‘திரும்பி வந்துட்டேன்னு சொல்லு…’ என்பதை செய்து காட்டுவாரா ரஜினி?

‘திரும்பி வந்துட்டேன்னு சொல்லு…’ என்பதை செய்து காட்டுவாரா ரஜினி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali movie latest stillsகாவேரி தண்ணீர் பிரச்சினை தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே போராட்டங்கள் நடைபெறுவதால் பதட்டம் நிலவி வருகிறது.

தன்னுடைய ஆரம்ப காலங்களில் ரஜினிகாந்த், கர்நாடகாவில் இருந்தார் என்பதற்காக ஒவ்வொரு முறையும் இப்பிரச்சினை வரும்போதெல்லாம் ரஜினியின் பெயர் அடிப்படும்.

இந்நிலையில் 25 வருடங்களுக்கு முன்பு ரஜினி கூறியதாக கூறப்படும் பேட்டி இணையங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

அதில்…”தமிழக மக்களுக்கும், என்னுடைய ரசிகர்களுக்கும் ஓர் வேண்டுகோள். காவிரி பிரச்சினை தொடர்பாக தயவு செய்து யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம்.

அப்படி ஈடுபட்டால், அவர்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். ஒருவேளை இது தொடருமானால் எனது ரசிகர் படையுடன் நான் கர்நாடகா செல்வேன்” என்று தெரிவித்திருந்திராம்.

கபாலி படத்தில் நான் 25 வருசத்துக்கு முன்னாடி எப்படி போனேனோ அப்படியே திரும்பி வந்துட்டேன் சொல்லு என்று ரஜினிகாந்த் பன்ச் டயலாக் பேசி நடித்திருப்பார்.

தற்போது இதுபோன்று செய்து காட்டுவாரா? என கேட்கின்றனர்.

‘நடிப்பதற்காகவே வாழ்கிறவர் விக்ரம்’ – VJ அஞ்சனா வாழ்த்து

‘நடிப்பதற்காகவே வாழ்கிறவர் விக்ரம்’ – VJ அஞ்சனா வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram vj anjanaஆனந்த்சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்த ‘இருமுகன்’ கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்கள் வந்தபோதும், பாக்ஸ் ஆபிஸில் இப்படம் பட்டைய கிளப்பி வருகிறது என விநியோகிஸ்தர்களே தெரிவித்துள்ளனர்.

படம் வெளியாகி ஒரு வாரத்தில் ரூ. 70 கோடி வசூலை நெருங்கியுள்து.

இந்நிலையில் இதன் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது.

அப்போது வெற்றிக்கு காரணமாக ரசிகர்களுக்கு நடிகர் விக்ரம், இயக்குனர் ஆனந்த் சங்கர், தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் உள்ளிட்டோர் நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அஞ்சனா பேசும்போது…

“சிலர் பணத்துக்காக வாழ்கிறார்கள். நான் சாப்பிடுவதற்காக வாழ்கிறேன்.

விக்ரம் சார் நடிப்பதற்காகவே வாழ்கிறார்.” என்று பேசினார்.

விஜய்சேதுபதி கதையில்தான் சூர்யா நடிக்கிறாரா?

விஜய்சேதுபதி கதையில்தான் சூர்யா நடிக்கிறாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor suriya 35th movie updatesநானும் ரௌடிதான் படத்தை தொடர்ந்து, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார் என செய்திகள் வந்தன.

இதில் விஜய்சேதுபதியுடன் இரண்டு நாயகிகள் நடிப்பார்கள் எனவும் கூறப்பட்டது.

திடீரென சூர்யா படத்தை இயக்க ஒப்புக் கொண்டார் விக்னேஷ் சிவன்.

இந்நிலையில் விஜய்சேதுபதிக்காக எழுதப்பட்ட கதையில்மாற்றம் செய்துதான், சூர்யா நடிக்கிறார் என்ற செய்திகள் வெளியாகின.

ஆனால் இதை மறுத்துள்ள படக்குழுவினர் சூர்யா 35 படத்தின் கதை முற்றிலும் புதியது. என தெரிவித்துள்ளனர்.

இதன் சூட்டிங் செப்டம்பர் இறுதியில் தொடங்கப்பட உள்ளது.

போக்கிரிக்கு அப்புறம் அதே ஸ்டைலில் பைரவா

போக்கிரிக்கு அப்புறம் அதே ஸ்டைலில் பைரவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pokkiri vijayவிஜய்யின் நடனத்தை போலவே, அவரது டிரெஸ் ஸ்டைலுக்கும் தனி கூட்டம் உள்ளது.

ஷாஜகான் படத்தில் அவரது உடைகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

அதன்பின்னர் திருமலை, போக்கிரி உள்ளிட்ட படங்களில் சட்டையை திறந்து விட்டு நடித்திருப்பார்.

இதில் போக்கிரியில் உள்ளே ஒரு சட்டை அணிந்திருப்பார்.

தற்போது பைரவா படத்திலும், இதுபோன்ற ஸ்டைலில் உடை அணிந்து நடித்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

பரதன் இயக்கும் பைரவா படப்பிடிப்பு தற்போது ராஜமுந்திரியில் நடைபெற்று வருகிறது.

சரித்திர நாயகி ஜெயலலிதா படத்துடன் த்ரிஷாவின் ‘நாயகி’யும் ரிலீஸ்

சரித்திர நாயகி ஜெயலலிதா படத்துடன் த்ரிஷாவின் ‘நாயகி’யும் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jayalalitha trishaநாளை செப்டம்பர் 16ஆம் தேதி ஐந்து தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகிறது. இதில் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் படமும் வெளியாகிறது.

புரட்சித் தலைவியின் நடிப்பில், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ஜெயலலிதா சொந்தக்குரலில் பாடியிருக்கும் படம் சூரிய காந்தி.

கடந்த 1973 ஜூலையில் இப்படம் ரிலீஸானது. இதில் ஜெயலலிதாவுடன் முத்துராமன், மேஜர் சுந்தர்ராஜன், மனோரமா, சோ ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் நாளை டிஜிட்டல் பிரிண்டில் ரிலீஸ் ஆகிறது.

இத்துடன் வெளியாக உள்ள மற்ற படங்களின் பற்றி ஒரு பார்வை….

த்ரிஷாவின் மிரட்டலான நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள படம் நாயகி. இதில் இரண்டு வேடம் ஏற்றுள்ளார்.

ஒரு கேரக்டரில் 20 வயது பெண்ணாக நடித்துள்ளார். தமிழகத்தில் மொத்தம் 200 திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடுகிறது ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்.

இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சமூக அக்கறையுடன் உருவாகியுள்ள படம் பகிரி. நிறைய புதுமுகங்கள் இதில் அறிமுகமாகின்றனர்.

பிரபு ரணவீரன் மற்றும் ஷ்ரவியா ஜோடியாக நடித்துள்ளனர்.

நீண்ட இடைவேளைக்கு பின்னர் கரண் நடிப்பில் வெளியாகவுள்ள படம் உச்சத்துல சிவா. இவருடன் நேகா, ஆடுகளம் நரேன், இளவரசு, கும்கி அஸ்வின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசை வித்யாசாகர்.

இத்துடன் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள சதுரம் 2 படமும் ரிலீஸ் ஆகிறது. இதில் சௌந்தர்யா ரஜினியின் நண்பர் ரியாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் முதல்பாகம் இன்னும் வரவில்லையே என்று கேட்பவர்களுக்கு நாங்க என்ன சொல்றது தெரிலையே பாஸ்.?

கமலை தொடர்ந்து டாப் ஹீரோவுக்கு ஜோடியாகும் கோவை சரளா

கமலை தொடர்ந்து டாப் ஹீரோவுக்கு ஜோடியாகும் கோவை சரளா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kovai saralaதமிழ் சினிமாவில் காமெடி செய்ய, ஏராளமான நடிகர்கள் இருந்தாலும் நடிகைகளில் ஒரு சிலரே உள்ளனர்.

அதில் முக்கியமானவர் கோவை சரளா.

பல படங்களில் காமெடி வேடம் செய்திருந்தாலும், சதிலீலாவதி படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் இவர்.

தற்போது மீண்டும் ஒரு படத்தில்  நாயகியாக  நடிக்கவிருக்கிறாராம். (ஒருவேளை இரண்டாவது நாயகியோ?)

பாலாவின் உதவி இயக்குனர் பிரகாஷ் இயக்கவுள்ள இப்படத்தின் நாயகன் சசிகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிடாரி இசையமைப்பாளர் தர்புகா சிவாவே இப்படத்திற்கும் இசையமைக்கவுள்ளார்.

இதில் சங்கிலி முருகனின் ஜோடியாக சரளா நடிப்பார் என தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 21ஆம் தேதி முதல் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது.

More Articles
Follows