அந்தகன் விமர்சனம் 4.25/5.. டாப் கியரில் டாப் ஸ்டார் பிரஷாந்த்

அந்தகன் விமர்சனம் 4.25/5.. டாப் கியரில் டாப் ஸ்டார் பிரஷாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அந்தகன் விமர்சனம் 4.25/5.. டாப் கியரில் டாப் ஸ்டார் பிரஷாந்த்

அந்தகன் – பிரசாந்தின் 50 வது படமாகும்..

ஸ்டோரி…

பிரசாந்த் ஒரு பியானோ கலைஞர்.. இவர் கண் பார்வை தெரியாதவராக நடிக்கிறார்.. அதற்கு காரணம்.. பியானோ வாசிக்கும் போது பார்வை தெரியாதவராய் இருந்தால் தன்னால் இசையில் முழு கவனம் செலுத்த முடியும் என நம்புகிறார்.. மேலும் கண்பார்வையற்ற இருப்பதால் கூடுதல் லாபமும் அனுதாபமும் கிடைப்பதால் இந்த ஒரு நிலையை அவர் மேற்கொண்டு நடித்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில் ஒரு நாள் நவரச நாயகன் நடிகர் கார்த்திக் தன் திருமண நாளில் மனைவி சிம்ரனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க இவரை தன் வீட்டிற்கு பியானோ வாசிக்க அழைக்கிறார்.

அதன்படி பிரசாந்தை வீட்டிற்கு உள்ளே அழைத்து செல்கிறார் கார்த்திக்கின் மனைவி சிம்ரன்.. அங்கே கார்த்திக் இறந்து கிடப்பதை பார்த்து விடுகிறார். அந்த சமயத்தில் வீட்டில் உள்ளே போலீஸ் சமுத்திரக்கனி இருப்பதை பார்த்து விடுகிறார்.

அதன் பிறகு பிரசாந்த் என்ன செய்தார்? தனக்கு கண் தெரியும் என்பதை ஒப்புக்கொண்டாரா? அல்லது பார்வையற்றவராக நடித்தாரா? என்பது தான் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், கே எஸ்.ரவிக்குமார், ஊர்வசி, சமுத்திரக்கனி, வனிதா, யோகிபாபு, மனோபாலா, ஆதேஷ் பாலா, பெசன்ட் ரவி, பூவையார் மற்றும் பலர்..

1990களில் கலக்கிய பிரஷாந்த் சில வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார்.. தற்போது இந்தப் படத்தின் மூலம் அவருக்கு ஒரு மிகப்பெரிய ரீ என்ட்ரீ கிடைத்துள்ளது.. பார்வை தெரியாதவராக இருக்கும்போது பார்வை தெரிந்தவராக இருக்கும்போது என இரண்டு மாறு பட்டு நடிப்பை கொடுத்திருக்கிறார் பிரசாந்த்..

ஒரு கட்டத்தில் நிஜமாகவே பார்வை பறிபோன பின் அவரின் நடிப்பு அவருக்கு பல விருதுகளை கொடுக்கும்.. இவருக்கும் பிரியா ஆனந்துக்கும் இருக்கும் நெருக்கம் மீண்டும் பிரஷாந்த்தை ரொமான்டிக் ஹீரோவாக காட்டி இருக்கிறது..

பிரஷாந்த் நிஜமான பியானோ என்பதால் நடிகர் கார்த்திக்கின் பாடல்களை வாசிப்பது சூப்பர்.. அது போல அமரன் பட பாடலை பாடியிருப்பதும் செம..

பார்த்தேன் ரசித்தேன் என்ற படத்தில் வில்லி வேடத்தில் கலக்கி இருப்பார் சிமரன்.. இன்னும் அந்த எனர்ஜி குறையாமல் கலக்கி இருக்கிறார் சிம்ஸ்..

யோகிபாபு & ஊர்வசி & KS ரவிக்குமார் கூட்டணி படத்திற்கு பலம்.. இவர்களது கேரக்டர் சிரிக்கவும் சிந்திக்க வைக்கிறது..

பிரியா ஆனந்தின் ஆடைகளுக்காகவே அவரை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.. கவர்ச்சியிலும் நடிப்பிலும் ஜொலிக்கிறார்..

சமுத்திரக்கனி, வனிதா.. இவர்களது கணவன் மனைவி கேரக்டர்ஸ் சீரியஸ்க்கு கியாரண்ட்டி.. என்னதான் போலீஸ் ஆக இருந்தாலும் தப்பு செஞ்சிட்டா பொண்டாட்டிக்கு பயப்படணும்.. என்பதை தன் கண்களில் காட்டியிருக்கிறார் சமுத்திரக்கனி.. அவர் வனிதாவை *லல்லுமா….* என சொல்லுவது செம..

மனோபாலா, ஆதேஷ் பாலா, பெசன்ட் ரவி, பூவையார் ஆகியோரின் கேரக்டர் கதை ஓட்டத்திற்கு பெரிய அளவில் உதவியிருக்கிறது.. ஆதேஷ் பாலா அசத்தல்.

டெக்னீசியன்ஸ்…

தயாரிப்பு: சாந்தி தியாகராஜன், ப்ரீத்தி தியாகராஜன்..
இசை: சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு: ரவி யாதவ்
இயக்கம்: தியாகராஜன்
பி ஆர் ஓ: நிகில் முருகன்

அனிருத் பாடிய *அந்தகன் ஆன்த்தம்…* படம் (என்ட் கார்ட்) முடிந்து வந்தாலும் ஆட்டம் போட வைக்கிறது.. அதில் பிரஷாந்த் ஹேர் ஸ்டைல் & சிம்ரன் கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு வேற லெவல் ஹாப்பினஸ்..

இசை: சந்தோஷ் நாராயணன்v& ஒளிப்பதிவு: ரவி யாதவ்… இருவரும் கூடுதல் கவனம் எடுத்து சீன்களை சிறப்பித்துள்ளனர்..

இயக்கம்: தியாகராஜன்… ஹிந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட்டான அந்தாநூன் என்ற படத்தின் ரீமேக்.. இதை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு கூடுதல் கவனம் எடுத்து இருக்கிறார் நடிகரும் இயக்குனருமான தியாகராஜன்.. அதற்கு ஏற்ப கேரக்டர்களுக்கு நடிகர்களை தேர்ந்தெடுத்து வேலை வாங்கி கைத்தட்டல் வாங்க வைத்து விட்டார்.. மனோபாலா பேசும் சின்ன சின்ன டயலாக் கூட ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறது..

இண்டெர்வெல்க்கு பிறகு நிறைய நிறைய ட்விஸ்ட் வைத்து க்ளைமாக்ஸ் வரை சீட் நுனியில் உட்கார வைத்துவிட்டார் டைரக்டர் தியாகராஜன்..

ஆக தன் மகன் பிரஷாந்துக்கு ஒரு கம் பேக் கொடுத்து இருக்கிறார் தியாகராஜன்..

இனி சினிமா பயணத்தில் டாப் கியரில் டாப் ஸ்டார் பிரஷாந்த் செல்வார் என எதிர்பார்க்கலாம்..

Prashanths Andhagan movie review

வீராயி மக்கள் பட விமர்சனம் 3.75/5.. பாசப் போராட்டம்

வீராயி மக்கள் பட விமர்சனம் 3.75/5.. பாசப் போராட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வீராயி மக்கள் பட விமர்சனம் 3.75/5.. பாசப் போராட்டம்

ஸ்டோரி…

கணவன் இல்லாமல் தன் மூன்று மகன்கள் ஒரு மகளை வளர்த்து வருகிறார் வீராயி (பாண்டி அக்கா.)

ஒரு கட்டத்தில் மாமியார் – மருமகள் பிரச்சனை.. அண்ணன் தம்பி பிரச்சனை.. பொருளாதார பிரச்சனை.. சொத்து பிரிப்பு உள்ளிட்டவைகளால் குடும்பம் பிரிகிறது..

அம்மா மறைவுக்குப் பின் பாசம் இல்லாமல் கேட்பாரற்று அண்ணன் தம்பி தங்கை உறவுகள் பிரிந்து சிதறுகிறது..

அதன் பிறகு என்ன நடந்தது? அண்ணன் தம்பிகள் இணைந்தார்களா? சொத்து தான் பிரச்சனை என்பதை உணர்ந்து இணைந்தார்களா? இந்த வீராயி மக்கள் என்பது தான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

வேல ராமமூர்த்தி, மறைந்த நடிகர் மாரிமுத்து, தீபா ஷங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா, செந்தி குமாரி, பாண்டி அக்கா, ஜெரால்ட் மில்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Vela Ramamoorthy
Marimuthu
Deepa Shankar
Suresh nandha
Nandhana
Rama
Senthil kumari
Jerald Milton
Pandi

சுரேஷ் நந்தா மற்றும் நந்தனா ஆகிய இருவரும் படத்தின் காதல் ஜோடிகள் என்றாலும் அவர்களை விட அதிகமாகவே ஸ்கோர் செய்து இருக்கிறார்கள் அனுபவமிக்க நடிகர்கள்..

முக்கியமாக வேலராமமூர்த்தி மாரிமுத்து பாண்டியக்கா தீபா ஷங்கர் செந்தி உள்ளிட்ட அனைவரையும் சொல்லலாம்..

தன் அம்மாவை மதிக்காத தம்பி பொண்டாட்டி.. ஓடிப்போய் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பி.. சொத்தைப் பிரிக்க சொல்லும் தம்பி மனைவி என அனைத்தையும் தாங்க முடியாமல் தாங்கி ஆலமர அண்ணனாக வேலராமமூர்த்தி..

மனைவியின் பேச்சைக் கேட்டு வில்லத்தனம் செய்யும் மாரிமுத்து.. *மூத்த மருமகள் ஸ்ரீதேவி.. நான் என்ன மூதேவியா? என் மாமியாரிடம் சண்டை போடும் செந்தி என அனைவரும் அடடா போட வைக்கின்றனர்..

குடும்பம் பிரிந்த சோகத்தில் அழும் வீராயி நம்மையும் அழ அதை வைத்து நடிப்பில் உச்சம் தொடுகிறார்…

என் புருஷன் தப்புதான்.. அவனை வெட்டிப் போட்டாலும் உன் தங்கையாகவே வாழ்ந்து விடுவேன் என பாசத்திற்காக ஏங்கும் தங்கையாக தீபா ஜொலிக்கிறார்.

இவை இல்லாமல் கிராமத்து மனிதர்கள்.. டீ போடும் லேடி.. என ஒவ்வொருவரும் கவனம் ஈர்கின்றனர். *யார் எக்கேடு கெட்டுப்போனால் என நினைக்காமல் பிரிந்த குடும்பம் ஒன்றாக வேண்டும் என நினைக்கும் அந்த தண்டட்டி பாட்டி நிச்சயம் மனதில் நிற்பார்

டெக்னீசியன்ஸ்…

ஏ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் என்.சுரேஷ் நந்தா தயாரிக்க, இயக்குநர் நாகராஜ் கருப்பையா இயக்கியிருக்கிறார்.

எம்.சீனிவாசன் ஒளிப்பதிவு செய்ய இப்படத்திற்கு தீபன் சக்கரவர்த்தி இசையமைத்திருக்கிறார். முகன்வேல் எடிட்டிங் செய்திருக்கிறார். இவர்கள் திரைக்கதையுடன் பயணிக்கும் வகையில் தங்கள் பணியை நகர்த்தி இருப்பது சிறப்பு.

இயக்குனருடன் உறுதுணையாக இருந்து இசையமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தி தன் பங்கை மன்மனம் மாறாமல் இசை விருந்து படைத்திருக்கிறார்.. ‘செங்கொடி ஊருக்கு… மற்றும் ‘நெஞ்சுக்குள்ள…. ஆகிய பாடல் வரிகள் ரசிக்கும் ரகம்.. சுரேஷ் நந்தா மற்றும் நந்தனாவின் காதல் பாடல்கள் காதலர்களை மட்டுமல்ல அனைவரையும் கவரும்..

புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி பகுதிகளில் இதன் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார் இயக்குனர். அங்கு உள்ள மக்களையும் இதில் நடிக்க வைத்து மண் மனம் மாறாத வீராயி மக்கள் படைப்பை கொடுத்திருக்கிறார்.

சுசீந்திரன் மற்றும் ரவி மரியா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த நாகராஜ் கருப்பையா தான் இப்பட இயக்குனர்..

நகரத்தின் இயந்திர வாழ்க்கை.. தொழில்நுட்ப வளர்ச்சி.. கிராமத்தில் கூட செல்போன் மற்றும் சமூக வலைத்தள ஆதிக்கம் உள்ளிட்டவைகளால் சிதறி கிடைக்கும் கூட்டுக் குடும்பத்தை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் இயக்குனர்.

தன் குடும்ப உறவுகளை நேசிக்கும் ஒவ்வொருவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும்.. அம்மா பாசம்.. அப்பத்தா நேசம் பெரியப்பா சித்தப்பா அத்தாச்சி அத்தை மாமா மச்சான் பங்காளி உள்ளிட்ட உறவுகளை மீண்டும் புதுப்பிக்க இந்த வீராயி மக்கள் வந்திருக்கின்றனர் என்றே சொல்லலாம்.

வெட்டு குத்து வன்முறை ரத்தம் போதை கஞ்சா என தமிழ் சினிமாவில் ஒவ்வொரு இயக்குனர்களும் பாதையை மாற்றிக் கொண்டிருக்க கூட்டுக் குடும்பமே சிறந்தது அதில் உள்ள சந்தோஷம் எதிலும் இல்லை என உரக்கச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் நாகராஜ் கருப்பையா..

Veerayi Makkal movie review

பார்க் விமர்சனம் 2.5/5.. பேய் காதலர்கள்

பார்க் விமர்சனம் 2.5/5.. பேய் காதலர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பார்க் விமர்சனம் 2.5/5.. பேய் காதலர்கள்

ஸ்டோரி…

திருவண்ணாமலையில் ஒரு பூங்காவில் நடந்த கதையை பார்க் என்ற பெயரில் இயக்கி இருக்கிறார் படத்தின் இயக்குனர்.

நாயகன் தமன் நாயகி ஸ்வேதா ஒரே ஊரில் இருக்கும் போது அடிக்கடி சந்தித்துக் கொள்ள அதுவே அவர்களுக்குள் நெருக்கமாகி காதலாக மாறுகிறது..

பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தமும் நடக்கிறது.. அப்போது ஒரு கட்டத்தில் இவர்களுக்கு வில்லனால் பிரச்சனை ஏற்படும் போது ஓடிப்போய் அருகே உள்ள பூங்காவில் தஞ்சம் அடைகின்றனர்.

அப்போது அந்த பூங்காவில் உலாவி வரும் இரண்டு பேய்கள் இவர்களின் உடலில் புகுந்து விடுகிறது.. அதன் பிறகு என்ன நடந்தது? அந்தப் பேய்கள் இவர்களை குறி வைப்பது ஏன்.? என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

‘ஒரு நொடி’ பட நாயகன் தமன் குமார் நடித்துள்ளார். நாயகியாக ஸ்வேதா டோரதி நடிக்க வில்லனாக யோகிராம் நடித்துள்ளார். பிளாக் பாண்டி, ரஞ்சனா நாச்சியார், கராத்தே ராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அண்மையில் வெளியான ஒரு நொடி படத்தில் கம்பீர போலீசாக நடித்திருந்தார் தமன் குமார்.. ஆனால் இந்த படத்தில் வழக்கம் போல தமிழ் சினிமா நாயகனாக மாறி இருக்கிறார்.. இடைவேளைக்கு முன்பு வரை ரொமாண்டிக் ஹீரோ இடைவேளைக்கு பின்பு பேய் பிடித்த ஹீரோ என ஆக்ஷனில் இறங்கியிருக்கிறார் தமன்..

அழகான நாயகியாக ஸ்வேதா.. இவரது கண்களும் உதடுகளும் ரசிக்க வைக்கிறது.. கவர்ச்சியில்லாத நேர்த்தியான உடைகளை உடுத்தி இறப்பது சிறப்பு..

பேய் என்பதால் முகத்தில் மட்டும் கொஞ்சம் மேக்கப் போட்டு உடம்பில் எந்த விதமான மாற்றமும் காட்டாமல் தன் வேலையை குறைத்துக் கொண்டிருக்கிறார்.

காமெடி செய்கிறேன் என்ற பெயரில் கடுப்பேத்தி இருக்கிறார் நடிகர் பிளாக் பாண்டி.. இவர்களுடன் ரஞ்சனா நாச்சியார் அழகிலும் நடிப்பிலும் மிரட்டி இருக்கிறார்.. வில்லன்களுக்கு வேலையில்லை..

டெக்னீசியன்ஸ்…

பாண்டியன் குப்பன் ஒளிப்பதிவு செய்ய ஹமரா சி.வி. என்பவர் இசையமைத்திருக்கிறார்.

கோயில் நகரம் என்று அழைக்கப்படும் திருவண்ணாமலையில் கோயில் அல்லாது கிராமத்து அழகை தன் கேமராவில் அழகாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்..

பேய்க்கு ஏற்ற பின்னணி இசையை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஆனால் பேய் வரும் போதெல்லாம் இருவரும் மூச்சு வாங்கும் அந்த வேகம் கொஞ்சம் செயற்கை தனமாக இருப்பதை தவிர்த்து இருக்கலாம்..

எடிட்டிங் குரு சூர்யா.. கலை இயக்கம் ஆர் வெங்கடேஷ்.. சுசித்ரா குரலில் ராபர்ட் மாஸ்டர் நடனமைத்த குத்தாட்ட பாடல் ஆட்டம் போட வைக்கிறது.

ஈ.கே.முருகன் இயக்கியுள்ளார் . இவர் இயக்குநர் ஏ. வெங்கடேஷிடம் உதவி இயக்குநராக இருந்தவர். எனவே பல இடங்களில் வெங்கடேஷின் டைரக்டர் டச் தெரிகிறது..

அக்சயா மூவி மேக்கர்ஸ் சார்பாக லயன் நடராஜ் ‘பார்க்’ படத்தை தயாரித்துள்ளார். நாயகி ஸ்வேதானவின் தந்தையாக நடித்தவர் தான் தயாரிப்பாளர் ஈ.நடராஜ்..

இடைவேளைக்கு முன்பு வரை காதல்.. இடைவேளைக்கு பின்பு பேயாட்டம் என இரண்டு கதைகளை கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர்.. பேய் பழிவாங்கல் கதை இருந்தால் நிச்சயமாக ஒரு பிளாஷ்பேக் இருக்கும் தானே.. இந்த படமும் அதற்கு விதிவிலக்கு இல்ல

ஆனா ஃப்ளாஷ்பேக்கில் இன்னும் சுவாரஸ்யம் கூட்டி இருந்தால் பேய் படத்திற்கு பெரும் மதிப்பெண் கிடைத்திருக்கும்.

அடுத்து என்ன காட்சி நடக்கும் என நம்மால் முன்பு யூ கிக்க முடிவதால் பெரிதான சுவாரசியம் இல்லை.. ஆனால் ஒரு வித்தியாசம்.. பொதுவாக பேய் படங்களில் ஒன்று ஹீரோ பேயாக இருப்பார் அல்லது ஹீரோயின் பேயாக இருப்பார்.. இந்த படத்தில் இருவரையும் பேயாட்டம் ஆடி இருப்பது வித்தியாசமான ஒன்றுதான்.

வழக்கமான காதல்.. வழக்கமான பேய் பட வரிசையில் இந்த பார்க் இணையும்..!

Thaman Swetha starring Park review

மின்மினி பட விமர்சனம் 3/5.. இதயத் துடிப்பு

மின்மினி பட விமர்சனம் 3/5.. இதயத் துடிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மின்மினி பட விமர்சனம் 3/5.. இதயத் துடிப்பு

ஸ்டோரி….

பிரவீன் கிஷோர் மற்றும் கௌரவ் காளை ஆகிய இருவரும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள்.. பள்ளியில் முதல் மாணவனாக இருந்தாலும் மற்ற மாணவர்களை கிண்டல் செய்யும் சேட்டை சுபாவம் உள்ளவர் கௌரவ்..

அந்தப் பள்ளியில் புதிதாக சேர்ந்த பிரவீனை அடிக்கடி வம்புக்கு இழுக்கிறார்.. இவர்கள் அதே பள்ளி விடுதியில் தங்கி படிக்கின்றனர்..

ஒருநாள் மாணவர்கள் சுற்றுலா சென்று கொண்டிருக்கும்போது திடீரென விபத்து நடக்கிறது.. அப்போது பிரவீனை தன் உயிரைக் கொடுத்து காப்பாற்றுகிறார் கவுரவ்.. அப்போது நன்றி கூட சொல்ல முடியாமல் தவிக்கிறார் பிரவீன்..

தன் உயிரை காப்பாற்றி மரணம் அடைந்த கௌரவின் ஆசையை நிறைவேற்ற முயல்கிறான்.. அவனின் ஆசைப்படி ஒருநாள் இமயமலை சிகரத்திற்கு தனி ஆளாக பைக்கில் பயணம் செய்ய வேண்டும் என முடிவெடுக்கிறார்..

இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம்.. விபத்தில் மூளைச்சாவு அடைந்த கௌவ்வின் இதயம் எஸ்தருக்கு பொருத்தப்படுகிறது.. எனவே எஸ்தருக்கும் ஒரு ஆசை வருகிறது..

கௌரவ் படித்த பள்ளிக்கூடத்தில் படித்து அவனின் நிறைவேறாத ஆசையை தானும் நிறைவேற்ற வேண்டும் என எண்ணுகிறார்.. அப்போதுதான் பிரவீன் எண்ணம் இவருக்கு தெரிய வருகிறது.. அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்….

த்ருஷ்யம் படத்தில் மோகன்லாலின் 2வது மகளாகவும் பாபநாசம் படத்தில் கமலின் இரண்டாவது மகளாகவும் நடித்த எஸ்தர் அணில் கதையின் நாயகியாக நடித்துள்ளார்..

எஸ்தர் அணில், பிரவீன் கிஷோர் மற்றும் கவுரவ் காளை ஆகிய மூவரின் நடிப்பும் சூப்பர்… பள்ளியில் சின்ன சண்டை அவர்களுக்குள் உள்ள நட்பு மோதல் என அனைத்தையும் உணர்வுகளில் காட்டி நல்லதொரு நடிப்பை கொடுத்திருக்கின்றனர்..

பாரி முகிலன் கேரக்டரில் நடித்த கௌரவ் சூப்பர்.. இவர் மூளைச்சாவு அடைந்து ஆறு பேருக்கு வாழ்வு கொடுப்பது ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கேரக்டர் ஆகும்..

சபரியாக நடித்திருக்கும் பிரவீன் சாந்தமான மாணவனாக வருகிறார்.. இமயமலையில் பைக் பயணம் செய்யும் மனிதநேய நபராகவும் ஜொலிக்கிறார்.. ஆனால் நிறைய காட்சிகளில் இவரது முகபாவனையில் போதுமான மெச்சூரிட்டி இல்லை..

பள்ளியில் சின்ன பெண்ணாக எஸ்தர் இமயமலையில் பயணிக்கும் மோட்டார் ரைடராக பயணிப்பது வேற லெவல்.. நம் வீட்டுப் பெண்கள் ஸ்கூட்டியை ஓட்டவே கஷ்டப்படும் போது ஒரு பெரிய புல்லட்டை இமயமலையில் ஓட்டியிருப்பது ஆச்சரியமான ஒன்றாகும்..

டெக்னீசியன்ஸ்…

படத்தின் மிகப்பெரிய பலமே ஒளிப்பதிவு தான்.. மனோஜ் பரமஹம்சா கேரியரில் ஒளிப்பதிவில் இந்த படம் அவருக்கு மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்று தரும்..

நிலச்சரிவு முதல் அங்குள்ள மக்களின் வாழ்வியலை அழகாக கண்முன் படம் பிடித்திருக்கிறார்.. அதுபோல இமயமலைக்கு செல்ல வேண்டும் என ஒரு தூண்டுதலையும் தன்னுடைய ஒளிப்பதிவில் ஏற்படுத்தி இருக்கிறார்.

இடைவேளைக்கு முன்பு வரை பள்ளி கதை இரண்டாம் பாதியில் இமயமலையில் பைக் பயணம் என இரண்டு அனுபவங்களை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.. ஒரு பள்ளி என்றால் குறைந்தபட்சம் 100 மாணவர்களை காட்ட வேண்டும். ஆனால் 20 மாணவர்களை மட்டுமே காட்டி படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் அது ஏன்?

எட்டு வருடம் காத்திருந்தவர் இரண்டு நபர்களை மட்டுமே நடிக்க வைத்து இரண்டாம் பாதி முழுவதையும் ஓட்டி இருக்கிறார் அது ஏனோ?

15 வயது சிறுவர் சிறுமியரை நடிக்க வைத்து அவர்கள் வளரும் வரை 8 ஆண்டுகள் காத்திருந்து அவர்களை மீண்டும் அதே கேரக்டரில் நடிக்க வைத்து ஒரு வித்தியாசமான படைப்பை கொடுத்திருக்கிறார் ஹலிதா ஷமீம்.

பூவரசன் பீபீ, சில்லு கருப்பட்டி, ஏலே போன்ற படங்களை இயக்கியவர் இவர்..

பள்ளிப்பருவத்தில் நட்பு வளர்ந்த பின் அதே பள்ளி நினைவுகளுடன் காதல் என ஒரு கவித்துவமான படைப்பை கொடுக்க முயற்சித்து இருக்கிறார் இயக்குனர்..

இந்தப் பெண் இயக்குனருக்கு பக்க பலமாக இருந்து ஒரு பெண்ணாக அவரின் உணர்வுகளைப் புரிந்து இசை பணியை நேர்த்தியாக செய்து இருக்கிறார் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரகுமான்.. பாடல்கள் கவனம் பெறுகின்றன.. பின்னணி இசையில் ரகுமான் போல அல்லாமல் இளையராஜா போல மெல்லிய இசையை கொடுத்திருப்பது சிறப்பு..

8 years wait Minmini review

மழை பிடிக்காத மனிதன் விமர்சனம்.. 3.5/5.. கவிதை கலந்த ஆக்சன்

மழை பிடிக்காத மனிதன் விமர்சனம்.. 3.5/5.. கவிதை கலந்த ஆக்சன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மழை பிடிக்காத மனிதன் விமர்சனம்.. 3.5/5.. கவிதை கலந்த ஆக்சன்

ஸ்டோரி…

ஒரு அடாத மழையினால் தன் காதல் மனைவி இழக்கிறார் விஜய் ஆண்டனி.. அன்று முதல் மழையை வெறுக்க தொடங்கி விடுகிறார்.. அதுதான் மழை பிடிக்காத மனிதன்.

விரக்தியில் இருக்கும் விஜய் ஆண்டனியை மாற்றத்திற்காக அந்தமான் கொண்டு செல்கிறார் அவரது நண்பர் சரத்குமார்.. அதேசமயம் நடந்த சம்பவத்தில் விஜய் ஆண்டனி இறந்து விட்டார் என பொய் தகவல் பரப்பி நம்ப வைக்கிறார்.. அப்படி அவர் சொல்ல என்ன காரணம் என்பது கிளைமாக்ஸ் இல் தெரியும்.

அந்தமானுக்கு சென்ற விஜய் ஆண்டனி அங்கு ஒரு பிரச்சனையில் தன் நண்பனுக்காகவும் தன் காதலிக்காகவும் களம் இறங்குகிறார்.. அடுத்தது நடந்தது என்பதே மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

நாய் மீது பாசம்.. காதலி மீது நேசம் என ஸ்கோர் செய்திருக்கிறார் விஜய் ஆண்டனி.. அவரது ஹேர் ஸ்டைல் ரசிக்க வைக்கிறது.

ரோமியோ படத்தில் ரொமான்டிக் ஹீரோவாக மாறிய விஜய் ஆண்டனி தற்போது மீண்டும் சீரியஸ் கேரக்டராக செய்ய ஆரம்பித்துவிட்டாரா? ஆனால் இந்த படத்தின் கேரக்டருக்கு அது ஒத்துப் போவதால் நாம் ஏற்றுக் கொள்ளலாம்.

மேகா ஆகாஷ் & அவரின் சிஸ்டர் கேரக்டர் கச்சிதம்..

மேகா ஆகாஷ், முரளி ஷர்மா மற்றும் இயக்குனர் ரமணாவின் நடிப்பு கவனிக்க வைக்கிறது.. விஜய் ஆண்டனி சீரியல் டைப் எனவே நீங்களும் சீரியஸாக டைப் ஆகிருங்கள் என மேகா ஆகாஷ் இருக்கு அட்வைஸ் சொன்னாரா விஜய் மில்டன் தெரியவில்லை.. நிறுத்தி நிதானமாகவே எல்லா சீன்களிலும் பேசுகிறார்

வில்லனாக வரும் ‘டாலி’ தனஞ்சய்வின் கேரக்டர் மிரட்டல்… இவருக்கான பில்டப்பும் இவருக்கான பின்னணி இசையும் கவனிக்க வைக்கிறது.. நீ டாலி ஆள்னு சொல்லிட்ட.. ஆனா உன்ன போலீஸ அடிச்சுட்டா அப்புறம் எனக்கு எப்படிடா மரியாதை..? இப்ப நீ போலீஸ் அடிடா என மிரட்டும் காட்சி தெறி லெவல்..

விஜய் ஆண்டனி நண்பனாக வரும் இளம் ஹீரோ பிரித்வி துறுதுறு.. சில இடங்களில் ஓவர் ஆக்டிங்கை குறைத்து இருக்கலாம்..

சரத்குமார், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோரின் கேரக்டர்கள் வீணடிக்கப்பட்டு இருக்கிறது.. இறுதியாக கேப்டன் விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக படத்தை முடித்து இருப்பது கேப்டன் ரசிகர்களை மகிழ்விக்கும்..

டெக்னீசியன்ஸ்…

படத்தில் நிறைய இடங்களில் தீராமழை.. தீயவன் என வகை வகையாகப் பிரித்து காட்சிகளை விளக்கி இருப்பது செம.. காட்சிகளை கவிதை நயமாக படமாக்கி விருந்து படைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். இவரே படத்தின் இயக்குனர் என்பதால் காட்சிகளை ரசிக்கத்தக்க வகையில் தந்திருப்பது கூடுதல் பிளஸ் பாயிண்ட்..

இசையமைப்பாளர் ராயின் இசையமைப்பில் ‘தீரா மழை’ , இசையமைப்பாளர் ஹரி டபுசியா இசையமைத்த ‘தேடியே போறேன்’ ஆகிய பாடல்கள் கவனம் பெறுகின்றன. விஜய் ஆண்டனி பாடிய பாடல் ரசிக்க வைக்கிறது..

ஆக்சன் காட்சிகளில் அனல் தெறிக்கிறது.. சரண்யா நடத்தும் உணவகத்தில் நடக்கும் அந்த சண்டை காட்சி வேற லெவல் ரகம்..

பெரும்பாலான காட்சிகளை அந்தமானில் படமாக்கி இருக்கின்றனர்.. அடடா அந்தமான் இவ்ளோ அழகா? ஒரு ட்ரிப் போயிட்டு வரலாம் என ஏங்க வைக்கிறது..

மழையில் நனையும் நாய்க்குட்டி முதல் கவிதையாய் பேசும் நாயகி மேகா ஆகாஷ் வரை அனைத்தும் அழகு..

கெட்டவனை அழிப்பதை விட கெட்டதை அழித்தால் நலம் பெறலாம் என்ற நல்ல நோக்கத்துடன் படத்தை முடித்து இருப்பது சிறப்பு.. வில்லனுக்கு விஜய் ஆண்டனி சொல்லும் அட்வைஸ் நாயகனின் பெருந்தன்மையை காட்டும் விதம்..

கூடுதல் தகவல்…

படத்தின் ஆரம்பத்தில் வரும் ஒரு நிமிடக் காட்சி தனக்கே தெரியாமல் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், படத்தின் நாயகன் யார்? அவன் ரவுடியா? போலீஸா? அவனுடன் வரும் சரத்குமார் யார்? அவனுக்கு ஏன் மழை பிடிக்காது என ட்விஸ்ட்டுகளை வைத்து படம் பண்ணியிருந்தேன்.

ஆனால், ஆரம்பத்தில் வரும் ஒரு நிமிடக் காட்சியி நாயகன் யார் என்பதை ரிவீல் செய்து விட்டால் அதன் பின்னர், படத்தை எப்படி பார்க்க முடியும்” எனக் குமுறியுள்ளார் படத்தின் இயக்குனர் விஜய் மில்டன்.

ஒரு படம் சென்சார் செய்யப்பட்ட பின் அதற்கான காட்சிகளை நீக்கவோ சேர்க்க யாருக்கும் உரிமை இல்லாதபோது அதனை செய்தது யார் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது..??!!

Mazhai Pidikadha Manidhan movie review

நண்பன் ஒருவன் வந்த பிறகு பட விமர்சனம் 3.5/5.. நண்பன்னா நன்மையே

நண்பன் ஒருவன் வந்த பிறகு பட விமர்சனம் 3.5/5.. நண்பன்னா நன்மையே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நண்பன் ஒருவன் வந்த பிறகு பட விமர்சனம் 3.5/5.. நண்பன்னா நன்மையே

ஸ்டோரி…

தன் சிறு வயது முதலே ஆனந்தம் காலனி என்ற ஒரு காலனியில் வளர்ந்து வருகிறாr நாயகன் ஆனந்த்.. அந்தக் காலணியில் உள்ள நண்பர்களும் இவர் வகுப்பிலேயே படிப்பதால் இவர்களுக்குள் நெருக்கம் அதிகமாகிறது.

மேலும் கல்லூரியில் அனைவரும் ஒன்றாக ஒரே வகுப்பில் படிக்கின்றனர்.. இதனால் இவர்களின் நட்பில் கூடுதல் நெருக்கம்..

இவர்கள் காலனியில் இவர்கள் வகுப்பிலேயே இணைகிறார் நாயகி பவானி ஸ்ரீ.. நாயகனுக்கும் நாயகிக்கும் காதல் மலர்கிறது..

கல்லூரி முடித்த பின் இவர்கள் வேலை தேடும் சமயத்தில் நாம் அனைவரும் இணைந்து ஈவன்ட் மேனேஜ்மென்ட் செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம் என திட்டமிடுகின்றனர்.. அதன்படி NOVP (நண்பன் ஒருவன் வந்த பிறகு) என்ற பெயரில் ஒரு நிறுவனத்தையும் ஆரம்பிக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் போதிய வருமானம் இல்லாததால் ஒவ்வொருவரும் வேறு வேலை தேடலாம் என குடும்ப சூழ்நிலை காரணமாக முடிவெடுக்கின்றனர்.

இந்தக் கட்டத்தில் நாயகனின் காதலி பவானியும் வீட்டில் வரன் பார்க்கிறார்கள் என்ன செய்வது என்று குழம்பி நிற்கிறார்.

நண்பர்களும் காதலியும் பிரிந்து போன சோகத்தில் இருக்கும் நாயகன் ஆனந்த் என்ன செய்தார்? நண்பர்கள் ஒன்றிணைந்தியார்களா? காதலியை கரம்பிடித்தாரா? என்பதெல்லாம் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

இயக்குனர் அனந்த் ராம் இயக்கத்தில் பவானி ஸ்ரீ, இர்பான், வெங்கட் பிரபு, KPY பாலா, இளங்கோ குமரவேல், ஆர்.ஜே. அனந்தி, ஆர்.ஜே. விஜய், ஐஸ்வர்யா, மதன் கௌரி, உள்ளிட்டோர் நடித்துள்ளனர்..

முதல் படத்திலேயே கதையின் நாயகனாகவும் இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார் அனந்த் ராம்.

இவரே நாயகன் இவரே இயக்குனர் என்பதால் தனக்கான முக்கியத்துவத்தை ஒவ்வொரு காட்சியிலும் ஏற்படுத்தி காட்சிகள் அமைத்திருக்கிறார்.. அழுகின்ற காட்சிகளில் கூடுதல் மெனக்கெட்டு நடித்திருக்கலாம்.. அதுபோல ரொமான்ஸ் போதவில்லை..

விடுதலை படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்த பவானி ஸ்ரீ தான் இப்பட நாயகி.. இவரது அறிமுக காட்சியில் தாஜ்மஹால் உள்ளே இருந்து வருவது போல காட்சி அழகு.. அதுபோல மாடர்ன் உடையிலும் சேலையிலும் கவர்கிறார்.

இந்த படத்தை நடிகை ஐஸ்வர்யா தயாரித்து மாயா என்ற ஆசிரியராகவும் நடித்திருக்கிறார்..

மாயா டீச்சராக வரும் ஐஸ்வர்யா அழகிலும் நடிப்பிலும் கவருகிறார்.. இவருக்கும் ஒரு ஜோடி வைத்திருக்கலாம்.. இது போல ஒரு ஆசிரியை இருந்தால் எந்த மாணவனும் கிளாசுக்கு ஆப்சென்ட் ஆக மாட்டார்கள்..

தனக்குத் தெரிந்த மக்களுக்குத் தெரிந்த youtube பிரபலங்கள் பலரை நடிக்க வைத்திருக்கிறார் டைரக்டர்.. youtube தகுதி மட்டும் இருந்தால் போதுமா என்ன.?

அஜித் ரசிகராக வரும் அழகர் வினோத் கெத்து.. இவரது முடிவும் உருக வைக்கிறது

டெக்னீசியன்ஸ் …

தமிழ் செல்வனின் ஒளிப்பதிவு, ஃபென்னி ஆலிவரின் எடிட்டிங் ஆகியவை நம்மை கதையுடன் ஒன்ற வைக்கிறது..

நண்பர்கள் இணைந்தாலே ஆனந்தத்திற்கு அளவே இருக்காது.. அதுபோல காட்சிகளில் விறுவிறுப்பும் நிறைந்திருக்கிறது.. அதற்கு ஏற்ப இசையை கொடுத்து இருக்கிறார்
ஏ.ஹெச்.ஹாசிப்.. இவரின் இசையில் தனுஷ், ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பாடியுள்ளனர்.

வாழ்க்கையில் எந்த உயரத்திற்கு சென்றாலும் நண்பர்கள் ஈகோ இல்லாமல் பழகினால் மட்டுமே நட்பு நீடிக்கும் இல்லையேல் பிரேக் அப் தான்.. அது காதல் ஆனாலும் நட்பு ஆனாலும் இந்த நிலைதான்..

நாம் செய்ய நினைத்ததை விடாமல் செய்தால் மட்டுமே விஸ்வரூப வெற்றி பெற முடியும்.. அதுவும் நண்பர்களுடன் இணைந்து போராடினால் எளிதாகும் என்கிறார் இயக்குனர் அனந்த் ராம்..

வேலை காரணமாக குடும்ப சூழ்நிலை காரணமாக நண்பர்களை பிரிந்த ஒவ்வொருவருக்கும் இந்த படம் கனெக்ட் ஆகும்.. ஒரு படம் நம் வாழ்வியலுடன் கனெக்ட்டாகி விட்டால் அந்த படம் வெற்றி தான்..

இந்தப் படத்தை பல பாகங்களாக ரகுமான் வரிகளில் பாடல்களை பயன்படுத்தி இருப்பது இயக்குனரின் சாங் டச்..

அந்த வகையில் நண்பன் ஒருவன் வந்த பிறகு.. வெற்றி வரிசையில் சேரும்..!

Nanban Oruvan Vandha Piragu movie review

More Articles
Follows