சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி; கோர்ட் தீர்ப்பு முழுவிவரம்

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி; கோர்ட் தீர்ப்பு முழுவிவரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sasikala DA Case Verdictசொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை என தீர்ப்பளித்து உள்ளது.

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்தவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, பெங்களூரு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா அளித்த தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில் கர்நாடக நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

குற்றவாளிகள் அனைவரும் உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.

பெங்களூரு நீதிமன்ற நீதிபதி குன்ஹா உத்தரவின்படி சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.10 கோடி அபராதம் விதித்ததும் நடைமுறைக்கு வந்தது.

குற்றவாளிகள் அனைவரும் உடனே சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவு

குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் முதலமைச்சராகும் வாய்ப்பை இழந்தார் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா.

இதில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால், அவர் இதில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடிப்படையினர் 200க்கும் மேற்பட்டோர் கூவத்தூர் விடுதிக்கு சென்றுள்ளனர்.

Sasikala DA Case Verdict

தமிழகமே எதிர்பார்க்கும் சசிகலா தீர்ப்பு நாளை

தமிழகமே எதிர்பார்க்கும் சசிகலா தீர்ப்பு நாளை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sasikalaஜெயலலிதா மற்றும் சசிகலா மீது சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில் உள்ளது.

ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால் சசிகலா மீதுதான் தற்போது முழுகவனமும் திரும்பியுள்ளது.

இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு நாளை காலை 10.30 மணிக்கு வெளிவரவுள்ளது தற்போது உறுதியாகியுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ் மற்றும் அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கவுள்ளனர்.

இத்தகவல் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Its official; DA case judgemnt tomorrow at 10.30 AM pic.twitter.com/xIrrgNhxOZ
— Arvind Gunasekar (@arvindgunasekar) February 13, 2017

Sasikala unaccounted wealth case supreme court judgement on Valentines Day

ஜிவி.பிரகாஷ்-சாந்தனுவுக்காக காதலர் தினத்தில் ரஜினி ஸ்பெஷல்

ஜிவி.பிரகாஷ்-சாந்தனுவுக்காக காதலர் தினத்தில் ரஜினி ஸ்பெஷல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

spl personபாக்யராஜின் மகன் சாந்தனு, அவரது தந்தை இயக்கத்திலேயே அறிமுகமானார்.

ஆனாலும் அவருக்கு எந்தவொரு படமும் பெரிதாக கைகொடுக்கவில்லை.

இந்நிலையில் அவர் தன் கேரியரில் பெரிதும் நம்பியிருக்கும் படம்தான் முப்பரிமாணம்.

அதிரூபன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிவி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் பாடல்களை ஒரு ஸ்பெஷல் மனிதர் விரைவில் வெளியிடவிருக்கிறார் என்பதை சாந்தனு தெரிவித்திருந்தார்.

அதன்படி, நாளை காதலர் தினத்தில் இதன் பாடல்களை ரஜினிகாந்த் வெளியிட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

Rajinikanth launching Mupparimanam songs on Valentines day

சாந்தனு பாக்யராஜிடம் ஒன்ஸ்மோர் கேட்ட ரஜினி

சாந்தனு பாக்யராஜிடம் ஒன்ஸ்மோர் கேட்ட ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth Shanthanuஅதிரூபன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ், ஸ்ருஷ்டி டாங்கே ஜோடியாக நடித்துள்ள படம் முப்பரிமாணம்.

ஜிவி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலரை ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.

மேலும் இப்படத்தின் டீசர் ரஜினியின் கபாலி படத்துடன் திரையரங்குகளில் திரையிடப்பட்டது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இப்படம் மார்ச் 3ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சற்றுமுன் இப்படக்குவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது சாந்தனு பேசும்போது, இப்படத்தின் பாடல்களை ரஜினி சார் வெளியிட வேண்டி அவரை சந்தித்தோம்.

அப்போது அவர் இந்த டிரைலரை பார்த்தார்.

அவரது ஸ்டைலில் சில நிமிடங்கள் ஆலோசித்த அவர், மீண்டும் ஒன்ஸ்மோர் கேட்டார்.

மறுபடியும் அவர் வேண்டும் என கேட்டது அவரது உள்ளத்தில் இருந்து வந்த வார்த்தை. அந்த தருணம் என்னால் மறக்கமுடியாது” என்றார்.

Rajinikanth asked once more to Shanthanu Bhagyaraj

பைரவா வசூலை சிங்கம்3 முறியடித்ததா..?

பைரவா வசூலை சிங்கம்3 முறியடித்ததா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

singam3 bairavaaஹரி இயக்கி, சூர்யா நடிப்பில் சிங்கம்-3 கடந்த வாரம் பிரமாண்டமாக வெளியானது.

தமிழகம் மற்றும் ஆந்திராவில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

தற்போது சி3 படத்தின் கேரளா பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்கள் தெரிய வந்துள்ளது.

இதில் வார முடிவில் (4 நாள் முடிவில்) ரூ 6 கோடியை வசூல் செய்துள்ளதாம்.

ஆனால், பைரவா ரூ 6.2 கோடியை வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜல்லிக்கட்டு வெற்றியை கொண்டாட லாரன்ஸ் புது ஐடியா

ஜல்லிக்கட்டு வெற்றியை கொண்டாட லாரன்ஸ் புது ஐடியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

lawranceதமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்திட வேண்டுமென தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் அறவழிப் போராட்டம் நடத்தினார்கள்.

உலகத்தையே இப்போராட்டம் திரும்பி பார்க்க வைத்தது.

இதனைத் தொடர்ந்து தமிழத்தில் ஜல்லிக்கட்டு இந்தாண்டு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

ஆனால் போராட்டம் முடிவில் ஏற்பட்ட வன்முறையால் இந்த வெற்றியை யாரும் இதுவரை கொண்டாடவில்லை.

இந்நிலையில் இந்த போராட்டத்தில் பெரிதும் பங்கு கொண்டவர் நடிகர் லாரன்ஸ், வருகிற பிப்ரவரி 18ஆம் தேதி மாலை 7 மணி முதல் 7.15 வரை மெழுகுவர்த்தியோ அல்லது, செல்போன் லைட்டோ, வேறு ஏதேனும் டார்ச்சோ வைத்து நம் மகிழ்ச்சியை வழிப்படும் வகையில் கொண்டாட வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இதை தன் ட்விட்டரில் போட்டோவுடன் பகிர்ந்துள்ளார்.

Raghava Lawrence ‏@offl_Lawrence
மாணவர்கள் இளைஞர்களின் ஏக்கத்தை போக்க சல்லிகட்டை கொண்டாடுவோம்! Feb 18 ஆம் நாள் அன்று மாலை 7 – 7.15 மணி வரை உலகம் முழுவதும் பிரகாசிக்கட்டும்.

More Articles
Follows