மோகனை ஆக்சன் களத்தில் இறக்கிய விஜய்ஸ்ரீ..; ‘ஹரா’ இனி வேற லெவல்

மோகனை ஆக்சன் களத்தில் இறக்கிய விஜய்ஸ்ரீ..; ‘ஹரா’ இனி வேற லெவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1980களில் ரஜினி கமல் உச்சத்தில் இருந்தபோதே அவர்களுக்கு இணையாக ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட நடிகர் மோகன்.

இவரது படங்களும் சரி பாடல்களும் சரி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. இவருடைய படங்கள் பெரும்பாலும் வெள்ளி விழா படங்களே. எனவே இவரை வெள்ளி விழா நாயகன் என்று அழைப்போரும் உண்டு.

இவரது படங்களில் இடம்பெற்ற பாடல்களுக்கு என்றே தனி ரசிகர்கள் ரசிகைகள் பட்டாளமும் உண்டு.

90கள் வரை நடித்து வந்த இவர் ஏனோ சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். ஓரிரு படங்களில் பின்னர் நடித்தாலும் அவை எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதன்பின்னர் பிரபல தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் என பலர் இவரை நடிக்க அழைத்தாலும் ஏனோ வரவில்லை.

ஆனால்…. என்ன மாயம் மந்திரம் செய்தாரோ-? நடிகர் மோகனை கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு அதே ஹீரோவாகவே நடிக்க அழைக்க வந்துவிட்டார் இயக்குனர் விஜய்ஸ்ரீ.

இவர்கள் இணையும் படத்தின் அறிவிப்பை 2022 புத்தாண்டு பிறந்த தினத்தில் வெளியிட்டனர்.

‘ஹரா’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தில் நாயகியாக குஷ்பூ நடிக்கிறார். மோகனுடன் குஷ்பூ இணையும் முதல் தமிழ் படம் இதுவாகும். தயாரிப்பாளர் எஸ்.பி.மோகன்ராஜ் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

இந்த நிலையில் ‘ஹரா’ படத்தின் முதற்கட்ட சூட்டிங்கை சென்னையில் ஓரிரு தினங்களுக்கு முன் தொடங்கிவிட்டார் விஜய்ஸ்ரீ.

அனல் பறக்கும் ஆக்சன் காட்சிகளில் மோகனை நடிக்க வைத்து படமாக்கியிருக்கிறார்.

80களில் மோகன் நடித்தபோது பெரும்பாலும் ரொமான்டிக் படங்களில் மட்டுமே நடித்து வந்தார். தற்போது அவரை ஆக்சன் ஹீரோவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குனர்.

இது தொடர்பான போஸ்டர்களில் டெரர் லுக்கில் தாடியுடன் காணப்படுகிறார் மோகன்.

ஹராவின் கதைப்படி சட்ட நுனுக்களை சாமானியனும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என கதைக்களம் அமைத்திருக்கிறாராம் விஜய்ஸ்ரீ.

‘ஹரா’ படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பை கோவை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மாதம் நடத்தவிருக்கிறார்களாம்.

ம்…ம்… அப்படின்னா ‘ஹரா’…. வேற லெவல் தான்…

Vijay Sri kick starts his Haraa with Mohan in Action mode

தியேட்டரில் ஓடாத ‘வலிமை’-யை ஓடிடியில் வெளியிட பிரம்மாண்ட ஏற்பாடு

தியேட்டரில் ஓடாத ‘வலிமை’-யை ஓடிடியில் வெளியிட பிரம்மாண்ட ஏற்பாடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவான ‘வலிமை’ படம் கடந்த் பிப்ரவரி 24ல் தியேட்டர்களில் 4 மொழிகளில் வெளியானது.

இந்த படத்தை உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்தார் தயாரிப்பாளர் போனிகபூர்.

மோசமான விமர்சனங்கள் படத்திற்கு கிடைத்துவிட்டதால் ஓரிரு தினங்களுக்கு பிறகு ஓப்பனிங் கிடைக்கவில்லை.

தற்போது ரிலீசாகி 25 நாட்களை கடந்து விட்ட நிலையில் ஜீ5 ஓடிடி தளத்தில் மார்ச் 25ல் வலிமையை ஒளிப்பரப்ப செய்யவுள்ளனர்.

இதற்கான அறிவிப்பை சென்னை YMCA மைதானத்தில் 10,000 சதுர அடி பிரம்மாண்ட போஸ்டர் மூலம் அறிவித்தது ஜீ5 நிறுவனம்.

இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Ajiths Valimai on Zee 5 OTT announced with a 10000 sq ft poster

நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் : நாசர் விஷால் கார்த்தி அணியினர் வெற்றி.. பாக்யராஜ் தோல்வி

நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் : நாசர் விஷால் கார்த்தி அணியினர் வெற்றி.. பாக்யராஜ் தோல்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சங்கத் தலைவராக நாசர், பொதுச் செயலாளராக விஷால் பொருளாளராக கார்த்தி பதவி வகித்தனர்.

அதன்பின்னர் கடந்த 2019ல் ஜூன் 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றது.

கடந்த 30 மாதங்களாக நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாமல் காத்து கிடந்தன.

கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், நாசர் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர்.
ஆனால் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கால் தேர்தலை செல்லாது என நீதிமன்றம் அறிவித்தது. இதனால் பதிவான வாக்குகள் அப்படியே எண்ணப்படாமல் இருந்தன.

தேர்தல் வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து தேர்தல் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் மேல்முறையீடு செய்தனர்.

நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தேர்தல் செல்லும் என்று அறிவித்து வாக்குகளை எண்ணவும் உத்தரவிட்டது.

அதன்பின்னர் ஏழுமலை என்ற துணை நடிகர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு பிறகு இன்று மார்ச் 20 சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள குட் ஷெப்பர்ட் பள்ளி வளாகத்தில் காலை ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.

வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டன. இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

பாண்டவர் அணி தரப்பில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் போட்டியிட்டனர். சங்கரதாஸ் அணி தரப்பில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு நடிகர் பிரஷாந்த் ஆகியோர் போட்டியிட்டனர்.
மொத்தம் 29 பதவிகளுக்கு நடந்த தேர்தலில் ஆரம்பம் முதலே பெரும்பாலும் பாண்டவர் அணியே முன்னிலை வகித்தது.

தலைவர் பதவிக்காக போட்டியிட்ட நாசர், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி, பொது செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் ஆகியோர் வெற்றி பெற்றனர். துணைத் தலைவர் (2) பதவிகளுக்கு பூச்சி முருகன் மற்றும் கருணாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

வெற்றிக்கு பிறகு நடிகர் கார்த்தி கூறியதாவது ;

நடிகர் சங்க தேர்தலில் 2 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு பிறகு வெற்றி கிடைத்துள்ளது . பதவியேற்கும் நாளிலிருந்து 3 ஆண்டுகள் பதவி வகிப்போம். இந்த 3 ஆண்டுகளில் நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்படும்” இவ்வாறு கார்த்தி கூறினார்

எதிர் தரப்பில் பாக்யராஜ், ஐசரி கணேஷ் தலைமையில் போட்டியிட்ட சுவாமி சங்கரதாஸ் அணி தோல்வியை தழுவியுள்ளது.

தேர்தல் நாளன்று பதிவானதாக கூறிய வாக்குகளை விட வாக்குப்பெட்டியில் 138 வாக்குச்சீட்டுகள் அதிகமாக இருந்ததாக குற்றம் சாட்டியது இந்த அணி. எனவே பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினர் வாக்கு எண்ணிக்கையின் போதே மையத்தை விட்டு வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் பிரஷாந்த் கூறியதாவது… “வாக்கு பெட்டியில் வாக்கு சீட்டுக்கள் அதிகமானது எப்படி.? இதைப்பற்றி பேச ஏன் எதிர் அணியினர் தயங்குகிறார்கள்.” என கூறினார்.

சங்கரதாஸ் அணியை சார்ந்த ஐசரி கணேசனும் ஓய்வு பெற்ற நீதிபதி பத்பநாபனிடம் இதுபற்றி புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2022 Nadigar Sangam Election Result Nassar Vishal Karthi won

யுவன் இசையில் ஹீரோவாகும் ‘குக் வித் கோமாளி’ நடிகர் புகழ்

யுவன் இசையில் ஹீரோவாகும் ‘குக் வித் கோமாளி’ நடிகர் புகழ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் பிரபலமான பலர் இன்று சினிமாவில் சாதித்து வருகின்றனர். அதில் ஒரு சிலர் ஹீரோக்களாக உயர்ந்துள்ளனர்.

சந்தானம், சிவகார்த்திகேயன், யோகிபாபு ஆகியோர் நாயகர்களாக உயர்ந்துள்ளனர்.

ரோபோ சங்கர், ஜெகன், லொள்ளு சபா மனோகர், சுவாமிநாதன் உள்ளிட்டோர் காமெடியில் கலக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் ‘மிஸ்டர் ஜு கீப்பர்’ படத்தின் மூலம் நாயகனாக நடிக்கப் போகிறார் புகழ்.

இவர் குக் வித் கோமாளி மூலம் பிரபலமானவர். ஒரு சில படங்களில் காமெடியனாகவும் நடித்தார். ஆனால் அந்த படங்களில் இவருக்கு பெயர் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘மிஸ்டர் ஜு கீப்பர்’ படத்தின் முதல் பார்வை இன்றைய ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் வெளியாகிறது.
இந்த படத்தை சுரேஷ் என்பவர் இயக்குகிறார். இவர் மாதவன், சினேகா நடித்த ‘என்னவளே’ படத்தை இயக்கியவர். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

Pugazh starring Mr Zoo Keeper First Look J Suresh Yuvan

‘வாடிவாசல்’ செட் போட்டு சூட்டிங்கை தொடங்கிய சூர்யா – வெற்றிமாறன்

‘வாடிவாசல்’ செட் போட்டு சூட்டிங்கை தொடங்கிய சூர்யா – வெற்றிமாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தாணு தயாரிப்பில் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் படம் ‘வாடிவாசல்’.

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் டெஸ்ட் சூட்டிங்கை நடத்தியுள்ளனர்.

சென்னை, ஈசிஆரில் வாடிவாசல் செட் போடப்பட்டு 400க்கும் மேற்பட்ட காளை மாடுகளை காங்கேயம், சிவகங்கை போன்ற பகுதிகளிலிருந்து படப்பிடிப்பிற்காக கொண்டு வந்துள்ளனர்.

இந்த படப்பிடிப்பில் சூர்யா, வெற்றிமாறன், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், தாணு ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Suriya Vetrimaarans Vaadivasal Test shoot started

அம்மு அபிராமியின் ‘பேட்டரி’க்கு வாய்ஸ் சார்ஜ் ஏற்றிய ஜிவி. பிரகாஷ்

அம்மு அபிராமியின் ‘பேட்டரி’க்கு வாய்ஸ் சார்ஜ் ஏற்றிய ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரிக்கும் மூன்றாவது படம் பேட்டரி. கதாநாயகனாக செங்குட்டுவனும், கதாநாயகியாக அம்மு அபிராமியும் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் கதை, மருத்துவ உபகரணங்களில் நடக்கும் தில்லுமுல்லுகளை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது.

போலிஸ் இன்ஸ்பெக்டரான செங்குட்டுவனை அம்மு அபிராமி காதலிக்கிறார். ஒரு சந்தர்பத்தில், தன்னுடைய காதலை அவரிடம் தெரிவிக்கிறார்.

ஆனால், ஒரு கொலை கேஸில், கொலைக்காரனை தேடிக்கொண்டிருக்கும் செங்குட்டுவன், அதன் தீவிரத்தால், அவளது காதலை ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகிறார்.

அம்மு அபிராமி தனது காதல் உணர்வுகளை பாடலாக பாடுகிறார்.

கவிஞர் நெல்லை ஜெயந்தா எழுதிய…

“நொடிக்குள் மனம் எங்கோ போகிறதே
என்னில் ஏதோ ஆனது நீதானே..
காதலே நீதானே..
பூகோளம் சொல்லும் பொல்லாத பொய்தானா..“ –
என்கிற பாடலை, சித்தார்த் விபின் இசையமைக்க, ஜி. வி. பிரகாஷ்குமார், சக்திஸ்ரீ கோபாலன் இருவரும் பாடியிருக்கிறார்கள்.

மணிபாரதியின் இயக்கத்தில், கே.ஜி. வெங்கடேஷின் ஒளிப்பதிவில், தினேஷ் மாஸ்டரின் நடனப் பயிற்சியில், இந்தப் பாடல் காட்சி, குலுமணாலியில் படமாக்கப்பட்டது.

பேட்டரி மே மாதம் திரைக்கு வருகிறது.

GV Prakash croons for Ammu Abirami in battery

More Articles
Follows