அதிதி ராவ் ஹைதாரி உடனான காதலை உறுதிப்படுத்திய நடிகர் சித்தார்த்

அதிதி ராவ் ஹைதாரி உடனான காதலை உறுதிப்படுத்திய நடிகர் சித்தார்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ் ஹைதாரி இருவரும் காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களாக தகவல் பரவிவருகிறது.

கடந்த 2021ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘மகாசமுத்திரம்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

அந்த படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும் போதே இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் டான்ஸ் ஆடுவது, பாட்டுப்பாடுவது, சினிமா நிகழ்ச்சி, முக்கிய நடிகர்களின் திருமணம், வரவேற்பு என பல்வேறு இடங்களுக்கு ஒன்றாகச் சென்று அது குறித்தான புகைப்படங்களை தங்களுடைய இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ‘டக்கர்’ பட புரமோட் செய்யும் விதமாக ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் சித்தார்த் கலந்து கொண்டார்.

அப்போது அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் யாருடன் என்றென்றும் பாடிக்கொண்டே இருக்க ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டார். கேட்டார்.

அதற்கு பதிலளித்த சித்தார்த் “என்னுடைய ஊரில் உள்ள அதிதி தேவ பவா” உடன் என்று கூறினார்.

இதன் மூலம் அதிதி ராவை காதலிப்பதை மறைமுகமாக சித்தார்த் உறுதிப்படுத்தி இருப்பதாக அவர் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Siddharth indirectly confirms his relationship with Aditi Rao Hydari

சூப்பர் ஸ்டார் பதவி : பயப்பட ஆரம்பித்த ரஜினி.; ‘ஜெயிலர் முதல் தலைவர் 170’ வரை ஒரு பார்வை

சூப்பர் ஸ்டார் பதவி : பயப்பட ஆரம்பித்த ரஜினி.; ‘ஜெயிலர் முதல் தலைவர் 170’ வரை ஒரு பார்வை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி படங்கள் என்றாலே அதில் ரஜினி ஒருவர் மட்டும்தான் முன்னிலைப்படுத்தப்படுவார். அவரது படங்களில் எத்தனை மிகப் பெரிய நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் ரஜினி தான் ஹைலைட்டாக இருப்பார்.

அவர் மட்டும்தான் மாஸாக போஸ்டர்களிலும் இடம் பெறுவார். இதுதான் இதுநாள் வரை நடந்து வந்துள்ளது.

ரஜினிகாந்த் இதுவரை 168+க்கு மேற்பட்ட படங்களின் நடித்துள்ளார்.

சமீபத்தில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் ?என்ற சர்ச்சை தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் எழுந்தது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் பயந்துவிட்டாரோ என்ற எண்ணமே தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதற்கு காரணம் ரஜினியின் படங்களில் பிரபல நட்சத்திரங்கள் இணைந்து வருவதை நாம் காண முடிகிறது.

முக்கியமாக ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் மற்றும் பாலிவுட் பிரபல நடிகர் ஜாக்கிசரஃப் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளனர்.

அதுபோல ரஜினிகாந்த் நடித்து வரும் லால் சலாம் படத்தில் அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்தாலும் கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் இணைந்துள்ளார்.

இந்த நிலையில் ‘தலைவர் 170’ படத்தில் ரஜினிகாந்த் நடித்த தயாராகி வருகிறார். இந்தப் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் இணைவதாக வந்த செய்திகளை பார்த்தோம்.

ரஜினிகாந்த் என்ற மிகப்பெரிய பிம்பம் உள்ள நிலையில் மற்ற மொழி நட்சத்திரங்களை தொடர்ந்து இணைத்து வருவதன் நோக்கம் என்ன? ரஜினிகாந்த் பயப்பட ஆரம்பித்து விட்டாரா?

சமீபகாலமாக ரஜினி நடித்த தர்பார் அண்ணாத்த உள்ளிட்ட படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றதால் தன்னுடைய படங்களில் வேறு மொழி நடிகர்களை ரஜினி இணைக்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.!

Rajinikanth afraid of Superstar post?

‘தி கேரளா ஸ்டோரி’ பட இயக்குநரின் அடுத்த படத்தில் ஏ.ஆர். ரஹ்மான்

‘தி கேரளா ஸ்டோரி’ பட இயக்குநரின் அடுத்த படத்தில் ஏ.ஆர். ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’.

கடந்த மே மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிய இப்படம் மக்களிடையே பெரும் சர்ச்சைக்குள்ளானது.

ஆனால், இப்படம் உலகம் முழுவதும் ரூ.238 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை இயக்கிய சுதிப்டோ சென் தற்போது தனது அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார்.

பிரபல தொழில் அதிபரான சுப்ரதா ராயின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கிறார்.

இந்த படத்திற்கு ‘சஹாரா ஸ்ரீ’ (SAHARASRI) என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது

‘சஹாரா ஸ்ரீ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் இயக்குனர் சுதிப்டா சென் இயக்கும், இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

அந்த போஸ்டரில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் பெயரை பார்த்த ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் ஏற்படும் வகையில் உள்ளது.

லெஜெண்ட் ஸ்டூடியோஸ் மற்றும் பென் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.

மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘the kerala story’ movie director next film project music compose to ar rahman

‘தண்டர்காரன்’ பாடலை மிஸ் செய்து விட்டீர்களா.? இப்போது ‘வீரன்’ தரும் விருந்து தியேட்டர்களில்.!

‘தண்டர்காரன்’ பாடலை மிஸ் செய்து விட்டீர்களா.? இப்போது ‘வீரன்’ தரும் விருந்து தியேட்டர்களில்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹிப் ஹாப் ஆதி நடித்து இசையமைத்து ஜூன் 3ம் தேதி வெளியான திரைப்படம் ‘வீரன்’. இந்த படத்தை ‘மரகத நாணயம்’ புகழ் எ ஆர் கே சரவன் இயக்கி இருந்தார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இதில் நாயகியாக ஆதிரா நடித்திருந்தார்.

மேலும் முக்கிய வேடங்களில் வினய், முனீஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த படம் வெளியாகி 10 நாட்களைக் கடந்துள்ள நிலையில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ‘தண்டர்காரன்…’ என்ற பாடல் தற்போது கிளைமாக்ஸ் காட்சிக்கு பிறகு இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடலை திரையரங்குகளில் மிஸ் செய்தவர்கள் இனிமேல் திரையரங்களில் பார்த்து ஆடி பாடி மகிழலாம்..

After fans request Thunderkaaran song from Veeran screening in theatres

‘லியோ’-வில் லிங்க்கான தனுஷ் – விஜய்சேதுபதி பட ஹீரோயின்

‘லியோ’-வில் லிங்க்கான தனுஷ் – விஜய்சேதுபதி பட ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘லியோ’.

இந்த படத்தில் விஜய்யுடன் திரிஷா, மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையிலும் ரசிகர்கள் எதிர்பாராத விதமாக பல நடிகர்களை இணைத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

சமீபத்தில் லியோ படத்தில் ஹாலிவுட் நடிகர் டென்சில் ஸ்மித் இணைந்தார் என்ற செய்திகள் வந்த நிலையில் தற்போது நடிகை மடோனா செபஸ்டின் இந்த படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர் விஜய் சேதுபதியுடன் ‘காதலும் கடந்து போகும்’, ‘கவண்’, மற்றும் தனுஷ் உடன் ‘பவர் பாண்டி’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற ‘பிரேமம்’ படத்திலும் மடோனா நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இறுதியாக ஒரு பாடல் காட்சி ஒன்று பிரம்மாண்டமான செட் அமைத்து படமாக்கி வருகிறது படக்குழு. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மடோனா செபஸ்டின்

Madonna Sebastian joined in Vijay’s Leo

RIGHT IS BACK.. எனக்கு அரண்மனை.. துரைக்கு தலைநகரம்.; பார்ட் 3 குறித்து சுந்தர்.சி பேச்சு

RIGHT IS BACK.. எனக்கு அரண்மனை.. துரைக்கு தலைநகரம்.; பார்ட் 3 குறித்து சுந்தர்.சி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘அருணாச்சலம்’, ‘அன்பே சிவம்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர் என்ற பட்டத்தை பெற்றவர் சுந்தர் சி.

ரஜினி, கமல், கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை இயக்கிய இவர் ஒரு கட்டத்தில் நாயகனாக நடிக்க ஆரம்பித்தார் சுந்தர்.

2006-ம் ஆண்டு ‘தலைநகரம்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் வடிவேலுவின் நாய் சேகர் காமெடி பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ‘தலைநகரம் 2’ என்ற பெயரில் இதன் தொடர்ச்சியான 2வது பாகம் உருவாகியுள்ளது.

‘முகவரி’, ‘தொட்டி ஜெயா’, ‘நேபாளி’, ‘இருட்டு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை இப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் ரைட் என்ற கேரக்டரில் நாயகனாக நடித்துள்ளார் சுந்தர் சி.

இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது.

இதில் கலைப்புலி தாணு, நடிகர்கள் பரத், பிரேம், இயக்குனர்கள் சசி, பேரரசு உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

இந்த ட்ரைலரில் அடிதடி வன்முறை கவர்ச்சி என அனைத்தும் தூக்கலாகவே உள்ளது.

இந்த விழாவில் சுந்தர் சி பேசும் போது..

“நான் பொதுவாக படத்தின் வெற்றி விழாக்களை கொண்டாடுவது இல்லை. படம் பேசட்டும். நான் எதற்காக பேச வேண்டும் என்று நினைப்பேன்.

ஆனால் நானும் துரையும் இதற்கு முன்பு இணைந்த ‘இருட்டு’ படம் ஹிந்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

அது யாருக்கும் தெரியவில்லை. வெற்றி விழா நடத்தி இருந்தால் அனைவருக்கும் தெரிந்திருக்கும். எனவே இனி வெற்றி விழாக்களை கொண்டாட இருக்கிறோம்.

இந்தப் படத்தில் எனக்கு மனைவி (நாயகி) உடன் பிளாஷ்பேக் காட்சிகள் இருந்தன. ஆனால் அந்த காட்சிகள் படமாக்கப்படவில்லை. ஏன் என்று இயக்குனர் துரையிடம் கேட்டேன்.

அதற்கு ‘தலைநகரம் 3’ படத்தில் காட்சிகள் வைப்பேன் என்றார். நான் அரண்மனை படத்தை 1 2 3 என எடுத்து வருகிறேன்.

அது போல தலைநகரம் 2 3 4 படங்களை துரை எடுப்பார். அவருக்கு இந்த படத்தின் மீது அவ்வளவு நம்பிக்கை இருக்கிறது” என பேசினார் சுந்தர் சி.

Sundar C talks about Thalainagaram 3 and Durai

More Articles
Follows