ரஜினி ரசிகர்கள் டென்ஷன்.; எனர்ஜி அப்டேட் கொடுத்த நெல்சன்

ரஜினி ரசிகர்கள் டென்ஷன்.; எனர்ஜி அப்டேட் கொடுத்த நெல்சன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சுனில், தமன்னா, விநாயகன், ரம்யா கிருஷ்ணன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தில் ரஜினி ஜெயில் வார்டனாக நடிக்கிறார்.

இந்நிலையில், ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பை நடிகர் ரஜினிகாந்த் நிறைவு செய்து விட்டதாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தெரிவித்து உள்ளார்.

சமீபத்தில், நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இதனை தெரிவித்துள்ளார்.

‘ஜெயிலர்’ படத்தின் அப்டேட் நீண்ட நாட்களாக வெளியாகவில்லை. இதனால் ரஜினி ரசிகர்கள் அப்செட்டில் இருந்தனர்.

மேலும், தற்போது இயக்குநர் நெல்சனின் அப்டேட்டால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Rajinikanth completes shooting for ‘Jailer’Confirms Nelson

நண்பேன்டா மொமெண்ட் : சந்தானத்தை இயக்கும் பிரபல காமெடி நடிகர்

நண்பேன்டா மொமெண்ட் : சந்தானத்தை இயக்கும் பிரபல காமெடி நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லொள்ளு சபா நாட்களில் இருந்தே நண்பர்களுக்கு வாய்ப்புகள் கொடுப்பதில் பெயர் பெற்றவர் சந்தானம். அவரது படங்களில் சுவாமிநாதன், ஈஸ்டர், சேசு, மாறன், மனோகர் ஆகியோர் நடித்துள்ளனர். அதேபோன்று சந்தானம் தற்போது நெருங்கிய நண்பரும் நகைச்சுவை நடிகருமான சுகுமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

‘காதல்’ படத்தில் பரத்தின் நண்பனாக சுகுமார் நடித்திருந்தார்.

சுகுமார் இயக்கிய முந்தைய இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் சரியாகப் போகவில்லை என்றாலும், சந்தானத்துடனான அவரது காம்போ அவருக்கு ஒரு திருப்புமுனையை வழங்கக்கூடும் என எதிர்பார்க்கபடுகிறது.

Kadhal Sukumar to direct long time friend Santhanam’s new movie

இந்தியன் 2 படம் குறித்து ஹாட் அப்டேட் வெளியிட்ட இயக்குனர் ஷங்கர் !

இந்தியன் 2 படம் குறித்து ஹாட் அப்டேட் வெளியிட்ட இயக்குனர் ஷங்கர் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பை தைவான் மற்றும் ஜோகன்னஸ்பர்க்கில் இடைவிடாது நடத்தி வருகிறார்.

அவர் இப்போது உலகநாயகனுடன் கைகுலுக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து “இந்த பவர் பேக் அட்டவணைக்கு நன்றி கமல்ஹாசன் சார்.

மே மாதம் மீண்டும் சந்திப்போம்! ‘இந்தியன் 2’ லிருந்து ‘கேம் சேஞ்சர்’ க்கு கிளைமாக்ஸ் க்காக மாறுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

ஷங்கர் தனது இரண்டு படங்கள் குறித்த ஹாட் அப்டேட்களை கொடுத்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Shankar gives hot official updates on ‘Indian 2’

தயாரிப்பாளருக்காக 3 லட்சம் சம்பளத்தை ஆர்யா குறைச்சிக்கிட்டார்.. – ஆதம் பாவா

தயாரிப்பாளருக்காக 3 லட்சம் சம்பளத்தை ஆர்யா குறைச்சிக்கிட்டார்.. – ஆதம் பாவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல நடிகர் சரவணசக்தி இயக்கத்தில் விமல், தன்யா ஹோப் நடித்துள்ள படம் ‘குலசாமி’. இந்த படம் ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாகியுள்ள நிலையில் நேற்று ஏப்ரல் 17ஆம் தேதி இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்த விழாவில் தயாரிப்பாளர் ஆதம்பாவா பேசியதாவது..*

இந்த படத்தின் இயக்குனர் சரவணனை உங்களுக்கு நடிகராக தெரியும் ஆனால் அவர் நடிக்க வருவதற்கு முன்னர் இரண்டு படங்களை இயக்கும்போதே அவருடன் நான் பணி புரிந்துள்ளேன் அதை பற்றி சில விஷயங்களை மட்டும் கூறிக் கொள்கிறேன்.

சுரேஷ் காமாட்சியும் இயக்குனரும் பழைய ஆட்கள் , இருபது வருடங்களுக்கு முன்னர் தண்டாயுதபாணி என்ற படத்தை இயக்கி கொண்டிருந்தார். அது அவரது முதல் படம் எனக்கு உதவி இயக்குனராக முதல் படம்.

சூட்டிங் துவங்குவதற்கு முதல் நாள் படத்தின் நாயகர் அதிக சம்பளம் கேட்கிறார் என்று மாற்றுகின்றனர், அதன் பின் கதாநாயகர் யார் என்று கேட்டால் தயாரிப்பாளரின் தம்பி மகன் என்று சொல்லுகின்றனர், நான் இதற்கு ஒத்துப் போகவில்லை.

பத்து வருடம் ஆனாலும் பரவாயில்லை நாம் வேறு படம் பண்ணிக்கொள்ளலாம் என்று கூறினேன், அதற்கு சரவணன் இந்த படமே எனக்கு பதினைந்து வருடம் கழித்து தான் கிடைத்திருக்கிறது என்று கூறினார்.

அதன் பிறகு நான் அந்த நாயகருடன் பேசினேன்.. அவர் 3 லட்சத்திலிருந்து 1 1/2 லட்சமாக குறைத்துக் கொண்டார், அந்த நாயகர் வேறு யாருமில்லை நம் ஆர்யா தான். ஒரு வழியாக பேசி கஷ்ட பட்டு படத்தை முடித்து விட்டோம்.

படம் வெளியான பின்னர் தினத்தந்தியில் ஒரு விமர்சனம் வருகிறது. “சக்தி சரவணன் கமர்சியல் இயக்குனர்களில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வருவார் ” என்று அதை பல முறை சொல்லி கிண்டலடித்திருக்கிறேன்.

அதன் பிறகு ஒரு அரசியல் கட்சி நடத்தும் ஒருவரை வைத்து படம் இயக்கினார். அதில் கட்சிக்கு தலைவரை பார்க்க வருபவர்களை எல்லாம் நடிக்க வைத்து படத்தை எடுத்தார்.

இது போல பல சம்பவங்கள் அவர் வாழ்வில் நடந்துள்ளது. இந்த குலசாமி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்த்ததும் அவருக்கு போன் செய்து வாழ்த்துகள் கூறினேன்.

உங்களுக்கேற்ற கதையை பிடிதுள்ளீர்கள் கண்டிப்பாக வெற்றிதான் வாழ்த்துகள் என்றேன், படம் வெற்றி பெற வாழ்த்துக்கள், இன்னும் பல படங்கள் இயக்க வேண்டும் , நன்றி.” என்றார்.

குலசாமி

Adham Bava speech at kulasami press meet

எனக்கு ஏழரை சனி.. ஊரைவிட்டு கிளம்ப சொன்னாரு – ‘மாநாடு’ சுரேஷ் காமாட்சி

எனக்கு ஏழரை சனி.. ஊரைவிட்டு கிளம்ப சொன்னாரு – ‘மாநாடு’ சுரேஷ் காமாட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல நடிகர் சரவணசக்தி இயக்கத்தில் விமல், தன்யா ஹோப் நடித்துள்ள படம் ‘குலசாமி’. இந்த படம் ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாகியுள்ள நிலையில் நேற்று ஏப்ரல் 17ஆம் தேதி இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்த விழாவில் ‘மாநாடு’ பட தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி பேசியதாவது

“நானும் இயக்குநர் சரவண சக்தியும் நெருங்கிய நண்பர்கள். சிறு வயது முதலே நண்பர்கள் தான்..

ஒருமுறை ஜோசியரை பார்த்தேன். எனக்கு ஏழரை சனி நடப்பதாகவும் கடல் தாண்டி வெளிநாடு சென்றால் ஏழரை சனி பாதிப்பு இருக்காது என்றார்.

மற்றவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ எனக்கு நம்பிக்கை இருந்தது. எனவே கடல் தாண்டி வெளிநாடு சென்றேன். ஏழரை சனி ஒன்றும் செய்யவில்லை.

மலேசியாவில் ராஜ வாழ்க்கை வாழ்ந்தேன்.. அதன் பின்னர்தான் இங்கு திரும்பினேன். அப்போது பிரேம் பாண்டியன் என்ற தன் பெயரை சரவண சக்தி என்று மாற்றி ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருந்தார் என் நண்பன்.

நல்ல திறமைசாலி பல அற்புதமான கதைகள் அவரிடம் இருக்கிறது. ஆனால் அவருக்கான சரியான வாய்ப்பு இன்னும் அமையவில்லை. அவருக்கு இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வேண்டும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்.” என்றார்.

குலசாமி

Suresh Kamatchi speech at kulasami press meet

விஜய்சேதுபதியால் தான் ‘குலசாமி’ கவனிக்கப்படுகிறார் – சரவண சக்தி

விஜய்சேதுபதியால் தான் ‘குலசாமி’ கவனிக்கப்படுகிறார் – சரவண சக்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MIK Productions Private Limited தயாரிப்பில் விமல் & தான்யா ஹோப் நடிப்பில் விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ள படம் ‘குலசாமி’.

நாயகன் மற்றும் பில்லா பாண்டி படங்களை இயக்கிய குட்டிப்புலி சரவண சக்தி இயக்கியுள்ளார்.

ஏப்ரல் 21 ஆம்தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துக் கொள்ள பத்திரிக்கையாளர் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

இந்த நிகழ்வினில் இயக்குநர் சரவண சக்தி பேசியதாவது…*

இப்படத்திற்காக விஜய் சேதுபதிக்கு முதல் நன்றி. அவர் வசனம் எழுதி தந்ததால் தான் இப்படம் மிகபெரிய அளவில் கவனிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறப்பான காவல் அதிகாரியாக இருந்த ஜாங்கிட் அவர்கள் எங்களுக்காக இப்படத்தில் நடித்திருக்கிறார் அவருக்கு எங்கள் நன்றி.

அமீர் அண்ணன் அவருடைய படங்களை தாண்டி மிகப்பெரிய அன்புள்ள மனிதர் அவர் எனக்காக வந்துள்ளார்.

சுரேஷ் காமாட்சியும் நானும் ஒன்றாக சுற்றியவர்கள் இப்போது பெரிய தயாரிப்பாளர் ஆகியுள்ளார் அவருக்கு நன்றி. மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மிகச்சிறப்பான வசனங்கள் தந்துள்ளார்.

அவரால் படத்திற்கு பெரிய பலம் சேர்ந்துள்ளது. இப்படம் மிகப்பெரிய போராட்டங்களை தாண்டி இந்த இடத்திற்கு வந்துள்ளது.

இந்தப் படத்திற்காக உழைத்த அத்தனை பேருக்கும் இந்நேரத்தில் நன்றிக் கூறிக்கொள்கிறேன். நல்ல கருத்துள்ள படத்தை தந்துள்ளோம் படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

‘Kulasamy’ is noticed because of Vijay Sethupathi says Saravana Shakthi

More Articles
Follows