண்டார்கள். படத்தில் ப்ரியாமணி எனக்கு நடிப்பதற்கான ஸ்பேஸ் கொடுத்தார். அது பெரிய விஷயம்! படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவைக் கொடுங்கள்”.

பாடலாசிரியர் அருண் பாரதி, “இயக்குநரை இங்கேதான் முதல்முறையாக பார்க்கிறேன். டிரம்ஸ் சிவமணி சார்தான் எனக்கு பாட்டெழுத சொன்னார். படத்தில் நான் எழுதிய அனைத்துப் பாடல்களுமே நன்றாக வந்துள்ளது. இயக்குநருக்கும் பிடித்துள்ளது. படத்தில் பணிபுரிந்தது நல்ல அனுபவம். படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்!”.

நடிகர் பிரதீப், “இயக்குநர் விவேக்கும் நானும் நண்பர்கள். அவர் படம் செய்யும்போது எனக்கு நடிக்க வாய்ப்புக் கொடுத்தார். முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். சீனியர் நடிகர்கள் ப்ரியாமணி, சன்னி லியோனுக்கு நன்றி. அடுத்த மாதம் படம் வெளியாகிறது!”.

நடிகர் அசோக், “படத்தின் இயக்குநர் விவேக், ப்ரியாமணி, சன்னி லியோன் என உடன் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி”.

தயாரிப்பாளர் காயத்ரி சுரேஷ், “எனக்கு தயாரிப்பாளராக வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விவேக்கிற்கு நன்றி. மல்டி ஸ்டார்ஸ் படம் என்றால் நிறைய பிரச்சினைகள் வரும் என்று நினைத்தோம். ஆனால், அதெல்லாம் இல்லாமல் ப்ரியாமணி, சன்னி லியோன், அக்‌ஷயா என எல்லோருமே சிறப்பாக நடித்துக் கொடுத்தார்கள். எல்லோருக்கும் நன்றி”.

இணைத் தயாரிப்பாளர் விவேகானந்தன், “இது தமிழ்ப்படம். ஆனால், இந்திப்படம் போல எடுக்கப்பட்டுள்ளது. நடிகர்கள், டெக்னீஷியன்ஸ் என எல்லோருமே சிறப்பாக வேலை செய்திருக்கிறார்கள். இயக்குநர் பாலாவுக்கு பிறகு இயக்குநர் விவேக்கைதான் சொல்வேன். அந்த அளவுக்கு சிறப்பாக படத்தை எடுத்துள்ளார். படம் நன்றாக வர பிராத்திக்கிறேன்”.

நடிகை ப்ரியாமணி, “இயக்குநர் விவேக்கிற்கு நன்றி. இவர் என்னிடம் சொன்ன முதல் கதை சில காரணங்களால் டேக் ஆஃப் ஆகவில்லை. இரண்டாவது சொன்ன இந்த கதை பிடித்துவிட்டது. என்னுடைய கரியரில் காண்ட்ராக்ட் கில்லர் ரோல் இதுவரை செய்ததில்லை. இயக்குநர் விவேக்கின் சகுந்தலா கதாபாத்திரத்தை நன்றாக நடித்திருக்கிறேன் என நம்புகிறேன். தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோரும் சிறப்பாக பணியாற்றினார்கள். எனக்கும் அக்‌ஷயாவுக்கும்தான் நிறைய காம்பினேஷன் காட்சிகள். அக்‌ஷயா சிறப்பாக செய்திருக்கிறார். சன்னி பற்றி வேறொரு இமேஜ் உங்களுக்கு இருக்கலாம். ஆனால், இந்தப் படத்தில் அவருடைய பத்மா கதாபாத்திரம் உங்கள் எண்ணத்தை மாற்றிவிடும். ஜாக்கி ஷெராப் சாரும் எங்களுக்கு சப்போர்ட்டாக இருந்தார். படம் ஜூலையில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

நடிகை சன்னி லியோன், “இந்தப் படத்தில் எனக்கு நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளது. என்னைப் பற்றிய உங்கள் எண்ணத்தை இந்தப் படம் நிச்சயம் மாற்றும். படம் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்”.

இயக்குநர் விவேக்குமார் கண்ணன், “முதலில் ப்ரியாமணி மேம் வைத்துதான் படத்தை ஆரம்பித்தோம். அடுத்து ஜாக்கி ஷெராப், சன்னி லியோன் என அடுத்தடுத்து வந்தார்கள். காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்துவது எளிதான விஷயம் கிடையாது. கேமரா மேன், ஸ்டண்ட் மாஸ்டர், மேக்கப் ஆர்டிஸ்ட் என எல்லோருமே சிறப்பாக பணி செய்தார்கள். ப்ரியாமணி, சன்னி லியோன், ஜாக்கி ஷெராப், அக்‌ஷயா என எல்லோருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பேபி சாராவுக்கு சிறப்பான கதாபாத்திரம் படத்தில் இருக்கிறது. தியேட்டரில் உங்களுக்கு அந்த அனுபவம் கிடைக்க வேண்டும் என்றுதான் நிறைய வேலை பார்த்திருக்கிறோம். படம் ஜூலையில் பாருங்கள்” என்றார்.

Quotation Gang movie will change image of Sunny Leone

கடைசி நிமிடத்தில் கதை சொல்லி ரக்ஷிதா-வை ஓகே செய்த U R NEXT டைரக்டர்

கடைசி நிமிடத்தில் கதை சொல்லி ரக்ஷிதா-வை ஓகே செய்த U R NEXT டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடைசி நிமிடத்தில் கதை சொல்லி ரக்ஷிதா-வை ஓகே செய்த U R NEXT டைரக்டர்

அறிமுக இயக்குநர் ஷரீஃப் எழுத்து மற்றும் இயக்கத்தில் தயாராகும் படம் ‘யூ ஆர் நெக்ஸ்ட்’. U R NEXT

இத்திரைப்படத்தில், கே.எஸ்.ரவிக்குமார், ரச்சிதா மகாலட்சுமி, உதயா, ஜனனி, தினேஷ், திவ்யா கிருஷ்ணன், அர்ஷத், கே பி ஒய் வினோத், ரஃபி, ‘புல்லட்’ சமி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.

கே ஜி ரத்தீஷ் ஒளிப்பதிவாளராகவும், அஜித் படத்தொகுப்பாளராகவும், டிஜிட்டல் மீடியா மூலமாக பிரபலமான அறிமுக இசையமைப்பாளர் ‘இசை பேட்டை’வசந்த் இசையமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.

வேணு கலை இயக்கத்தையும், ஓம் பிரகாஷ் சண்டைப்பயிற்சியையும், ‘கலைமாமணி’ ஸ்ரீதர் நடனத்தையும் கவனிக்கிறார்கள்.

ஆடை வடிவமைப்பாளராக ஈகா பிரவீனும், தயாரிப்பு நிர்வாகியாக நந்தகுமாரும் இத்திரைப்படத்தில் பணியாற்றுகின்றனர்.

ஐமேக் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்கை ஃபிரேம் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய இரு நிறுவனங்கள் சார்பில் மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி ஆகியோர் தயாரிக்கின்றனர்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் இளைஞர்களைச் சுற்றி நடைபெறும் பல்வேறு சம்பவங்களை ஹாரர் பின்னணி கொண்ட திரைப்படமாக உருவாக்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். உள்ளது.

இத்திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக தமிழ்,கன்னடம்,தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக உள்ளது.

இந்திய சினிமா ரசிகர்களுக்கு இத்திரைப்படத்தின் மூலம் புதுவிதமான அனுபவத்தை வழங்க படக்குழு தயாராகியுள்ளது.

இன்று, படத்தில் நடிக்கும் கே.எஸ் ரவிக்குமார் ரச்சிதா மகாலட்சுமி மற்றும் பல நட்சத்திரங்கள், படக்குழுவினர் முன்னிலையில் இத்திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது.

படத்தின் பூஜை நிறைவுற்றவுடன் முதலாவதாகப் பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்,

“இந்தப்படத்தின் கதையைக் கேட்டவுடன் வித்தியாசமான ஹாரர் கதையாக இருந்தது.என்னுடைய கதாபாத்திரம் எனக்குப் பிடித்திருந்தது.

மேலும் இந்தத்திரைப்படம் இளைஞர்களுக்கான திரைப்படமாக உருவாகிறது. இயக்குநர் ஷரீஃப் இந்தத்திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆகிறார். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்,” என்றார்.

அடுத்ததாகப் பேசிய ரச்சிதா மகாலட்சுமி,

”இந்தப்படம் எனக்கு ஒரு புதிராகவே உள்ளது. கடைசி நிமிடத்தில் படத்தின் கதையைக் கூறினார்கள். கதை பிடித்திருந்ததாலும் படத்தில் நடிக்கும் சிறந்த நட்சத்திரங்களாலும் நடிக்க ஒத்துக் கொண்டேன். படத்தின் கதை ஹாரர் கதையம்சத்தை கொண்டது. உங்கள் அனைவரது எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் திரைப்படமாக இருக்கும்” என்றார்.

பின்னர் பேசிய இயக்குநர் ஷரீஃப்,

யூ ஆர் நெக்ஸ்ட் திரைப்படத்தின் மூலம் நான் தமிழ்த் திரையுலகுக்கு இயக்குநராக அறிமுகம் ஆகின்றேன். என்னையும் என் கதையும் நம்பி இந்தப்படத்தைத் தயாரிக்க ஒப்புக்கொண்ட தயாரிப்பாளர்கள் மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி ஆகிய இருவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல இங்கு வந்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் படத்தில் நடிக்கும் நடிகர்,நடிகைகளுக்கும் ஊடகத்துறையினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் பேசினார்.

Tv Serial fame Rakshitha starrer in U R Next movie

எனக்கு ரசிகைகள் அதிகம்.. – பயில்வான்.; ‘அறம் செய்’ படத்தில் அதிமுகவிக்கு அதிர்ச்சியளிக்கும் திருச்சி சாதனா

எனக்கு ரசிகைகள் அதிகம்.. – பயில்வான்.; ‘அறம் செய்’ படத்தில் அதிமுகவிக்கு அதிர்ச்சியளிக்கும் திருச்சி சாதனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எனக்கு ரசிகைகள் அதிகம்.. – பயில்வான்.; ‘அறம் செய்’ படத்தில் அதிமுகவிக்கு அதிர்ச்சியளிக்கும் திருச்சி சாதனா

“அறம் செய்” திரைப்பட இசை வெளியீட்டு விழா

Thaaragai cinimas தயாரிப்பில் பாலு எஸ் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் “அறம் செய்”. நடிகர் ஜீவா, நடிகைகள் மேகாலி மீனாட்சி, அஞ்சனா கீர்த்தி, பயில்வான் ரங்கநாதன், திருச்சி சாதனா ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், மக்களுக்கான முழுமையான அரசியல் படமாக உருவாகியுள்ளது “அறம் செய்”.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது

இந்நிகழ்வினில்

நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசியதாவது….

இயக்குநர் பாலு எஸ் வைத்தியநாதன் ஒரு நாள் போனில் பேசினார். நான் நடிக்க வேண்டும் என்றார், நான் Youtube ல், பேசுவது பற்றித் தெரியுமா என கேட்டேன், தெரியும் சார், தெரிந்து தான் கூப்பிட்டேன் என்றார். மகிழ்ச்சி என்றேன். இவரிடம் உள்ள நல்ல விசயம் வசனத்தை முதல் நாளே போனில் அனுப்பிவிடுவார், அவர் எழுதின டயலாக்கை அப்படியே சொன்னேன். அப்போதே தெரியும், இந்தப்படம் கண்டிப்பாகச் சர்ச்சையில் சிக்குமெனத் தெரியும். முழுக்க முழுக்க அரசியலில் நடந்த உண்மை சம்பவங்களை எடுத்திருக்கிறார்.. ஆனால் போஸ்ட்ரில் இப்படத்தில் அரசியல் இல்லை எனப் பொய் சொல்லியிருக்கிறார்.

இன்று எனக்கு தமிழ்நாட்டில் பெண் ரசிகைகள் அதிகம் இருக்கிறார்கள். நான் எப்போதும் தவறான தகவலைப் பேசுவதில்லை, என் சமீபத்துப் பதிவுகளைப் பார்த்தால் தெரியும், கள்ளச்சாரயத்தை காச்சுவபவனை தூக்கில் போட வேண்டும் என்று பேசியுள்ளேன். எல்லா மது ஆலைகளையும் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் தான் அவர்கள் எப்படி கள்ளை கொண்டு வருவார்கள். நான் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என எல்லோரையும் விமர்சனம் செய்கிறேன்.

ஆனால் என் சில வீடியோக்களை மட்டும் பார்த்துவிட்டு தவறாக பேசுகிறார்கள். இந்தப்படத்தில் பேசிய தொகையைச் சரியாகத் தந்தார்கள், ஆனால் பாவம் ஜீவாவை ஹிரோ என சொல்லி ஏமாற்றிவிட்டார்கள் என நினைக்கிறேன். ஜீவாவை எனக்கு 35 வருடமாகத் தெரியும், நல்ல நடிகர்.

நான் அரசியல்வாதி கேரக்டர் செய்துள்ளேன், இயக்குநர் ஒரு சிறு அசைவு கூட சரியாக வர வேண்டும் என அடம்பிடித்து எடுப்பார். டயலாக்கை எல்லாம் மாற்றவிடமாட்டார். மிக நன்றாகப் படத்தை எடுத்துள்ளார். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்

திருச்சி சாதனா பேசியதாவது…

எனக்கு மிகச் சந்தோசமாக இருக்கிறது, அறம் செய் இசை விழா பிரம்மாண்டமாக இருக்கிறது. அரசியல் சம்பந்தமான ஒரு படத்தைத் துணிந்து மிகத் தைரியமாக எடுத்திருக்கிறார் இயக்குநர். இயக்குநர் படத்தைப் பற்றி மட்டும் தான் பேச சொன்னார் ஆனால் மற்ற எல்லாத்தையும் பேசி பிரச்சனையாகிவிடும் போல் தெரிகிறது. இந்தப்படத்தில் நான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா கேரக்டரில் நடித்திருக்கிறேன்.

இந்த ரோலில் எல்லோரும் நடிக்க மறுத்துவிட்டார்கள் நீ நடிக்கிறாயா எனக் கேட்டார், எனக்குத் தயக்கமாக இருந்தது. எல்லோரும் அரசியல் பேச வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த படத்தை எடுப்பதாக இயக்குநர் சொன்னார். எனக்குத் தைரியம் கொடுத்து, நடிக்க வைத்தார்.

இந்த படத்திற்காக ஜெயலலிதா அம்மாவின் நடை, உடை, பாவனைகளைப் பார்த்துக் கற்றுக்கொள்ளச் சொன்னார். வீடியோக்கள் பார்த்து கற்றுக் கொண்டு, நடித்திருக்கிறேன். நீங்கள் உங்கள் ஆதரவை இந்த திரைப்படத்திற்குத் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

நடிகை மேகாலி மீனாட்சி பேசியதாவது…

அறம் செய் திரைப்படம், மிக இனிமையான அனுபவம். இந்த படத்தில் மிக நல்லதொரு கேரக்டர் செய்துள்ளேன். பப்ளி கேரக்டர். என்னை நம்பி இந்த கேரகடர் தந்ததற்கு இயக்குநர் பாலு சாருக்கு நன்றி. இயக்குநர் பாலு சார் மிக எனர்ஜி ஆனவர், செட்டில் எப்போதும் பரபரப்பாகவே இருப்பார். எங்களுக்கு மிக அன்பாக எல்லாம் சொல்லித் தருவார். படத்தை மிகச் சிறப்பாக எடுத்து உள்ளார்.

தயாரிப்பாளர் ஸ்வேதா மேடத்திற்கும் நன்றி எங்களையெல்லாம் நன்றாகப் பார்த்துக் கொண்டார். ஜீவா நடிக்கும்போது நல்ல ஒத்துழைப்பு தந்தார். படக்குழ்வினர் மிக உறுதுணையாக இருந்தார்கள். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. அனைவரும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகை அஞ்சனா கீர்த்தி பேசியதாவது…

இந்த விழாவிற்கு வருகை தந்து, எங்களையெல்லாம் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் எனக்கு மிக அழுத்தமான கேரக்டர், ரசிகர்களிடம் ஒன்று நிறையப் பாராட்டுக்கள் வாங்குவேன், அல்லது திட்டு வாங்குவேன் என நினைத்தேன். இயக்குநரிடம் அதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தேன், இயக்குநர் மிக அற்புதமாகப் படத்தை எடுத்துள்ளார். படம் மிக நன்றாக வந்துள்ளது. படத்தில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகர் ஜீவா பேசியதாவது…

பாலு எஸ் வைத்தியநாதன் இந்தப்படத்தின் நாயகன் இயக்குநர் ஒன் மேன் ஆர்மி மாதிரி செயல்பட்டு தன் மனதிலிருந்ததை படமாக எடுத்துள்ளார். மிக இளகிய மனதுக்காரர் நல்ல மனிதர். தயாரிப்பாளர் ஸ்வேதா மேடத்திற்கு நன்றி. ஹீரோயின் மேகாலி நல்ல நடிகை, நன்றாக டான்ஸ் ஆடியுள்ளார், அவருடன் எனக்கு சாங்க் இருக்கிறது எனச் சொல்லிவிட்டு பாலு சார் அவரே தனியாக போய் டான்ஸ் ஆடிவிட்டு வந்துவிட்டார். பரவாயில்லை, மேகாலி மிகத் திறமையான நடிகை, அஞ்சனா கீர்த்தி, அவரும் நன்றாக நடித்துள்ளார். ஜாக்குவார் தங்கம் மிகச் சர்ச்சையான வசனங்கள் பேசி நடித்துள்ளார்.

இயக்குநர் கடைசி வரை கதையே சொல்லவில்லை அவர் சொன்னதைத் தான், எல்லோரும் செய்துள்ளோம். பயில்வான் அண்ணன் நல்ல கேரக்டர் செய்துள்ளார் அவருடன் நடித்தது நல்ல அனுபவம். என்னைப் பற்றி எதுவும் சொல்ல மாட்டேன் என்கிறார் சும்மாவாச்சும் ஏதாவது என்னைப் பற்றிச் சொல்லி விடுங்கள் நன்றாக இருக்கும். வெற்றி அண்ணன் வில்லனாக நடித்திருக்கிறார். நாங்கள் பார்த்தவரைக்கும் சாவித்திரி மேடத்தின் அன்பான அழைப்பில் தான் இந்த விழாவிற்கு வந்தேன். இந்தப்படம் நன்றாக வந்துள்ளது. . படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

ஜாக்குவார் தங்கம் பேசியதாவது…

அறம் செய் மிக நல்ல கருத்து சொல்லும் படம், இயக்குநர் பாலு மிக நன்றாக இயக்கியுள்ளார். பாடல்கள் எல்லாம் நன்றாக உள்ளது. பாடலாசிரியர் சினேகனுக்குத் தேசிய விருது கிடைக்கும் என நம்புகிறேன். படமும் மிக மிக நல்ல கருத்து சொல்கிறது. எல்லோருமே இங்கு நல்லவர்கள் தான், கெட்டவன் அழிய வேண்டும் நல்லது நிலைக்க நிலைக்க வேண்டும் என எல்லோருமே நினைக்கிறோம்.

இன்று அமெரிக்காவில் குடும்பம் என்பதே சிதைந்து அழிந்துவிட்டது, எதற்காக வாழ வேண்டும், குடும்பம், பாசம், எதுவும் இல்லாமல் மனித வாழ்க்கையே இல்லை. தனித்தனி ரூம், தனித்தனி செல்போன், என வாழ ஆரம்பித்துவிட்டோம். எப்படி சாராயம் மிகப்பெரிய கொடுமையோ, அது போல் செல்போன் மிகப்பெரிய கொடுமை, அதை தவிர்க்க வேண்டும். பணம் எல்லாத்தையும் மாற்றி விடாது, எதையும் தந்து விடாது, ஒழுக்கமாக நல்லவனாக இருந்தால் தான் நமக்கு நல்ல வாழ்வு கிடைக்கும்.

இரண்டு ஹீரோயினுக்கும் நன்றாகத் தமிழ் தெரியும், ஆனால் ஏனோ தமிழில் பேசவில்லை, தமிழ்நாட்டில் தமிழில் பேசுங்கள். இந்தப்படம் நன்றாக நல்ல கருத்தைச் சொல்லும் படமாக வந்துள்ளது. உங்கள் ஆதரவைத்தாருங்கள் நன்றி.

இயக்குநர் நடிகர் பாலு எஸ் வைத்தியநாதன் பேசியதாவது…

இது அரசியல் படம் தான் ஆனால் நாங்கள் அரசியல் பேசவில்லை, ஏனென்றால் இந்த படத்தில் நடித்த எல்லோருக்கும் அடுத்த வாழ்க்கை இருக்கிறது. ஜீவா நீட் பற்றி பேசி இருக்கிறார். அஞ்சனா கீர்த்தி அவருடைய கதாபாத்திரத்தின் அரசியல் பேசி இருக்கிறார். இப்படி ஒவ்வொரு கதாபாத்திரமும் அவர்களுக்கான அரசியலைப் பேசி உள்ளார்கள், இந்த படம் அரசியல் படம் தான்.

ஆனால் நாங்கள் பேசவில்லை, அடுத்த படத்தில் நாங்கள் வேறு கதை சொல்வோம். நமக்குத் தேவை ஆட்சி மாற்றம் இல்லை, முழுமையான அரசியல் மாற்றம். இதுதான் இப்படத்தின் திரைக்கதை. இப்படத்தில் நாட்டிலுள்ள அரசியல்வாதிகளையும், தனிநபர்களையும் அரசியல் கட்சியையும் தாக்கி பேசவில்லை, எந்த ஒரு தனி நபரையும் தாக்கி காட்சிகள் வைக்கவில்லை, அப்புறம் எப்படி இது அரசியல் படம் என நீங்கள் கேட்கலாம்.

74 ஆண்டு காலம் மாறி மாறி ஆட்சி செய்த, அரசியல் கட்சிகள் மக்களுக்கு எதிராகச் செய்த செயல்களை இப்படத்தில் நாங்கள் பேசியிருக்கிறோம் அதனால் தான் இது அரசியல் படம். இந்திய அரசியல் சாசனப்படி மக்கள் ஆட்சி எப்படி இருக்க வேண்டும் எனப் பேசி இருக்கிறோம். படத்தைப் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி

Bayilvan Ranganathan at Aram Sei Audio launch

விஜய்ஆண்டனி – சரத்குமார் – சத்யராஜ் இணைந்த படத்திற்கு சென்சார் சர்டிபிகேட்

விஜய்ஆண்டனி – சரத்குமார் – சத்யராஜ் இணைந்த படத்திற்கு சென்சார் சர்டிபிகேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்ஆண்டனி – சரத்குமார் – சத்யராஜ் இணைந்த படத்திற்கு சென்சார் சர்டிபிகேட்

நடிகர் விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது..

நடிகர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகியுள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தை விஜய் மில்டன் எழுதி, ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார்.

இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸின் கமல் போஹ்ரா, டி லலிதா, பி. பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோர் தயாரித்துள்ளனர். படத்திற்கு தற்போது யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதை படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

படத்தில் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ், டாலி தனஞ்செயா, முரளி ஷர்மா, சரண்யா பொன்வண்ணா, ப்ருத்வி அம்பர், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் மற்ற இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, அச்சு ராஜாமணி, ராய் மற்றும் வாகு மசான் ஆகியோர். படத்தொகுப்பை பிரவீன் கே.எல். கையாண்டுள்ளார்.

விஜய் ஆண்டனியின் படங்களில் எப்போதும் அழகான மற்றும் மறக்க முடியாத பாடல்கள் இருக்கும்.

‘மழை பிடிக்காத மனிதன்’ படம் அதன் தலைப்பைப் போலவே மனதைக் கவரும் மெல்லிசை மற்றும் பெப்பி பாடல்கள் என சுவாரஸ்யமான கலவையைக் கொண்டுள்ளது.

இசையமைப்பாளர் ராயின் இசையமைப்பில் படத்தில் இருந்து வெளியான ‘தீரா மழை’ மற்றும் இசையமைப்பாளர் ஹரி டஃபுசியாவின் ’தேடியே போறேன்’ ஆகிய இரண்டு பாடல்களுக்கும் இசை ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ரிலீஸூக்கு தயாராகி வரும் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்..

Mazhai Pidikadha Manithan censored UA

ஊழலுக்கு காரணம் நாம்.. அரசியல்வாதி தனியா செய்ய முடியாது ; ‘இந்தியன் 2’ கமல் பேச்சு

ஊழலுக்கு காரணம் நாம்.. அரசியல்வாதி தனியா செய்ய முடியாது ; ‘இந்தியன் 2’ கமல் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஊழலுக்கு முக்கிய காரணம் நாம் தான்.; ‘இந்தியன் 2’ பிரஸ் மீட்டில் உலகநாயகன் பேச்சு

சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இந்தியன் 2 என்ற பெயரில் உருவாகியுள்ளது.

இந்த படத்தை லைக்கா நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்க ஷங்கர் இயக்க கமல்ஹாசன் நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தியன் 2 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை வடபழனியில் உள்ள பிவிஆர் போரம் மாலில் நடைபெற்றது.. இதில், கமல்ஹாசன், சித்தார்த், அனிருத், இயக்குநர் ஷங்கர், பாபி சிம்ஹா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தியன் 2 டிரைலர் யூடியூபில் இன்று மாலை 7 மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர்.

இதன் பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு படக்குழுவினர் பதில் அளித்தனர்..

அப்போது செய்தியாளர் ஒருவர்…

இதில் ஒரு செய்தியாளர், ஒருவர், 28 வருடத்திற்கு முன் இந்தியன் படம் வந்தது. ஆனால், அப்போதும் அதே ஊழல் நடந்து கொண்டுதான் இருக்கிறது.. இதற்கு காரணம் அரசியல்வாதியா என்று கேட்டார்.

இதற்கு பதில் அளித்த கமல்ஹாசன்..

நாம் இல்லாமல் அரசியல்வாதிகள் ஊழலை தனியாக நடத்திவிட முடியாது. ஊழலுக்கு முக்கியமான காரணம் நாம் தான். இதையும் இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம்.. இனி நீங்கள் படம் பார்த்துவிட்டு பாராட்ட வேண்டும்” என்றார்.

Public is main reason for corruption says Kamal

உண்மையை நிர்வாணத் தன்மையில் காட்டிய ‘அஞ்சாமை’.; அரசியல் தலைவர்கள் பாராட்டு

உண்மையை நிர்வாணத் தன்மையில் காட்டிய ‘அஞ்சாமை’.; அரசியல் தலைவர்கள் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உண்மையை அதன் நிர்வாணத் தன்மையில் காட்டிய ‘அஞ்சாமை’.; அரசியல் தலைவர்கள் பாராட்டு

*“நீட் தேர்வுக்கான ஒரு பிரச்சார யுத்தத்தை ‘அஞ்சாமை’ படம் தொடங்கி வைத்திருக்கிறது”

அஞ்சாமை படத்திற்கு அரசியல் தலைவர்கள் பாராட்டு*

சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்த கூடிய, மாற்றங்களுக்கு விதை போட கூடிய நல்ல படங்களை கொடுத்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் சமீபத்தில் வெளியான படம் ‘அஞ்சாமை’.

திருச்சித்ரம் சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் விதார்த், வாணி போஜன், ரகுமான், கிருத்திக் மோகன், பாலச்சந்திரன் ஐஏஎஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இயக்குநர்கள் மோகன் ராஜா, லிங்குசாமி ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எஸ்.பி.சுப்புராமன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

எப்போதுமே அரசியல் அரங்கில் பரபரப்பான பேசுபொருளாக இருந்து வரும் நீட் தேர்வை மையப்படுத்தி உருவாகியுள்ள முதல் படம் என்பதாலோ என்னவோ படம் வெளியான நாளிலிருந்தே பொதுமக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன் தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாமென தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அரசியல் தலைவர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்தநிலையில் சமீபத்தில் சில அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ‘அஞ்சாமை’ படம் பார்த்துவிட்டு தங்களது பாராட்டுக்களை தெரவித்துள்ளனர்.

*திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறும்போது*..

“நீட் தேர்வு கொடுமைகளை பற்றி விவரிக்க கூடிய, எதார்த்தமான உண்மையான நிகழ்வுகளை கூட்டாமல் குறைக்காமல் சமூகத்தில் நடப்பதை அப்படியே ‘அஞ்சாமை’ திரைப்படத்தில் இரண்டு மணி நேரத்தில் காட்டி இருக்கிறார்கள்.

ஒரு தேர்வு என்பது எந்த அளவு முரட்டுத்தனமாக, சமூக விரோதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கக் கூடிய உள்நோக்கம் கொண்டவர்கள் இன்றைக்கு விடாப்பிடியாக நடத்திக் கொண்டிருப்பதிலே, எத்தனை சூழ்ச்சிகளை கையாளுகிறார்கள் என்பதையெல்லாம் நடைமுறை எதார்த்தமாக கொஞ்சம் கூட மிகைப்படுத்தாமல், தந்தை பெரியாரின் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் உண்மையை அதன் நிர்வாணத் தன்மையில் அப்படியே எடுத்து காட்டி இருக்கிறார்கள்.

சில நேரங்களில் உண்மை கசப்பாக இருக்கும். மற்றவர்களால் செரிமானம் செய்யப்பட முடியாமல் இருக்கும். ஆனால் உண்மை எப்போதும் உண்மையாகத்தான் இருக்க வேண்டுமே தவிர உண்மை கலப்படமாக இருக்க முடியாது என்பதை ‘அஞ்சாமை’ படம் மூலமாக அஞ்சாமல் செய்திருக்கும் தயாரிப்பாளரின் அஞ்சாமையை முதலில் பாராட்ட வேண்டும். அவர் ஒரு மனோ தத்துவ மருத்துவர்.

அந்த வகையில் தன்னுடைய அனுபவங்களையும் நடப்புகளையும் இணைத்து இருக்கிறார். இது வெறும் படம் மட்டுமல்ல.. மாணவர் உலகத்திற்கு மட்டுமல்ல சமூகத்தின் கோணல்களை திருத்தக் கூடிய ஒரு அற்புதமான பாடம்” என்று கூறினார்.

*இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ரா.முத்தரசன் கூறும்போது*…

“அஞ்சாமை என்கிற படத்தின் பெயரே ஒரு சிறப்பு வாய்ந்த பெயர். இன்று நாடு முழுவதும் ஒரு பெரும் விவாதத்தில் இருந்து கொண்டிருப்பது நீட் நுழைவுத் தேர்வு அடுத்ததாக நெட் தேர்வு. எல்லாவற்றையுமே ரத்து பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் ஏற்படும் துன்பங்கள், துயரங்கள் குறிப்பாக தமிழ்நாட்டில் அனிதா தொடங்கி எத்தனை பேர் மடிந்திருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

நிகழ்ந்து கொண்டிருக்கிற சம்பவங்களை, மிக எதார்த்தமான முறையில் படமாக்கி மக்களிடம் காட்டுவதற்கு உள்ள ஒரு துணிச்சலான முயற்சி இது. இந்த படத்தில் அச்சப்படாமல் முதலீடு செய்த தயாரிப்பாளருக்கும் துணிச்சலாக படத்தை இயக்கிய இயக்குனருக்கும் இதில் நடித்த கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். இதில் நடித்தவர்கள் இயல்பாக நடித்திருக்கிறார்கள். அதுதான் இந்த படத்தின் வெற்றியே” என்று கூறினார்.

*காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி சு.திருநாவுக்கரசர் கூறும்போது*…

“இது ஒரு துணிச்சலான தயாரிப்பு. இன்றைக்கு சமூகத்தில் நடக்கக்கூடிய அநீதிகளை தவறுகளை வெளிச்சம் போட்டு சுட்டிக் காட்டும் விதமாக இந்த படம் மிகச்சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கிறது.

நீட் தேர்வால் எப்படி சாதாரண குடும்பங்கள், அதுவும் குறிப்பாக கிராமத்தில் இருக்கும் விவசாய குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர்களில் இருந்து குழந்தைகள் வரை எந்தவிதமான சிரமங்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள், பொருளாதார ரீதியாக என்னென்ன கஷ்டங்களை அவர்கள் அனுபவிக்க வேண்டி இருக்கிறது, நீட் தேர்வுக்கு செல்லும் முன் அதற்காக தயாரிப்பு என்கிற பெயரிலே எப்படி சுரண்டல் நடக்கிறது, அதற்காக சாதாரண குடும்பங்கள் எவ்வளவு கஷ்டங்களை எல்லாம் அனுபவிக்க வேண்டி இருக்கிறது,

பள்ளித் தேர்வில் மிகப்பெரிய வெற்றி பெற்ற பிறகும் கூட நீட் தேர்வில் வெற்றி பெற முடியாமல் போவது என இன்றைக்கு சமுதாயத்தில் என்ன நடக்கிறதோ அதை அப்படியே படம் பிடித்து வெட்ட வெளிச்சமாக காட்டி இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசாங்கம் இந்த படத்தை உற்சாகப்படுத்த வேண்டும். இந்த படத்தை கீழ்மட்ட மக்கள் வரை பார்க்கும் விதமாக அரசே ஏற்பாடு செய்து உதவலாம். நீட் தேர்வுக்கான கஷ்டங்களிலிருந்து எப்படி விடுவது என்பதை திட்டமிடுவதற்கும் அவர்களுக்கு இதுபோன்ற பொருளாதார நஷ்டங்கள் நடக்காமல் தடுப்பதற்கும் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கு இந்த படம் முன்னுதாரண படமாக இருக்கும்” என்று கூறினார்.

*அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் வைகைச்செல்வன் கூறும்போது*….

‘அஞ்சாமை’ திரைப்படம் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக திகழ்கிறது. நீட்டுக்கு எதிராக இந்தியாவிலேயே குரல் கொடுக்கிற மாநிலம் தமிழ்நாடு. அந்த அளவிற்கு நீட்டை வேண்டாம் என மறுதலித்து பிளஸ் டூ தேர்வுகளின் மூலமாகவே மருத்துவ கல்வியை தொடர வேண்டும் என்கிற கருத்தைத் தொடர்ந்து தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ‘அஞ்சாமை’ என்கிற படத்தை மருத்துவர் திருநாவுக்கரசு மற்றும் இயக்குனர் சுப்புராமன் இருவரும் ஒரு சிறந்த கலைப்படைப்பாக தந்திருக்கிறார்கள்.

இவ்வளவு பணம் செலவு செய்து இந்த படத்தை எடுத்திருக்கிறார்களே, இதை யார் பார்ப்பார்கள், போட்ட பணம் திரும்பி வருமா வராதா என ஆயிரம் சந்தேகங்கள் எழுந்து நிலையிலும் கூட பெரியார் சொல்வது போல “கேட்கிறான் கேட்கல.. படிக்கிறான் படிக்கல.. ஆனால் நாம் கடமையை செய்ய வேண்டும்” என்பதற்கு ஏற்ப தன்னுடைய கடமையை செய்ய வேண்டும் என்கிற உயர்ந்த இலக்கோடு இந்த படத்தை தயாரித்திருக்கிறார் மருத்துவர் திருநாவுக்கரசு.

நீட் தேர்வுக்கான ஒரு பிரச்சார யுத்தத்தை இந்த படம் தொடங்கி வைத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஒரு திரைப்படத்தின் மூலம் அழுத்தமான, ஆழமான கருத்துக்களை எடுத்து வைக்க முடியும் என்று நீட்டுக்கு எதிரான முதல் திரைப்படமாக இதை நாம் பார்க்கலாம். அந்த வகையில் நீட் தேர்வை ரத்து செய்யும் அளவிற்கு இந்த படம் கொண்டு செல்லும். இந்த படைப்பின் மூலமாக ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.

*சமூக செயற்பாட்டாளர் திருமுருகன் காந்தி கூறும்போது*…

“’அஞ்சாமை’ படம் தமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம். அந்த காலத்தில் நாம் பார்த்த, கேட்ட செய்திகளை தொகுத்து அந்த செய்திகளுக்கு பின்னால் இருக்கக்கூடிய அரசியல், அந்த நிகழ்வுகளில் வழியாக பாதிக்கப்பட்ட மக்கள், மாணவர்கள் என்று பல தரப்பினருடைய துயரங்களையும் அவர்களுடைய கோரிக்கைகளையும் நியாயங்களையும் தொகுத்து ஒரு சிறந்த திரைப்படமாக இது உருவாக்கப்பட்டு இருக்கிறது. மிகச் சிறந்த வகையில் மக்கள் மனதில் ஆழமாக பதியக்கூடிய ஒரு திரைப்படமாக இந்த அஞ்சாமை உருவாகி இருக்கிறது.

இயக்குநர் சுப்புராமன் மிக கவனமாக இந்த சமூகத்திற்கு பயன்படக்கூடிய வகையில் மட்டும் மட்டுமல்ல, பொழுதுபோக்கிற்காக பார்க்கக் கூடியவர்கள் கூட இன்றைக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும், மாணவர்கள் எதை எதிர் கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஒரு சமூக அக்கறையோடு இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்,

சமூகப் பிரச்சினைகளை பேசுகின்றதால், கருத்துக்களை சொல்கின்ற படமாக இருக்குமோ, ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்காதோ என்பதற்கே இதில் இடம் இல்லை. இப்படியான ஒரு திரைப்படம் பெருமளவில் மக்களிடம் சென்று சேர வேண்டும்.

மக்கள் இந்த படத்தை ஆதரிக்க வேண்டும். தன்னுடைய முதல் படத்தில் இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குனர் சுப்புராமனுக்கும் படத்தை தயாரித்த மருத்துவர் திருநாவுக்கரசு அவர்களுக்கும் எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் தமிழில் மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு இந்தியா முழுவதும் கொண்டு செல்லப்பட வேண்டிய ஒரு திரைப்படமாக ஒரு தரத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது என்கிற வகையில் இது ஒரு மிக மிக முக்கியமான திரைப்படம்” என்று கூறினார்.

Tamilnadu politicians appreciated Anjaamai movie

More Articles
Follows