நாயாட்டி / நாயாடி விமர்சனம் 1.5/5..; வாயாடியை கூட சமாளிச்சிடலாம்.!?!

நாயாட்டி / நாயாடி விமர்சனம் 1.5/5..; வாயாடியை கூட சமாளிச்சிடலாம்.!?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

ஒரு பிரபல யூடியூப் சேனல் குழுவை நாயாடி இனத்தை பற்றிய ஆராய சொல்லி ஒருவர் அனுப்புகிறார். அதற்கான இடத்தை தேர்ந்தெடுத்து அவரும் அவர்களுடன் பயணிக்கிறார்.

ஒரு திரில்லருக்காகவும் பணத்திற்காகவும் ஆசைப்படும் அந்த குழுவினர் ஒரு பங்களாவில் சென்றடைந்து அங்கு அமானுஷ்ய சக்திகளிடம் மாட்டிக் கொண்டு படும் அவஸ்தைகளே இந்த படத்தின் கதை.

வனப்பகுதி பழங்குடி இனத்தவர் நாயாடிகள். இவர்கள் உயர் சமூகத்தினராலும், விலங்குகளாலும் தொல்லைக்கு உள்ளாகின்றனர்.

எனவே தங்களை காக்க பில்லி சூனியம், மந்திர தந்திரங்களை கற்று சக்தி பெறுகிறார்கள்.

ஒரு கட்டத்தில் நாயடி பெண் மீது காதல் கொள்ளும் ஒரு அரசர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் எங்கள் இடத்தில் தான் நீங்கள் வசிக்க வேண்டும் என பெண் நிபந்தனை விதிக்கிறார்.

அதனை ஏற்றுக்கொண்டு அங்கு வாழும் அவர்கள் சில நரபலிகளை கொடுக்கின்றனர். மன்னர் செய்த காரியம் பிடிக்காமல் மக்கள் அவர்களை கொல்ல திட்டமிடுகின்றனர்.

அதன் பின்னர் என்ன ஆனது.? என்பதுதான் நாயாடி படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நாயகன் ஆதர்ஷ், நாயகி காதம்பரி ஆகியோர் நிறைவான நடிப்பை கொடுத்துள்ளனர்.

பபின், நிவாஸ், அரவிந்தசாமி, ரவிச்சந்திரன், கீதா லட்சுமி ஆகியோரும் படத்தில் உண்டு்.

டெக்னீஷியன்கள்…

அருணின் பின்னணி இசை சோதனை.. பேய் படம் என்றால் பேய் இசை கொடுக்க வேண்டும் என நினைத்தாரோ.? காதை கிழித்து விட்டார்.. ஒரு இசையும் உருப்படியாக இல்லை..

மோசஸ் டேனியலின் கேமரா ஓரளவு விளையாடியுள்ளது.

இயக்குனர் ஆதர்ஷ் மதிகாந்தம்… ஒரு பேய் படத்தை கொடுக்க வேண்டும் என வழக்கமான கதையை இவர் தொட்டிருந்தாலும் நாயாடி என்ற கேரள பழங்குடியின மக்களை மையப்படுத்தி இருக்கிறார்.

இதில் ஆரம்பத்தில் காட்டப்படும் ஸ்டோரி போட் அனிமேஷன் காட்சிகள் சிறப்பாக உள்ளன. இறுதிவரை அப்படியே கொடுத்திருக்கலாம் போல.

படம் ஆரம்பிக்கும் போது ஏற்படும் தலைவலி படம் முடியும் வரை நீடிக்கிறது.

ஆக நாயாடி.. வாயாடியை கூட சமாளிச்சிடலாம்.!?!

Naayaadi movie review and rating in tamil

அழகிய கண்ணே விமர்சனம் 2/5.; பெயருக்கு மட்டுமே…

அழகிய கண்ணே விமர்சனம் 2/5.; பெயருக்கு மட்டுமே…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

இந்தப் படத்தின் ஆரம்பத்திலேயே நாயகன் மீது பெட்ரோல் ஊத்தி தீ வைக்கின்றனர் வில்லன் கும்பல். எனவே இது ஒரு ஆக்சன் படம் என்ற முடிவுக்கு நாம் வந்து சீட்டில் அமருகிறோம்.

அதன் பின்னர் படம் தொடங்குகிறது.. சமூக சிந்தனையுடன் கிராமத்தில் நாடகங்களை போடுகிறார் நாயகன்… இது ஒரு சமூக சிந்தனை உள்ள படம் என நாம் நினைக்கிறோம்.

பின்னர் ஐயர் வீட்டு பெண் சஞ்சிதாவுக்கு நாடகம் வசனங்களை எழுதி கொடுத்து கவருகிறார் நாயகன்.

இது ஒரு காதல் படம் என்று நாம் நினைக்கையில் உதவி இயக்குனராக வேண்டும் என வாய்ப்பு கேட்டு பிரபு சாலமனுக்கு கடிதம் எழுதுகிறார் நாயகன். உடனே சென்னைக்கு வர சொல்கிறார் பிரபு சாலமன்.

அங்கு சில படங்கள் பணிபுரிந்த பின் நாயகனாக வேண்டும் என்ற ஆசையில் விஜய் சேதுபதிக்கு கதை சொல்கிறார். எனவே இது உதவி இயக்குனர்களின் சிரமங்களை சொல்லும் படம் என நாம் நினைக்கிறோம்.

இதனிடையில் நாயகியும் சென்னையில் வேலைக்கு செல்கிறார். நாம் ஏன் தனியாக வாடகை கொடுக்க வேண்டும். இருவரும் திருமணம் செய்து ஒரு அப்பார்ட்மெண்ட்டை வாங்கி லோன் கட்டலாம் என்கிறார்.

ஆனால் குழந்தை பிறந்ததால் வேலைக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார். இப்படியாக பல குழப்பங்களை ஏற்படுத்தி அவருக்கும் என்ன செய்வது என்று புரியாமல் இயக்கியிருக்கிறார் இயக்குனர் விஜயகுமார்.

கேரக்டர்கள்…

பிரபல பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவகுமார் இந்த படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். ஆக்சன் காட்சிகளில் ஓகே ரகம்.. முகபாவனைகளில் கூடுதல் கவனம் தேவை.

ஐயர் வீட்டு பெண்ணாக சஞ்சிதா. எந்த விதத்திலும் மாமி வீட்டு அம்சம் அவருக்கு ஒட்டவில்லை.. நாயகனின் கிராமத்து நண்பனாக அமுதவாணன் நடித்திருக்கிறார். சிட்டி நண்பராக வி ஜே ஆண்ட்ரூஸ் வருகிறார்.. யாருக்கும் பெரிதாக காட்சிகள் இல்லை.

இயக்குனர் பிரபு சாலமன் இயக்குனராகவே வருகிறார்.. அவரது காட்சிகள் செயற்கைத் தனமாக உள்ளது.

சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி வருகிறார். எப்படி கதை கேட்டார்? அவருக்கு பிடித்திருக்கு என்கிறார்.. நமக்கு தான் ஒன்றுமே புரியவில்லை..

டெக்னீசியன்கள்…

சீனு ராமசாமியின் உடன் பிறந்த தம்பி விஜயகுமார் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். கிராமத்தில் காட்டப்படும் ஆலமரம் மிக அழகு. அதுபோல சென்னை காட்சிகளும் அழகாய் இருக்கின்றன. ஈனால் காட்சிகளில் உயிரோட்டம் இல்லை. எந்த காட்சியிலும் நம்மால் பெரிதாக ஒன்ற முடியவில்லை.

சீனு ராமசாமி தன் தம்பிக்கு திரைக்கதை தீனி போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக ஜெயித்திருப்பார்.

கிராமத்துக் குத்தாட்டம் ஆட்டம் போட வைக்கிறது. அதில் சமூக சிந்தனை வரிகள் மனதில் இடம் பிடிக்கின்றன.

ஒளிப்பதிவு நேர்த்தியாக உள்ளது கிளைமாக்ஸ் காட்சி தான் படத்திற்கு பெரிய குறை.. என்ன நடக்கிறது என்பது புரியாமலே நாம் தியேட்டர் விட்டு வெளியே வருகிறோம்.

ஒருவேளை நாம தூங்கி விட்டோமா என பக்கத்தில் இருந்தவரை கேட்டேன்.. இல்லை காட்சியே அப்படித்தான் இருக்கிறது என்றார்.

ஆக இந்த அழகிய கண்ணே.. பெயருக்கு மட்டுமே

Azhagiya Kanne movie review and rating in tamil

பாயும் ஒளி நீ எனக்கு விமர்சனம் 2.75/5.; பவர் இல்லாத ஒளி

பாயும் ஒளி நீ எனக்கு விமர்சனம் 2.75/5.; பவர் இல்லாத ஒளி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாயும் ஒளி நீ எனக்கு என்ற மகாகவி பாரதியாரின் கவிதைகளை படத்தின் தலைப்பாக வைத்து அதற்கு அர்த்தம் சொல்லி இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் அத்வைத்.

பார்வை குறைபாடு உள்ள விக்ரம் பிரபுவுக்கு ஒளியாக இருப்பவர் நாயகி வாணி போஜன் என்கிறாரோ.?

கதைக்களம்…

சிறுவயதில் ஏற்பட்ட ஒரு விபத்தில் தன் தாய் தந்தையை இழக்கிறார் விக்ரம் பிரபு. அந்த விபத்தில் இவருக்கு பார்வை குறைபாடு வருகிறது. அதிக வெளிச்சம் இருந்தால் மட்டுமே காட்சிகளை காண முடியும் என்பது தான் அது.

அதன் பின்னர் தன் சித்தப்பா வளர்ப்பில் வளர்கிறார் விக்ரம் பிரபு. இவருக்கு வேண்டிய அனைத்து ஒளி அமைப்புகளையும் வீட்டில் ஏற்படுத்திக் கொடுக்கிறார் சித்தப்பா.

இந்த சூழ்நிலையில் ஒரு நாள் நண்பருடன் இரவில் வெளியே செல்லும்போது இரு ரவுடிகள் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்வதை அறிந்து அவர்களை அடித்து விரட்டுகிறார் விக்ரம்.

இது ஒரு புறம் இருக்க.. மற்றொரு புறம்.. ஒரு நேர்மையான அரசியல்வாதியான வேலராமமூர்த்தி இடத்திற்கு வர துடிக்கிறார் அவரது உதவியாளர் தனஞ்ஜெயா.

இந்த இரு கதைகளும் ஒரு கட்டத்தில் இணைய விக்ரம் பிரபுவுக்கு எதிரியாகிறார் தனஞ்செயா.

அதன் பிறகு என்ன நடந்தது.? பார்வை குறைபாடு உள்ள விக்ரம் பிரபு வில்லனை எப்படி ஜெயித்தார்.? விக்ரம் பிரபுவை தனஞ்செயா என்ன செய்தார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

பொதுவாக ஹீரோவுக்கு பெரிதாக சேலஞ்சிங் கேரக்டர்கள் அமைவதில்லை. ஆனால் பார்வை குறைபாடு என்ற சேலஞ்சிங்கான கேரக்டரை எடுத்து அதில் வெளுத்து கட்டி இருக்கிறார் விக்ரம் பிரபு. காதல் காட்சிகள் பெரிதாக இல்லை என்றாலும் ஆக்ஷன் காட்சிகளில் அடித்து நொறுக்கியிருக்கிறார்.

வில்லனாக தனஞ்ஜெயா மிரட்டி இருக்கிறார். இடைவேளை வரை இவருக்கு பெரிதாக காட்சிகள் இல்லை என்றாலும் அதன் பிறகு ஸ்கோர் செய்துள்ளார்.

பிளாஷ்பேக்கில் வரும் வேல ராமமூர்த்தி அசத்தியிருக்கிறார்.

காதலியாக வாணி போஜன்.. நாயகனுடன் கூடவே வருவதால் இவரை அதிகம் காண முடிகிறது.

அனிச்ச பூவே.. பாடலில் வாணி காஸ்ட்யூம்கள் கவரவில்லை. என்ன பிரச்சினையோ.?

விவேக் பிரசன்னா நண்பன் கேரக்டரை நிறைவாக செய்ய முயற்சித்துள்ளார்.

சித்தப்பாவாக நடிகர் ஆனந்த் நடித்துள்ளார். தன் கேரக்டரில் முத்திரை பதிக்கிறார்.

டெக்னீஷியன்கள்…

இயக்குநர் – கார்த்திக் அத்வைத்
பின்னணி இசை – சன்னி – சாகேத்
தயாரிப்பு – கார்த்திக் மூவி அவுஸ்
ஒளிப்பதிவு – ஸ்ரீதர்

படத்திற்கு பின்னணி இசை அதிக பலத்தை கொடுத்துள்ளது.. பாடல் காட்சிகள் ரசிக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது…

ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் தன் பணியை நிறைவாக செய்திருக்கிறார்.. அதற்கு முக்கிய காரணம்.. ஒரே காட்சியை ரசிகர்களுக்கு வெளிச்சமாகவும் நாயகன் பார்வையில் மங்கலாகவும் காட்ட வேண்டும். அதற்காக இரண்டு விதமான ஒளியை அவர் பயன்படுத்தியுள்ளது அவரது சிரமத்தை புரிய வைக்கிறது.

வழக்கமான பழிவாங்கல் கதையாக இருக்கக் கூடாது என்பதை உணர்ந்து ஹீரோவுக்கு சேலஞ்சிங்கான கேரக்டரை கொடுத்து திரை அமைத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் அத்வைத்.

ஆனால் அதை சொன்ன விதத்தில் அவரது தடுமாற்றம் தெரிகிறது. முக்கியமாக ஒரு படத்திற்கு கிளைமாக்ஸ் காட்சி பெரிதாக பேசப்பட வேண்டும். ஆனால் ஹீரோ பார்வையில் அந்த செட்அப் காட்சிகள் சரியாக இருந்தாலும் வில்லன் இப்படியா வந்து மாட்டிக் கொள்வார்.?!

ஆக பாயும் ஒளி நீ எனக்கு… பவர் இல்லாத ஒளி

paayum oli nee yenakku movie review and rating in tamil

தலைநகரம் 2 விமர்சனம் – 3/5.; தலை எடுக்கும் நரகம்

தலைநகரம் 2 விமர்சனம் – 3/5.; தலை எடுக்கும் நரகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

சுந்தர் சி மற்றும் தம்பி ராமையா இருவரும் இணைந்து ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வருகின்றனர். தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கிறார் சுந்தர்.

தன் மகள் ஐயிராவை டாக்டருக்கு படிக்க வைக்கிறார் தம்பி ராமையா. இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம்…

தென்சென்னை தாதா – நஞ்சுண்டா (பிரபாகர்)… மத்திய சென்னை தாதா – வம்சி (விஷால் ராஜன்)… வடசென்னை தாதா – மாறன் (ஜெய்ஸ் ஜோஸ்).. இவர்கள் மூவரின் கீழ்தான் சென்னை நகரமே இயங்குகிறது.

ஆனால் ஒருவருக்கொருவர் மோதலில் ஒட்டுமொத்த சென்னை நகரத்தை தன் கன்ட்ரோலில் கொண்டு வர நினைக்கின்றனர்.

இந்த நிலையில் வம்சியின் காதலியான நடிகையை ஒரு கும்பல் கடத்தி கற்பழிக்கின்றனர்.

இது செய்தவர் யார் என வம்சி குழம்பிய நிலையில் ஒரு போலீஸ் அதிகாரி பழைய ரவுடி ரைட் (சுந்தர் சி) மீது பழியை போடுகிறார்.

இதற்கு முன்பே நடிகைக்கும் தம்பி ராமையாவுக்கும் பிசினஸ் கொடுக்கல் வாங்கல் தகராறு இருக்கிறது.

இதனால் சுந்தரை போட்டுத் தள்ள நினைக்கிறார் வம்சி. அதன் பின் ஒன்றோடு ஒன்றாக பின்னப்பட்ட திரைக்கதையில் 3 ரவுடிகளையும் எதிர்க்கிறார் சுந்தர் சி.

இந்த நிகழ்கால கேங்ஸ்டர்கள் எப்படி பழைய ரவுடியை எதிர்கொண்டார்கள் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

சுந்தர் சி நீண்ட இடைவெளிக்குப் பிறகு டான் வேடத்தில் மிரட்டி இருக்கிறார். ஒரு பக்குவப்பட்ட தாதாவின் கேரக்டரை அசால்டாக செய்து இருக்கிறார்.

தம்பி ராமையா வழக்கம்போல ஓவர் ஆக்டிங்.. இவரது மகளாக ஆயிரா. அழகான இஸ்லாமிய பெண்ணாக தன் கேரக்டரை நிறைவாக செய்து இருக்கிறார்.

இதிலும் சினிமா நடிகையாகவே வந்துள்ளார் பாலக் லால்வானி. அதுவும் டூ பீஸ் உடையில் வந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

மூன்று வில்லன்களில் பாகுபலி பிரபாகரன் மட்டுமே நமக்கு தெரிந்த அடையாளம். மூன்று வில்லன்களும் மிரட்டலாகவே தோன்றியுள்ளனர். அது போல மாறனுக்கு 3 மனைவிகள். மூவருமே அதகளம் செய்துள்ளனர்.

அதுவும் பணத்தை திருடி பாவாடைக்குள் ஒளித்து வைப்பது பல திருட்டுப் பெண்களுக்கு ரூட் போட்டு கொடுத்துள்ளது.

டெக்னீஷியன்கள்…

‘தலைநகரம் 2’ படத்தை பார்த்த பிறகு விதவிதமாக கொலை செய்வது எப்படி? என்பதை ரவுடிகள் தெரிந்து கொள்வார்கள். அப்படி நிறைய டெக்னிக்கை அறிமுகப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் துரை.

ஸ்டன்ட் மாஸ்டர் டான் அசோக்.. வாங்கிய கூலிக்கு அதிகமாகவே உழைத்திருக்கிறார்.

பில்டப் காட்சிகளில் ஜிப்ரானின் பின்னணி இசை மிரட்டல்.. ஆனால் பின்னணி இசை சில இடங்களில் மட்டும் பாட்ஷா படத்தின் ஃப்ளாஷ் பேக் இசையை நினைவுப்படுத்துகிறது. அது ஏனோ.?

கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவில் அனைத்தும் அருமை. எடிட்டர் ஆர்.சுதர்சன் முதல் பாதியை நிறைவாக செய்து இரண்டாம் பாதியில் நீளமான காட்சிகளை வைத்து விட்டார்.

பொதுவாக ரவுடிகளுக்கு எப்போதுமே மற்ற ரவுடிகளின் வரலாறு பின்னணி தெரிந்து இருக்கும். ஆனால் இந்த மூன்று ரவுடிகளுக்குமே பழைய ரவுடி சுந்தர்.சி பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்பது வேடிக்கையானது.

படத்தின் ஆரம்பத்தில் 3 வில்லன்களுக்கு காட்டப்படும் பில்டப்கள் கிட்டத்தட்ட 15 நிமிடம் செல்கிறது. ஒவ்வொரு வில்லனும் எப்படி உருவானார்கள்? என்பதை சொத்து பட்டியல் விவரத்தோடு சொல்லி இருக்கிறார்.

அதுபோல நாயகன் சுந்தர்.சி-க்கு கொடுக்கும் பில்டப்பும் சிறப்பாகவே உள்ளது. முதல் பாதியை மிரட்டலாகவே கொடுத்த இயக்குனர் VZ துரை இரண்டாம் பாதியில் சறுக்கி விட்டார்.

முக்கியமாக படத்தில் பெண்கள் வந்த பிறகு சென்டிமென்ட் தூக்கலாகவே உள்ளது. இரண்டாம் பாதியில் தான் கதையின் வேகத்தை அதிகப்படுத்தி இருக்க வேண்டும்.

ஒவ்வொரு வில்லன் முடிவும் மிரட்டலாகவே உள்ளது. முக்கியமாக பாகுபலி பிரபாகரின் முடிவு கொடூரமானது.. படம் முடியும்போது தலைநகரம் 3 அடித்தளம் போட்டு முடித்திருக்கிறார் இயக்குனர் VZ துரை.

ஆக.. தலைநககரம் 2… தலை எடுக்கும் நரகம்

Thalainagaram 2 movie review and rating in tamil

ரெஜினா விமர்சனம் 3.25/5.. நடுவிரல் நாயகி

ரெஜினா விமர்சனம் 3.25/5.. நடுவிரல் நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிப்பு – சுனைனா, நிவாஸ் ஆதித்தன், ஆனந்த் நாக், பவா செல்லத்துரை, கஜராஜ் & பலர்.

இயக்கம் – டொமின் டிசில்வா

இசை & தயாரிப்பு – சதீஷ் நாயர்

தன் கணவனை கொன்றவனை பழிவாங்க புறப்பட்ட ஒரு சிங்க பெண்ணின் கதை இந்த ரெஜினா.

கதைக்களம்…

சிறுமியாக இருக்கும் போதே தன் தந்தை சில மர்ம நபர்களால் கொல்லப்படுவதை பார்த்து விடுகிறார் சுனைனா (ரெஜினா).

இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் ரெஜினா பித்து பிடித்தவள் போலவே காணப்படுகிறார்.

வளர்ந்து குமரியான பிறகு தன் காதலன் ஜோ (ஆனந்த் நாக்) மூலம் சகஜ நிலைக்கு திரும்புகிறார். அவரை காதலித்து திருமணமும் செய்து கொள்கிறார்.

சில மாதங்களில் பேங்க் கொள்ளையர்களால் கொல்லப்படுகிறார் சுனைனாவின் கணவன் நாக் ஆனந்த்.

எனவே இதனை முறையாக விசாரிக்க காவல்துறையை நாடுகிறார் சுனைனா.

பல மாதங்கள் ஆனாலும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. காவல்துறையின் அலட்சியத்தால் கணவனை கொன்றவர்கள் யார்? என்பதை அறியப் புறப்படுகிறார்.

அதன் பின்னர் என்ன நடந்தது.? கொள்ளையர்கள் யார்.? கணவனை ஏன் கொன்றார்கள்? அவர்களை எப்படி கண்டுபிடித்தார்? என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

முதலில் நாம் அன்றாடம் பார்க்கும் இல்லத்தரசியாக அப்பாவியாக வருகிறார் சுனைனா. அதன் பின்னர் ஆக்சன் அவதாரம் எடுக்கிறார். ஆனாலும் சினிமா தனம் இல்லாமல் எதார்த்தமாக பழிவாங்கும் ஒரு பெண்ணாகவே தன் கேரக்டரை நிமிரச் செய்திருக்கிறார்.

கணவன் ஆனந்த் நாக் ஒரு டூயட் பாட்டு சில காட்சிகள் மட்டுமே வருகிறார். இந்த ரொமான்டிக் பாடலில் சுனைனா இளசுகளை சூடேற்றுகிறார்.

எழுத்தாளர் பவா செல்லத்துரை ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்து ரசிகர்களிடம் அனுதாபத்தை அள்ளி இருக்கிறார்.

விவேக் பிரசன்னா, சாய் தீனா, கஜராஜ் ஆகியோரது கேரக்டர்கள் வீணடிக்கப்பட்டுள்ளன. இது போன்ற திறமையான நடிகர்களை இன்னும் கூடுதலாக பயன்படுத்தி இருக்கலாம்

மாடர்ன் மங்கையாக ரித்து மந்த்ரா. சுனைனா கவர்ச்சி காட்டாத காரணத்தினால் இவர் பயன்படுத்தப்பட்டுள்ளாரோ.?

கவர்ச்சியால் இளைஞர்களை சூடேத்துகிறார் ரித்து மந்த்ரா. இவரும் சுனைனாவும் நெருங்கி பழகும் போது ஆஹாங் இது லெஸ்பியன்.? என்று நினைக்கத் தோன்றுகிறது.

நிவாஸ் ஆதித்தன், அப்பாணி சரத், ரஞ்சன், பசுபதி ராஜ், ஞானவேல் ஆகியோரும் உண்டு்.

டெக்னீஷியன்கள்…

பவி கே பவனின் ஒளிப்பதிவு கதைக்கான பங்களிப்பைச் செய்துள்ளது. இசையமைப்பாளரே இந்த படத்தின் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார்.

சதீஷ் நாயகரின் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம்.. ஒரு தென்றல் புயலானது போல ரெஜினாவின் விவேகத்திற்கு ஒரு பாடலை போட்டு ரசிகர்களை முறுக்கேற்றியுள்ளார்.

மலையாள இயக்குநர் – டொமின் டி’சில்வா.. ஒரு பழி வாங்கும் பெண்ணின் உணர்வை யதார்த்தமாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.

அதே சமயம் படம் ஒரு பாதையில் பயணிக்கின்ற போது கிளைக் கதைகளை சொருகி இருப்பது வேகத்தை தடுமாறச் செய்கிறது. இறுதியாக ட்விஸ்ட்டுகள் வைத்த பெயரில் கிளைக் கதைகளுக்கு காரணம் சேர்த்தாலும் திடீரென அதனுடன் ஒன்ற முடியவில்லை.

தன் இழப்புக்கு ஈடு செய்ய எவரையும் நம்ப கூடாது. தன்னால் எதையும் செய்ய முடியும் என இறுதியாக நாயகியின் நடுவிரலை காட்டி கதையை முடித்துள்ளார் இயக்குனர்.

ஆக இந்த ரெஜினா… நடுவிரல் நாயகி

regina movie review and rating in tamil

அஸ்வின்ஸ் விமர்சனம் 2.5/5.; வீக் ஸ்டோரி.. மிரட்டல் மியூசிக்

அஸ்வின்ஸ் விமர்சனம் 2.5/5.; வீக் ஸ்டோரி.. மிரட்டல் மியூசிக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்கதை…

இந்தியப் புராண இதிகாசமான அஸ்வினி குமாரர்களுக்கும் இக்கதைக்கும் தொடர்புப்படுத்தி இந்த பேய் கதை சொல்லியுள்ளனர். ( இப்போ தெரிஞ்சிருக்குமே ஏன் இந்த டைட்டில்..?!!)

கதைக்களம்..

லண்டனின் இந்தியத் தொல்லியல் ஆய்வாளர் ஒருவர் விநோத சடங்குகள் மூலம் பலரைக் கொன்றுவிடுகிறார்.

ஒரு கட்டத்தில் அவரும் இறந்திருக்கிறார்.

இதை அறியாத ஒரு டியூயுப் சேனல் குழுவை அந்த இடத்திற்கு போக சொல்கிறார் ஒருவர்.

அதன்படி பணத்துக்காக ‘Found Footage’ வீடியோ எடுக்க அர்ஜுனும் (வசந்த் ரவி) அவரது தோழிகளும் நண்பர்களும் செல்கின்றனர்.

இதற்கு பிளாக் டூரிசம் (Black Tourism) என்கின்றனர். அதாவது பேய் பிசாசுகள் இருக்கும் இடங்களைத் தேடி சுற்றுலா செல்ல விரும்பும் பயணிகளைக் குறிப்பிடுகிறது.

அங்கு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நல்ல குணம் தீய குணம் கொண்ட இரு கேரக்டர்களை வசந்த ரவியும் அருமையாக வெளிப்படுத்தி தன்னுடைய நடிப்பாற்றலை கொடுத்துள்ளார். மேக்கப்பில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

வசந்த் ரவியின் மனைவியாக சாராஸ் மேனன் & நண்பர்களாக சிம்ரன் பரீக், முரளிதரன், உதயதீப் ஆகியோர் அச்ச உணர்வை ஏதோ கொடுத்துள்ளனர்.

சிறப்புத் தோற்றத்தில் விமலா ராமன்.. இந்த பேயை (கதையை) நகர்த்திச் செல்ல உதவியிருக்கிறார்.

டெக்னீஷியன்கள்…

பேய் பட வரிசையில் இந்த படம் நிச்சயமாக பேசப்படும். அதற்கு முக்கிய காரணம் இசையமைப்பாளர் விஜய் சித்தார்த் தான். மேலும் இந்த படத்தின் இயக்குனர் அருண் தேஜா சவுண்ட் எஃபெக்ட்ஸ் படித்தவர் என்பதால் இருவரும் கூடுதல் கவனம் செலுத்தி தங்களது பங்களிப்பை நேர்த்தியாக செய்துள்ளனர்.

பேய் படங்கள் என்றாலே மிரள வைக்கும் இசை அவசியம். அப்படி ஒன்று இருந்தால் தான் ரசிகர்கள் பயந்து கொண்டே சீட்டு நுனியில் உட்கார்ந்திருப்பார்கள்.

அதை சரியாக செய்திருந்தாலும் வெறும் இசை மட்டுமே பேய் படத்திற்கு உதவாது திரைக்கதையும் கொஞ்சமாவது திருப்புமுனை காட்சிகளும் இருந்தால்தான் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இருக்கும் என்பதை இயக்குனர் கவனிக்கவில்லையா?

இடைவேளை சமயத்தில் வரும் “ராட்சஷ்ஷா” என்ற கரகரக்குரல் பாடல் அதிர வைக்கிறது.

படத்தொகுப்பாளர் வெங்கட்ராஜன் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் படம் ஆரம்பத்தில் காட்டப்படும் காட்சிகளை மீண்டும் வருவது எரிச்சலை உண்டாக்குகிறது.

லண்டன் செல்லும்போது காட்டப்படும் மிகப்பெரிய ஆறும் அது நடுவே ரோடும் திகில்.. ஒளிப்பதிவாளர் ஏ.எம்.சாக்கே அப்படி ஒரு அமானுஷ்ய உணர்வினை நமக்குள் கடத்தியிருக்கிறார்.

அறிமுக இயக்குநர் தருண் தேஜா. வசந்த ரவிக்கு வேறுபட்ட கதாபாத்திரங்களை கொடுத்து அவரிடம் நன்றாகவே வேலை வாங்கி இருக்கிறார்.

திடீரென கத்துவது.. ஓடுவது.. விளக்குகள் அணைவது, கதவுகள் திறப்பது மூடுவது, சவுண்ட் எஃபெக்ட்ஸ் அலறவைப்பது.. என பேய் பட டெம்ப்ளேட்டிலும் இதுவும் தப்பவில்லை.

ஆக அஸ்வின்ஸ்’ வீக் ஸ்டோரி.. மிரட்டல் மியூசிக்

Asvins movie review and rating in tamil

More Articles
Follows